சென்னை:
தீபாவளி நாளன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக
வாய்ப்புள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்
என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன்
செய்தியாளர்களுக்கு ஞாயிறன்று பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் நவம்பர் 6-ந்தேதி
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகக் கூடும்.
எனவே அன்று துவங்கி 8-ஆம் தேதி வரை வடகிழக்கு
பருவமழை தமிழகத்தில் வலுப்பெறும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் சென்னையில் அடுத்த
24 மணிநேரத்தில் மிதமான மழையும், சென்னையில் மிதமான
மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதனால் நவம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தென்மேற்கு
வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்க மீனவர்கள் செல்ல வேண்டாம்.
நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மன்னார் வளைகுடா,
குமரி கடல்பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல
வேண்டாம்.
பொதுவாக ஆழ்கடல் பகுதியில் இருக்கும் மீனவர்கள் 6-ஆம்
தேதிக்குள் கரைக்கு திரும்பும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
–
————————————
தினமணி
மறுமொழியொன்றை இடுங்கள்