காதலைச் சொல்வதற்கு
சரியான இடம்
எதுவென்று வினவினான்.
கடற்கரை?
திருமண வீடு?
பூங்கா?
கல்லூரி வாசல்?
பேருந்து நிறுத்தம்?
பலரும் யோசனை சொன்னார்கள்.
காதலைச் சொல்வதற்கு
சரியான இடம்
மனதில்லையோ?
–
———————
சேயோன் யாழ்வேந்தன்
நன்றி- குங்குமம் – 2.9.16
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்