
–
கொட்டிய மழையில்
தேங்கிக் கிடக்கிறது
நம் சந்திப்பின் முத்தங்கள்
–
———————-
மழை மூட்டம் கண்டதும்
மனதெங்கும்
உன் நினைவுத்தட்டான்கள்
–
———————-
சிலிர்க்கும் சாரலில்
நனைதல் அற்புதம்
கூந்தலைத் துவட்டு
–
——————–
மழையைக் கொட்டி
ஊரெல்லாம் கழுவி
பூக்களை உதிர்த்து
தரையெல்லாம்
அலங்கரித்தாயிற்று
உன்னைத்தான்
காணவில்லை
–
———————
– சஷாங்கன்
குங்குமம்
படம் -இணையம்
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்