ஆவாரம்பூ உடல்சூட்டைப் போக்க நல்ல மருந்து.
பூ முதல் வேர்வரை அனைத்துமே உடலுக்கு நன்மை
அளிக்கக்கூடியவை.
தேவையானவை:
ஆவாரம்பூ : ஒரு கைப்பிடி
தேங்காய்த்துருவல் : ஒரு கப்
காய்ந்த மிளகாய் : 2
புளி, உப்பு : சிறிது
பூண்டு : 2 பல்
தாளிக்க:
எண்ணெய் : ஒரு டீஸ்பூன்
கடுகு : கால் டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு : கால் டீஸ்பூன்
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய்விட்டு சூடாக்கி,
அதில் தேங்காய்த் துருவல், காய்ந்த மிளகாய், பூண்டு,
ஆவாரம்பூ, புளி, உப்பு என ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு,
கருகிவிடாமல் வதக்கவும்.
ஆறிய பிறகு, மிக்ஸியில் நைஸாக அரைத்தெடுக்கவும்.
தாளிக்கும் கரண்டியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கி
அதில் கடுகு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து,
சட்னியில் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு:
ஃப்ரெஷ் ஆவாரம்பூ கிடைக்கவில்லை என்றால்,
நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிற உலரவைத்த
பூவையும் பயன்படுத்தலாம்.
–
பலன்கள்:
ஆவாரம்பூ உடல் சூடு தணிக்கும். நாவறட்சி நீக்கும்;
கண் எரிச்சல் தீர்க்கும். மூலநோய் குணமாக உதவும்.
சருமப் பொலிவுக்கு உதவும். உடலை பலப்படுத்தும்.
சர்க்கரைநோயின் தாக்கத்தைக் குறைக்கும்.
–
—————————————-
நன்றி
https://senthilvayal.com/2018/10/23/
மறுமொழியொன்றை இடுங்கள்