அப்பாவின் மூக்குக் கண்ணாடி
அவர் இல்லாதபோதும் சொல்கிறது
படிப்பின் தாகம்
–
————————-
–
சுவற்றில் ஆணிகள்
சொல்லாமல் சொல்கிறது
அடியின் வலி
–
———————-
–
விழுந்து கிடக்கிறான்
உழைக்கும் தொழிலாளி
சனிக்கிழமை இரவு
–
———————
–
மரம் இருந்த சுவடு
காலில் இடறும்
கல்லறைச் சிலுவை
–
——————-
–
சுமை தாங்கிக்கல்லில்
இளைப்பாறும் காகங்கள்
உடலே சுமையாக
–
———————
–
அருணாசல சிவா
படிப்பின் தாகம்
ஒக்ரோபர் 14, 2018 இல் 10:02 முப (ஹைகூ கவிதை)
மறுமொழியொன்றை இடுங்கள்