திரைப்படம்: அன்னமிட்ட கை
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
–
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
–
இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன்
உழைப்பாலே உண்ண வேண்டும்
–
இல்லாமை நீக்க வேண்டும் தொழில் ஆக்கம் வேண்டும் இங்கு
எல்லோரும் வாழ வேண்டும்
முன்னேற என்ன வேண்டும் நல் எண்ணம் வேண்டும் தன்
உழைப்பாலே உண்ண வேண்டும்
–
பாடுபட்ட கை அது பாட்டாளி கை
பாடுபட்ட கை அது பாட்டாளி கை
செய்யும் தொழிலை தெய்வமாக
நிலைநிறுத்தி உடல் வருத்தி
–
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
–
பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க
–
பஞ்சுக்குள் நூலை எடுத்து பட்டாடை தொடுத்து
தன் மானத்தைக் காத்திருக்க
மண்ணுக்குள் வெட்டி முடித்து பொன் கட்டி எடுத்து
நம் தேவைக்குச் சேர்த்திருக்க
–
வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை
வாழ வைக்கும் கை அது ஏழை மக்கள் கை
காட்டை மேட்டைத் தோட்டமாக்கி
நாட்டு மக்கள் வாட்டம் போக்கி
–
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
உன்னை என்னை உயர வைத்து உலகமெல்லாம் வாழவைத்து
அன்னமிட்ட கை நம்மை ஆக்கிவிட்ட கை
–
——————–
Advertisements
மறுமொழியொன்றை இடுங்கள்