வலி
நவம்பர் 6, 2008 இல் 5:02 பிற்பகல் (கவிதை)
Tags: Add new tag
ஹரிலால் காந்தி: எ லைஃப்
அக்டோபர் 23, 2008 இல் 12:54 பிற்பகல் (இலக்கியம்)
Tags: Add new tag, இலக்கியம்
ஹரிலால்
-சங்கர ராம சுப்ரம்ணியன் ஹரிலால் காந்தி எ லைஃப்
புத்தகம்: ஹரிலால் காந்தி: எ லைஃப்
ஆசிரியர்: சந்துலால் பாகுபய் தலால்
வெளியீடு: ஓர்யண்ட் லாங்மேன்
["ஹரிலால் காந்தி: எ லைஃப்" - எனும் நூல் காந்தியின் மூத்த மைந்தன் ஹரிலால் காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலாகும். குஜராத்தி மொழியிலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் த்ரைதீப் ஷ்ருத் என்பவர், இவர் அரசியல் விஞ்ஞானி மற்றும் கலாச்சார வரலாற்றியலாளர் ஆவார், நாராயண தேசாய் எழுதிய காந்தி வாழ்க்கை வரலாற்று நூல் 4 தொகுதிகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இவர் சபர்மதி ஆசிரமத்திலும் தொண்டாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.]
காந்தியின் மூத்த மைந்தன் ஹரிலால் இளம் வயதிலிருந்தே தனது தந்தையின் வாழ்க்கைத் தத்துவம் மற்றும் மதிப்பீடுகளில் அதிருப்தி கொண்டிருந்தார். காந்தி தனது மதிப்பீடுகளுக்காக ஹரிலாலையும் சகோதரர்களையும் நவீன கல்வியை கற்க விடாமல் விலக்கி வைத்தார் என நம்பினார். இப்படிச் செய்வதன் மூலம் தங்கள் எதிர்காலத்தைப் பாழாக்கிய தவறைச் செய்தார் என்றும் ஹரிலால் நம்பினார்.
அதனால் ஹரிலால் தனது இளமையிலிருந்தே காந்தியை பழிவாங்கத் தொடங்கித் தன் விருப்பப்படியான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துச் சென்றார்.
ஹரிலால் மேற்கொண்ட பாதை அவரை சீரழித்தது, அவரைக் குறைப்படுத்தியது. காந்தி தென் ஆப்பிரிக்காவில் இருந்தபோது, ஹரிலால், காந்தியுடன் சேர்ந்து பல அரசியல் போராட்டங்களில் ஈடுபட்டுச் சிறைக்கும் சென்றுள்ளார். இதெல்லாவற்றையும் மீறித் தந்தையைப் புறக்கணிப்பதில் மூர்க்கமாக அவரது இச்சை செயல்பட்டது. தனது தோல்விகள் அனைத்திற்கும் காரணம் தந்தைதான் என்னும் காரணம் அவர் வாழ்க்கை முழுவதும் துரத்தியது. அவரும் தந்தையை எதிர்த்து ஓடினார் தோல்வியின் வெவ்வேறு சாத்திய மூலைகளுக்கு.
ஹரிலால் காந்தியின் உறுதிப்பாட்டை நம்ப இயலவில்லை. ஒருவர் தன் குழந்தைகளை விட மற்ற குழந்தைகளை எப்படி நேசிக்க முடியும்? காந்திக்கு முஸ்லிம்கள் மேல் இருந்த நேசத்தை நாதுராம் கோட்சே எப்படிப் புரிந்து கொள்ள முடியவில்லையோ, அதுபோல ஒரு வகையில் நாம் ஹரிலாலையும் கோட்சேயையும் ஒப்பிடாமல் இருக்க முடியாது.
தந்தைக்கும் மகனுக்கும் இரு அடிப்படைகளின் மோதல்தான் தொடர்ந்து நிகழ்ந்திருக்க வேண்டும்.
ஹரிலால் மதுவிடம் தன்னை ஒப்படைத்துக் கொண்டார். காந்தியோ ராம நாமத்துக்கு. ஹரிலால் சபலங்களுக்கு உட்பட்டார். தந்தையோ பிரம்மச்சரியத்தை வென்றார். மோட்சம் கூட சாத்தியமாகியிருக்கலாம்.
நாம் கவனமாகப் பார்த்தால் இருவருக்கும் நிறைய ஒப்புமைகள் இருக்கும்.
ஹரிலாலின் கலகத்தன்மை காந்தியின் வைராக்கியத்தை உரமேற்றியிருக்கலாம். தம்மால் எல்லாவற்றையும் கட்டுப்படுத்த முடியாது என்ற உணர்விலிருந்து இது எழுந்திருக்கக் கூடும்.
ஹரிலால் இத்தனை முரண்களுக்கு இடையிலும் தந்தை மீதும், தாயின் மீதும், அளப்பரிய பிரியத்தைக் காண்பித்துள்ளார்.
காந்தியின் வாழ்க்கையில் ஹரிலால் என்பவன் எதற்குள்ளும் அடங்க மறுக்கும் தன் சுமை துறந்த ஒரு விடுதலைத் தேவன்.
அந்த வகையில் ஹரிலால் மேற்கொண்ட சுய அழிவு பரிவுடன் பரிசீலிக்கப்பட வேண்டியது.
ஹரிலால் குறித்த இப்புத்தகத்தை படிக்கும்போது காந்தி, ஹரிலால் என்ற இரு ஆளுமைகளுமே நம் மதிப்பில் உயர்வார்கள்.
காந்தி இந்தியாவை தனது ஆசிரமமாகவே பார்த்துள்ளார். இந்தியாவைத் தனது கருப்பையாகவே அவர் உருவகம் செய்திருக்கக் கூடும
தந்தையின் பெரு நிழலின் கருப்பை விழுங்கித் தீமையும் துரதிர்ஷ்டமுமான பாதையில் சென்ற ஹரிலாலுக்கு வேறு தேர்வு இருந்திருக்க முடியாது. ஏனெனில் நன்மையின் பெரு வெளிச்சமாய்த் தந்தை இருக்கும்போது சாகச உணர்வுள்ள ஒரு ஹரிலாலின் இருத்தல் வேட்கை இப்பாதையிலேயே அவரைச் செலுத்தியிருக்கும்.
இப்புத்தகத்தை படிக்கையில் காந்தி நூற்ற தர்ம ராட்டையின் நூலில் கஸ்தூரிபாயின் குருதியும், ஹரிலாலின் குருதியும் படிந்திருக்கின்றன என்ற எண்ணத்தை அகற்றமுடியவில்லை.
ஹரிலால் தன் மனைவிக்கு எழுதிய கடிதங்கள், துரதிர்ஷ்டம் துரத்த இளைப்பாற இடமில்லாமல் அலைந்து கொண்டிருப்பவனின் காதலும், விரகமும் தகிக்க எழுதப்பட்டவை. ஓர் அளவில் புதுமைப்பித்தனின் ‘கண்மணி கமலாவுக்கு’ – கடிதங்களை ஞாபகமூட்டுபவை. புதுமைப் பித்தனும் தந்தையை மறுதலித்து இருட்டின் புதிர்ப்பாட்டையில் பயணித்தவர்தானே.
ஹரிலாலின் முடிவு காந்தி தன் மறதியில் ஒரு இருள் தருணத்தில் வேண்டிக் கொண்ட அந்தரங்கப் பிரார்த்தனையால் கூட விளைந்திருக்கலாம். காந்தியை பறிகொடுத்த துக்கத்தில் தவிக்கும் அன்னையாகக் கற்பனைச் செய்ய ஏதுள்ள கல்பற்றா நாராயணனின் கவிதை இது:
மகன் இறந்த ஓர் அன்னை
யுதிஷ்ட்ரனை அணுகி
ஏனிப்படி எனக்கு நிகழ்ந்தது என்றாள்.
பதிலுக்கு யுதிஷ்ட்ரன் சொன்னான்
உற்றவரின் ஆசையின்படி அன்றி
மண்ணில் ஒரு குழந்தையும் இறப்பதில்லை
எந்தக் கொடுந்துயரும்
நிராகரிக்க முடியாத விண்ணப்பத்தின் விளைவே
நினைக்காதது நடக்குமளவுக்கு
பெரிதல்ல இவ்வுலகம்
நினைத்துப் பார்
எப்போதும் நீயும் உள்ளெரிந்து பிரார்த்தனை செய்திருப்பாய்.
ஆனால் அது…
அவள் நினைவு கூர்ந்து சொன்னாள்
அப்படி நிகழவேண்டும் என்று எண்ணி அல்ல
அடுத்த கணமே என்னை நானே
கிழித்து ரணமாக்கியிருக்கிறேன்
தெய்வமே நான் சொன்னதென்ன என்று
தீயிலிருந்து விரலெடுப்பது போல
அச்சொல்லிலிருந்து என்னை
இழுத்துக் கொண்டிருக்கிறேன்
பெற்ற தாயின் சொல்லல்லவா
பலிக்காதென்று சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன்.
நான் எப்போதும் வேண்டிக்கொண்டிருந்த எதுவும் கேட்கப்படாமல்
இது மட்டுமே கேட்கப்பட்டது என்கிறாயா?
எத்தனை நெருக்கமானவர்களிடமும் கேட்க வழியில்லாத
பிற எவரிடமும் வேண்டிக்கொள்ள முடியாத
கலப்பற்ற அவசரமான
ஒரு வேண்டுகோள்
அதுவும் ஒரு பெற்ற தாயின் விண்ணப்பம்
எப்படிக் கேட்கப்படாது போகும்?
அந்த அன்னை சொல்லாததனால் போலும்
இதுவரை வெளியே தெரியவில்லை இக்கதை.
(தமிழில் : ஜெயமோகன்)
நன்றி: மணல் புத்தகம் 2 சிற்றிதழ்)
tamil.webdunia.com
ஏரிக்கர பூங்காத்தே
அக்டோபர் 23, 2008 இல் 6:15 மு.பகல் (சினிமா பாடல்)
Tags: Add new tag, சினிமா பாடல்
ஏரிக்கர பூங்காத்தே
நீ போறவழி தென்கிழக்கோ
அட தென்கிழக்கு வாசமல்லி
என்ன தேடிவர தூது சொல்லு…
பாதமலர் நோகுமுன்ன நடக்கும் பாத வழி பூவிரிச்ச மயில…
பாதமலர் நோகுமுன்ன நடக்கும் பாத வழி பூவிரிச்ச மயில…
ஓடம்போலாடுதே மனசு கூடித்தான் போனதே வயசு…
காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது
அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது…
ஏரிக்கர பூங்காத்தே..
நீ போறவழி தென்கிழக்கோ
தென்கிழக்கு வாசமல்லி
என்ன தேடிவர தூது சொல்லு…
ஏரிக்கர பூங்காத்தே…..
ஓடிச்செல்லும் வான்மேகம்
நெலவ மூடிக்கொள்ளப் பார்க்குதடி ….அடியே
ஓடிச்செல்லும் வான்மேகம்
நெலவ மூடிக்கொள்ளப் பார்க்குதடி…அடியே
ஜாமத்தில் பாடுறேன் தனியா
ராகத்தில் சேரனும் தொணையா…
நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன்
அந்த ராசாங்கம் வரும் வரை
ரோசாவே காத்திரு…
ஏரிக்கர பூங்காத்தே
நீ போறவழி தென்கிழக்கோ…
ஏரிக்கர பூங்காத்தே….
************
சினிமா பாடல்
ஸென் கதைகள்.
அக்டோபர் 23, 2008 இல் 5:24 மு.பகல் (ஆன்மீகம்)
Tags: Add new tag, ஆன்மீகம்
Daily A Zen Story – தினம் ஒரு ஸென் கதை கோமாளித்தனமான கதைகள் பல. மண்டையை குடைய வைக்கும் புதிர்க் கோஆன் கதைகள் சில. சா’ன் (சைனா), ஸென்(ஜப்பான்), ஸாசன் (ஜப்பான்), ஜென் (தமிழ் நாடு) எனப் பல பெயர் ஆனாலும் தியானம் என்ற சமஸ்கிரித வார்த்தையின் மறுவிய பெயர்களே இவை.
**********************.
பதிலா உயிரா? –
ஒரு நாள் எல்லாராலும் உயர்வாக கொண்டாடப் பட்ட சா’ன் ஆசிரியர் ஷிஷைன் தன்னுடைய சீடர்களை சோதித்து பார்ப்பது என முடிவெடுத்து, “உண்மை வழியினை அடையத் தேடும் போது, ஒரு உயரமான மரத்தின் கிளையினைப் பல்லால் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிற மனிதனுக்கு சமமாவோம்” என்றவர், “கீழே சவகாசமாக அமர்ந்திருக்கும் மற்றொரு மனிதன், மேலேத் தொங்கிக் கொண்டிருக்கிறவனைப் பார்த்து, ‘மேற்கிலிருந்து போதிதர்மா சைனாவிற்கு வந்ததன் காரணம் என்ன?’ என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அப்பொழுது மேலேயிருப்பவன் பதில் சொல்லவில்லையென்றால் முட்டாளாக கருதப் படுவான். ஆனால் வாயைத் திறந்தாலோ எமனுக்கு இரையாகிவிடுவான். சொல்லுங்கள், இதிலிருந்து தப்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்.
அங்கிருந்த சீடர்களில் ஒருவனது பெயர் ஹு டோ சாவோ, அவன் எழுந்து நின்று, “எங்களுக்கு அந்த மனிதன் உயரமான மரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் பற்றியக் கவலையில்லை. எங்களுக்குத் தேவையானதெல்லாம் யார் அவன், மரத்தின் மேலே ஏறுவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தான்?” என்று பதிலுக்கு ஆசிரியரைப் பார்த்துக் கேள்வி கேட்டான்.
அவன் கூறியதைக் கேட்ட ஷிஷைன் அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினார். சீடனின் பதிலில் திருப்தி அடைந்தவரானார்.
***********
நதியினைக் குடி –
ஒரு சமயம் பா’ன் யூன் என்ற துறவி, சா’ன் ஆசிரியர் ஷிடோவை முதன் முதலில் சந்தித்த போது, “எல்லா தர்மங்களின் துணையினையும் உதறித் தள்ளிய மனிதர்கள் எப்படிப் பட்ட மனிதர்களாக இருக்க முடியும்?” என்று கேட்டான். கேட்டவனின் வாயை அப்படியே தனது கைகளால் பொத்தினார் ஷிடோ. துறவியால் சா’ன் ஆசிரியரின் செய்கையை புரிந்து கொள்ள முடியவில்லை.
மதிப்புக்குரிய குரு மாசூவிடம் சென்று தன்னுடைய கேள்வியினைக் கேட்பதென முடிவெடுத்து, அதேக் கேள்வியைத் திருப்பிக் கேட்டான்.
“நீ ஷிஷியாங் ஆற்றின் தண்ணிரினை ஒரே மிடக்கில் குடித்துக் காட்டினால்தான், நான் உன்னுடையக் கேள்விக்கு பதில் அளிக்க முடியும்” என்ற பதிலே கிடைத்தது.
அதனைக் கேட்ட பா’ன் யூன் தன்னுடைய அறியாமை நீங்கி தன்னொளி பெற்றான்.
************
உருவ வழிபாடு
ஹுவாங்னியா என்ற ஸென் ஆசிரியர் யேன்குவாங்கினை சந்திப்பதற்காக சென்றார். யேன்குவாங்கி ஆசிரியராக இருந்த புத்த கோயிலிற்குள் நுழைந்தவர் அமைதியாக புத்தச் சிலையின் முன் தலை வணங்கி நின்றார். அந்த சமயத்தில் டா’ங் ராஜ வம்ச பரம்பரையைச் சார்ந்த ஷூவான்சூங் என்ற வாலிபன் புதிதாக சமய சேவையைப் பற்றி அறிவதற்காக அங்கு வந்திருந்தான்.
ஹுவாங்னியா செய்த செயல் அனைத்தையும் கவனித்த ஷூவான்சூங், “உண்மை வழியினை அடைய முயல்பவர்களுக்கு, புத்தாவினை தலை வணங்கத் தேவையில்லை, துறவறம் ஏற்க வேண்டியதில்லை (அ) யார் கூறிய போதனைகளையும் கடைபிடிக்கத் தேவையில்லை, அப்படியிருக்க ஆசிரியரே, எதற்காக தலை வணங்கி புத்தருடையச் சிலைக்கு மரியாதை செய்தீர்கள்” என்று கேட்டான்.
“நான் புத்தரினை வழிபடுவதில்லை. துறவியும் இல்லை. எந்த போதைனையையும் உடும்பென பிடித்துக் கொண்டும் இல்லை” என்று கொஞ்சம் கூட தாமதியாமல் பதில் அளித்த ஆசிரியர், “நான் என்னிலிருந்து விடுதலை பெறவே அவ்வாறு செய்கிறேன்” என்றார்.
கொஞ்சம் நேரம் ஆசிரியர் கூறியதை மனதில் நிறுத்தி யோசித்தவன், “உருவ வழிபாட்டினால் என்ன பயன் ஆசிரியரே?” என்று மீண்டும் தன் கேள்வியை எழுப்பினான்.
அவனுடையக் கன்னத்தில் “பளார்” என்று அறைந்தார் ஹுவாங்னியா.
வாலிபனானாலும் அரசனான ஷூவான்சூங் சீற்றத்துடன், “ஏன், நாகரிகமில்லாமல் மிருகத்தைப் போல் நடந்து கொள்கிறிர்கள்?” என்று கோபத்துடன் கேட்டான்.
“ஏன்” என்று வேகமாக திருப்பிக் கேட்டவர், அவனுடைய குற்றச்சாட்டுக்கு விரைவாய் பதிலளிக்கும் பொருட்டு, “உன்னால் யார் நாகரிகமானவர், நாகரிகமற்றவர் என்று என்னிடம் விவாதம் செய்யுமளவிற்கு தைரியம் இருக்கிறதா.. உனக்கு வாய் கொஞ்சாம் அதிகமாகவே நீள்கிறது” என்றார். அதனைக் கேட்ட ஷூவான்சூங் தன்னுடைய அடக்கமற்ற தன்மையை எண்ணி வருந்தினான்.
************
ஸென் கல்வி
ஒரு நாள் ஹோஃபுக்குவின் சீடர்களில் ஒருவனை வரவேற்ற ஜிஸோ, “உன்னுடைய ஆசிரியர் என்னக் கற்றுக் கொடுத்தார்?” என வினவினார். “என்னுடைய ஆசிரியர் எந்த தீயவைகளைப் பார்க்காமல் கண்களை மூடிக் கொள்ளச் சொன்னார்; தீயவைகளை கேட்காமல் காதை மூடிக் கொள்ளச் சொன்னார்; தீய எண்ணங்களை மனதினில் உருவாக்கமல் பார்த்துக் கொள்ளச் சொன்னர்” என்று சீடன் பதிலுரைத்தான்.
“நான் உன்னுடைய கண்களை மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன்” என்ற ஜிஸோ, “ஆனால் நீ எதையும் பார்க்க மாட்டாய். உன்னுடைய காதுகளை கைகளால் மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன், ஆனால் நீ எதையும் கேட்க மாட்டாய். உன்னுடைய மனதின் எண்ண அலைகளை நிறுத்தச் சொல்ல மாட்டேன்; ஆனால் நீ எந்த சிந்தனையையும் மனதில் ஏற்படுத்தாமல் இருப்பாய்” என்றார்.
***********
கற்பாலம்
இன்றைய கோஆன் மிகவும் புகழ் பெற்றது. இது சாவோ சாவ் என்ற நகரத்தில் வாழ்ந்த என்பது வயதான சவோ சாவிற்கும் (ஊரின் பெயரே ஸென் குருவின் பெயராகி விட்டது. இந்தியாவில் கூட ஊரின் பெயரே புகழ் பெற்றவர்களின் பெயர் ஆகிவிடுவதுண்டு. நாளடைவில் புகழ் பெற்றவர் ஊர் பெயராலேயே அழைக்கப் படுவது வழக்கம்.) அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவி ஒருவருக்கும் நடந்த உரையாடலாகும்.
குரு சாவோ சாவிடம் வந்த துறவி ஒருவர், “வெகு நாட்களுக்கு முன்பிருந்தே சாவோ சாவிலிருக்கும் புகழ் பெற்ற கற்பாலத்தினைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் இங்கு வந்த பின்பு நான் பார்ப்பது என்னவோ வெறும் சாதரண மரப்பாலம்தான்” என்றார்.
சவோ “மரப்பாலத்தினை மட்டும் தான் உங்களால் பார்க்க முடிகிறது; ஆனால் கற்பாலம் இருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லை” என்று பதிலுரைத்தார்.
துறவி, “கற்பாலமா என்ன?”
சவோ, “கழுதைகளையும் கடக்க வைக்கிறது, குதிரைகளையும் கடக்க வைக்கிறது”.
**************
கண்ணாடியான செங்கல்
சைனாவின் சூஷுவானில் பிறந்த சா’ன் ஆசிரியர் மாசூ தன்னுடைய சிறு வயதில் அனுபவமற்ற இளவயது துறவிகளுடன் புத்த விகாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பன்னிரண்டாம் வயதில் தன்னையும் துறவறத்தில் ஈடுபடுத்திக் கொண்டான்.
நான்யூவேஷான் மலையிலிருந்த பான் ஜோ சூ கோயிலின் மாண்புமிக்க தலைமைக் குருவாக இருந்தவர் ஹுவாய் ஜாங், அங்கு சா’னினை கற்பதற்காக வந்திருந்த மாசூவினைப் பார்த்தவுடன் தன்னொளி பெறுவதற்கு தகுதியானவனாக இருந்ததைக் கண்டார்.
ஹுவாய் ஜாங் மாசூவினைப் பார்த்து, “எதற்காக உட்கார்ந்த நிலையில் செய்யும் சா’ன் தியானத்தினைப் பயில வேண்டும் என்கிறாய்?” என்று கேட்டார்.
“புத்தாவாக மாறுவதற்கு” என்று பதில் வந்தது.
உடனே பக்கத்தில் இருந்த செங்கல்லினை எடுத்து தேய்க்கலானார்.
இளம் துறவியான மாசூ, “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.
“இந்த செங்கல்லினை கண்ணாடியாக மாற்றுவதற்காக வழவழப்பாக தேய்த்துக் கொண்டிருக்கிறேன்” என்றார்.
“செங்கல்லினை தேய்ப்பதால் மட்டுமே எப்படி கண்ணாடியாக மாற்ற முடியும்?” என்றான் மாசூ.
“நீ உட்கார்ந்த சா’ன் தியானத்தினை கற்பதால் மட்டுமே புத்தாவாக மாற முடியும் என்கிற போது நான் ஏன் செங்கல்லினை தேய்த்து கண்ணாடியாக மாற்ற முடியாது?” என்று கேட்டார் குரு ஹுவாய் ஜாங்.
கொஞ்சம் நேரம் குரு ஹுவாய் ஜாங் கூறியதை யோசித்துப் பார்த்த மாசூ, “ஆசிரியரே, என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள்” என்றான்.
“நீ ஓட்டிச் செல்லும் கட்டை வண்டி தீடிரென நகராமல் நின்று விட்டது என்று வைத்துக் கொள்வோம்” என்ற ஹுவாய் ஜாங், “அந்த சமயத்தில் நீ என்ன செய்வாய்?” என்று கேட்டவர், பின்பு தொடர்ந்து, “உன்னுடைய எருதினை ஓட்டிச் செல்வாயா அல்லது கட்டை வண்டியை ஓட்டிச் செல்வாயா?” என்ற கேள்வியினைத் தொடுத்தார்.
மாசூவினால் எந்த பதிலினையும் சொல்ல முடியவில்லை. மேலும் தொடர்ந்த குரு “நீ உட்கார்ந்த நிலையில் சா’ன் தியானத்தினைக் கற்க விரும்புகிறாயா அல்லது ‘உட்கார்ந்த புத்தா’வினையைக் கற்க விரும்புகிறாயா?. உனது விருப்பம் என்ன?” என்று கேட்டார். “நீ முதலில் கூறியதைக் கற்க விரும்பினால் அதனை உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ அல்லது தூங்கிக் கொண்டேக் கூட பயிற்சி செய்யலாம். நீ இரண்டாவதாக கூறியதைக் கற்க விரும்பினால் புத்தருக்கு என குறிப்பிட்ட தோற்றநிலை இல்லை. உண்மையில் புத்தருடைக் கோட்பாடுகள் சமயக் கொள்கைகள் அல்ல. அதனால் அவருடைக் கருத்துக்கள் தத்துவமும் அல்ல. சித்தாந்தமும் அல்ல. உண்மையான வழியினை அடைவதற்கு உட்கார்ந்த சா’ன் தியானத்தினைப் பின்பற்றுவது புத்தாவை படுகொலை செய்வதற்கு சமம். அதனால் உன்னால் என்றும் உணமை வழியினை அடைய முடியாது.” என்றார்.
குரு ஹுவாய் ஜாங் கூறியதைக் கேட்ட மாசூ தன்னுடைய உடலில் விசித்திரமான ஒளி புத்தத் தன்மையுடன் புகுவதைப் போல் உணர்ந்தான். மரியாதையுடன் கூறிய வணக்கத்தினைத் தெரிவித்து தன்னை அவருடைய சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டினான்.
***************
நிலவைச் சுட்டிக் காட்டு –
ஒரு பால் நிலா காயும் இரவு. சான் குரு ஃபாயாவும், அவரது இரண்டு சீடர்களான துறவிகளும் திறந்த வெளியில் மணல் பரப்பின் மீது உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நிலாவினைச் சுட்டிக் காட்டி பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் நடந்த சுவரசியமான உரையாடலே இன்றைய தினம் ஒரு ஸென் கதையின் கருவாகும்.
முதலாம் துறவி சா’ன் குரு ஃபாயானிடம் “குருவே, உங்களிடம் நான் ‘சுட்டு’ என்பதன் அர்த்தத்தைக் கேட்கவில்லை. ‘நிலா’ என்பதன் உண்மையான அர்த்தத்தினை எனக்கு விளக்கிக் கூறவேண்டும்” என்று கேட்டான்.
” ‘சுட்டு’ என்பதன் பொருளை நீ உணர்ந்து விட்டதாக தெரிகிறது. எனக்கு அதன் பொருளைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?” என்று கேட்டார் சா’ன் குரு.
அந்த சமயத்தில் இரண்டாம் துறவி, “குருவே, உங்களிடம் ‘நிலா’வின் அர்த்தத்தினை கேட்க விரும்பவில்லை. ‘சுட்டு’ என்பதன் உண்மைப் பொருளை விளக்க வேண்டும்” என்று கேட்டான்.
“நிலா” என்பதே பதிலாக கிடைத்தது.
“நான் உங்களை ‘சுட்டு’ என்பதன் பொருளைத் தான் கேட்டேன்” என்று கண்டனத்துடன் மறுதலித்துக் கூறியவன், “எதற்காக ‘நிலா’ என்று பதில் அளித்தீர்கள்?”
“ஏனேன்றால் ‘சுட்டு’ என்பதன் அர்த்தத்தினைத் தானே நீ கேட்டாய்” என்றார் குரு.
Source: Pointing at the moon by Alexander Holstein
************
——————————————————————————–
கதைகளை தொகுத்ததும், மொழிபெயர்ப்பும் – கங்கா
முகவரி: SI, New York, United States
Thanks:http://zendaily.blogspot.com/
23 முறை கேட்ட கேள்வி!
அக்டோபர் 23, 2008 இல் 5:06 மு.பகல் (சிறுகதை)
Tags: Add new tag, சிறுகதை
23 முறை கேட்ட கேள்வி!
வசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது! 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். மூதாட்டியான அவரது மனைவி அவருக்கருகில் அமர்ந்து தனது இடுங்கியக் கண்களால் திருமறையை ஓதிக் கொண்டிருக்கிறார். நன்கு படித்து, பெரிய பதவியில் இருக்கும் 45 வயதுடைய அவர்களின் மகனும் தனது லேப்-டாப்பில் ஏதோ வேலை செய்துக் கொண்டிருக்கிறார்.
திடீரென ஒரு காகம் முதியவரின் அருகிலிருந்த சன்னலில் வந்து அமர்ந்தது.
“என்ன இது?” என்று கேட்டார் முதியவர்.
லேப்-டாப்பிலிருந்து கண்களை விளக்கிய மகன் சொன்னார், “அது ஒரு காகம்”
சில நிமிடங்கள் கழிந்தன. அந்த முதியவர் மீண்டும் கேட்டார், “என்ன இது?”
“இப்பத்தானே சொன்னேன், அது ஒரு காகம்” என்றார் மகன்.
சிறிது நேரம் கழித்து மூன்றாம் முறையாக அந்த முதியவர் தன் மகனிடம் கேட்டார், “என்ன இது?”
சற்று எரிச்சலான குரலில் மகன் பதிலளித்தார், “அது ஒரு காகம், காகம்!”
இன்னும் சிறிது நேரம் கழித்து அந்தத் தந்தை நான்காவது முறையாக அதே கேள்வியைக் கேட்டார், “என்ன இது?”
மகனோ பொறுமையை இழந்து விட்டார். தனது தந்தையைப் பார்த்து அவர் கத்தினார், “அதே கேள்வியை ஏன் திரும்பத் திரும்ப கேட்டுட்டே இருக்கீங்க? எத்தனை முறைதான் பதில் சொல்வது, ‘அது ஒரு காகம்’ என்று? இதைக்கூட உங்களால புரிஞ்சுக்க முடியலையா?”
முதுமை அடைந்து விட்டதால் மீண்டும் சிறு குழந்தை போல ஆனதாலோ என்னவோ, தந்தையின் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளும் தென்படவில்லை. அவருக்கருகில் அமர்ந்து அமைதியாகக் குர்ஆனை ஓதிக்கொண்டிருந்த அவரது மனைவி எழுந்து தமது அறைக்குச் சென்று திரும்பினார். அவரது கையில் மிகப் பழைய நாட்குறிப்பு ஒன்று இருந்தது.
அது அந்தத் தந்தையின் நாட்குறிப்பு. தன் மகன் பிறந்ததிலிருந்து அவர் அதில் எழுதி வந்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்தத் தாய் அதைத் தன் மகனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்.
அந்தப் பக்கத்தில் இவ்வாறு எழுதப் பட்டிருந்தது;
“எனது சின்னஞ்சிறு மகன் என்னுடன் உட்கார்ந்திருக்கும்போது சன்னலில் ஒரு காகம் வந்தமர்ந்தது. என் மகன் ‘அது என்ன’ என்று 23 தடவைகள் கேட்டான். ‘அது ஒரு காகம்’ என்று நான் 23 தடவைகளும் பதில் சொன்னேன். அவன் ஒவ்வொரு முறை அந்தக் கேள்வியை கேட்டபோதும் நான் அவனை பாசத்துடன் அணைத்துக் கொண்டேன். அவன் திரும்பத் திரும்பக் கேட்ட அதே கேள்வி என்னை எரிச்சலடையச் செய்யவில்லை. அதற்கு மாறாக, கள்ளங்கபடமற்ற அச்சிறு குழந்தையின் மீது எனக்கு பிரியம்தான் அதிகமானது”.
இதைப் படித்த மகனின் கண்கள் பனித்து விட்டன. 23 தடவை அதே கேள்வியை கேட்டபோதும் தன் மீது பாசமழை பொழிந்த தன் தந்தை மீது எரிச்சலடைந்ததற்காக அவரது மனம் வருந்தியது.
**************
Thanks:http://musawir.ipcblogger.com/?cat=35
** விதைகள் **
அக்டோபர் 22, 2008 இல் 8:09 மு.பகல் (கவிதை)
Tags: Add new tag, கவிதை
** விதைகள் **
கைகட்டிய சேவகனாய்
பவ்யமாய் உள்நுழைந்தது
பனி விலக்கிய ஒரு மதியப்பொழுது
விலகலின் திசை நேரெதிரென
அறியப்பட்டிருக்கவில்லை அப்போது
இரை விழுங்கி சுருண்டிருக்கும்
சர்ப்பமதின் செரித்தல் நிகழ்வென
மெதுவாய் நடந்தேறியது
வன்மத்தின் வாக்குவாதம்
தென்றலின் தீண்டலை மறுத்துரைத்து
உஷ்ணக்காற்றாய் முகம் கிழித்தது
முள் தடித்த சொற்கள்
எங்கோ பெய்யும் மழையின் மண்வாசனையிலும்
அறுந்து விழும் நூலாம்படையிலும்
கருக்கொண்டுவிடும் இன்னமும்
விஷச்செடியின் வீரியவிதைகளென
- சகாராதென்றல்
நன்றி : உயிரோசை
சுட்டி : http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=378
–~–~———~–~—-~————~——-~–~—-~
“தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”
Thanks:Piravakam@googlegroups.com
-~———-~—-~—-~—-~——~—-~——~–~—
ஏன்டா அடித்தாள் இரண்டாவது முறை?
அக்டோபர் 22, 2008 இல் 6:57 மு.பகல் (நகைச்சுவை)
Tags: Add new tag, நகைச்சுவை
இந்தப் பதிவு நகைச்சுவைக்காகவே எழுதப்பெற்றுள்ளது.நகைச்சுவையைத்
தவிர வேறு எந்த நோக்கமுமில்லை. அதை மனதில் கொள்ளவும்.
சிடுமூஞ்சிகள் மற்றும் ரசனை உணர்வு இல்லாத சீரியஸ் ஆசாமிகள்
பதிவை விட்டு வெளியேறி விடலாம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிச்சுமணி அப்பாவி. வெகுளி. பரோபகாரி. யாரும் கூப்பிடாமலேயே
ஓடிப்போய் உதவி செய்வான்.
துறு துறுவென்று இருப்பான்.எப்போது என்ன செய்வான் என்று தெரியாது.
அதனால் பலமுறை சிக்கலில் மாட்டியிருக்கிறான்
அன்றும் அப்படித்தான் ஒரு நண்பன் அழைத்தான் என்று, தான் வேலை
செய்யும் அலுவலகத்தில் விடுப்பு சொல்லி விட்டுக் கிளம்பிவிட்டான்.
உள்ளூர் கோவிலில் நடக்கும் விழாவிற்குப் போவதாகச் சொல்லி விட்டுப்போனான்
அவனுக்கு விடுப்பைக் கொடுத்த அதிகாரி அன்று மாலை அவனை
எதேச்சையாகச் சந்தித்தபோது அதிர்சிக்கு உள்ளாகிவிட்டார்.
பிச்சுமணியின் கன்னம் இரண்டும் எங்கோ அடிவாங்கியதில் சிவந்து போனது
மட்டுமில்லாமல் நன்றாக வீங்கிப்போயும் இருந்தது. அதோடு கண்களும்
சற்றுக் கறுப்படித்துக் கலங்கியிருந்தது
அவரைப் பார்த்தவுடன் பிச்சுமணிக்கும் அதிர்ச்சிதான். எட்டி நடக்கப்
பார்த்தான். அவனுடைய மேலதிகாரி பிடித்துக் கொண்டு விட்டார்
“டேய் பிச்சுமணி என்னடா ஆச்சு உனக்கு? ஏண்டா கன்னங்கள்
வீங்கியிருக்கிறது?”
“அது பெரிய கதை சார்! கேட்டால் வருத்தப்படுவீர்கள்!”
“வருத்தத்தைவிடு. நடந்ததைச் சொல்லு.”
“கோவில் வளாகத்தில வாட்டசாட்டமான பொம்பிளை ஒருத்தி என்னை
அடிச்சிட்டா சார். பொறி கலங்கிற மாதிரி ஓங்கிக் கன்னத்தில அறைஞ்
சிட்டாசார்!”
“எதுக்கிடா அறைஞ்சா?”
“சாமியாரு சொற்பொழிவு பண்ணினாரு. எல்லோரும் உக்காந்து கேட்டுக்
கிட்டிருந்தோம். அவரு தீடிர்ன்னு எல்லோரும் எழுந்து நின்னு இந்தப்
பாட்டை எங்கூட சேர்ந்து பாடுங்கன்னாரு, சரின்னு எல்லோரும் எழுந்து
நின்னு பாட ஆரம்பிச்சோம், அப்பத்தான் அது நடந்திரிச்சு சார்.
எனக்கு முன்னாடி நின்னுக்கிட்டிருந்தவ படார்ன்னு திரும்பி, பொடார்ன்னு
அறைஞ்சிட்டா சார்!”
“அறைஞ்சது சரிடா, எதுக்குடா அறைஞ்சா?”
” எழுந்து நின்னபோது சேலை, அவளோட பின்பக்க இடுவல்ல (crack)
சிக்கி பார்க்க அசிங்கமா இருந்திச்சு. பக்கத்துல நின்ன பயலுக எல்லாம்
அதையே பார்க்க ஆரம்பிசானுங்க. அய்யோ பாவம்னு அதைச் சரி
பண்ணிவிட்டேன் சார். அதனால் வந்ததுதான் இந்த வினை!”
“சரி பண்ணினியா – எப்படி?”
“வெளியே இழுத்துவிட்டேன் சார். அதை அவ தப்பா புரிஞ்சுக்கிட்டு
அடிச்சிட்டா சார்!”
“சரி, அந்தக் கன்னமும் வீங்கி இருக்கே, அது எதனாலடா?”
“அதுவும் அவளால தான் சார்!”
“அடப்பாவி, அவளாலையா? இரண்டாவது முறை எதுக்காகடா அடித்தாள்?”
“நாம் இழுத்துவிட்டது அவளுக்குப் பிடிக்கல போல, முன்பிருந்தது போலவே
இருக்கட்டும்னு நெனச்சு சேலையைப் பழையபடி சொருகிவிட்டேன் சார்!”
“அடக் கிறுக்கா! உன் அப்பாவித்தனமான குறும்புக்கு அளவேயில்லையா?”
+++++++++++++++++++++++++++++++++++++
இப்போது சொல்லுங்கள். பிச்சுமணி இரண்டாவதாகச் செய்தது தவறா?
தவறில்லையா?
)))
வாழ்க வளமுடன்!
SP.VR.SUBBIAH
Thanks:http:devakottai.blogspsot.com
முருகனைத் துதித்திடு!
அக்டோபர் 21, 2008 இல் 12:45 பிற்பகல் (ஆன்மீகம்)
Tags: Add new tag, ஆன்மீகம்
முருகனைத் துதித்திடு!
மலைகளில் உறைபவன்
மருந்தாகி நிற்பவன்
மறைகளைத் தந்தவன்
குறைகளைக் களைபவன்!
மயில்மீது வருபவன்
மங்கலங்கள் அருள்பவன்
பழநி மலையில் இருப்பவன்
பக்தர்களைக் காப்பவன்!
வள்ளியை மணந்தவன்
வள்ளலாகத் திகழ்பவன்
வடிவேல் கொண்டு வருபவன்
வலிமையைத் தருபவன்!
சுட்டபழம் தந்தவன்
சுப்ரமண்யன் ஆனவன்
சூரனை வதைத்தவன்
சுகந்தனைத் தருபவன்!
முருகனைத் துதித்திடு
முறுவலை வளர்த்திடு
மக்களை மதித்திடு
மனித நேயம் காத்திடு!
மரியாதை தந்திடு
மகிழ்ச்சியோடு இருந்திடு
மனத்தூய்மை காத்திடு
மற்றவர்க்கு உதவிடு!
************
என்.வி. சுப்பராமன்
Thanks:http://www.mazhalaigal.com/tamil/poems/poems-001/0806nvs_murugan.php
சமனில்லாக் கால்கள்
அக்டோபர் 21, 2008 இல் 6:05 மு.பகல் (கவிதை)
Tags: Add new tag, கவிதை
சமனில்லாக் கால்கள்
வசீகர பூமியின்
நிழற்சாலையில்
முன்னகர்ந்துக்கொண்டிருக்கின்றன
கால்கள்
நெரிசலில் முட்டியும்
பினைந்தும்
விரட்டியும்
தாவியும்
விந்தியும்
வேகம் கூட்டியும்
தளர்ந்தும்
தனித்து விலகிய
ரகசியகண்களிரண்டு
சமனில்லாத என் கால்கள்
நின்ற இடத்தில் நிற்பதையும்
சமயங்களில்
எடுத்து வைக்கும் அடிகள் கூட
பின்னகர்ந்துக்கொண்டிருப்பதையும்
வினோதமாகப்பார்த்துச்செல்கிறது
*********
நன்றி : உயிரோசை
–
http://nathiyalai.wordpress.com/
–~–~———~–~—-~——
Piravakam@googlegroups.com
Misguided Hope
அக்டோபர் 20, 2008 இல் 5:48 மு.பகல் (அனுபவம்)
Tags: Add new tag, அனுபவம்
Misguided Hope
“Love is the most powerful force in the universe.” Most of us actually believe that, if love is strong enough, it will create a healthy relationship in addition to changing the course of rivers and moving mountains. Forgive my indulgence in cynicism but the parallel is appropriate. For some relationships, a favorable outcome is about as probable.
Many people are confused because the conventional wisdom about love is not very wise. The common assumption is that a strong love is an intense love and that the stronger the feeling, the longer it will last. Love songs proclaim “I want a love whose flame is hot enough to last.” Unfortunately, the reality may be that you will wind up with a flash in the pan.
One of the most erroneous beliefs about relationships is that intensity creates consistency. However, if you want to predict consistency and persistence in a relationship, you are better off fining a mate who is generally consistent and persistent in all relationships.
It is always amazing to me that people will overlook the obvious available data and be seduced by the other person’s intense feelings. Most people who are in covert relationships with married lovers are making this mistake despite the lies, alibis, and broken promises.
It’s as if the reassurance of an occasional romantic interlude stokes the fire of misguided hope: the hope that because you and the other person love intensely, he or she will behave differently with you than he has in the past.
The sad truth is that some forms of love may be both intense and lethal. Certain personality disorders are capable of producing the most intense forms of love, yet their relationships yield a much higher homicide rate. Many others are somewhat less pathological but are still capable of episodic loving with intense passion as well as leading the partner’s life to general turmoil.
There’s a flip side to this coin. In early childhood it’s natural to think that you’re at the center of the universe. If you don’t receive the attention, consistency, and nurturing you crave, then childhood logic dictates that you must be doing something wrong – or just not doing enough. For adults who were children of dysfunctional families, this type of thinking has been doubly reinforced by an emotionally impoverished environment.
In adulthood, it’s an easy transition to apply the same logic with a slight variation: if you’re doing enough to bring about some occasional intense passion in your mate, then a bit more effort can probably bring about his or her constant devotion. This line of magical thinking is one reason why a higher proportion of children from dysfunctional families find themselves addicted to hopelessly inconsistent relationships. It’s unfortunate that so many people have such badly calibrated gyroscopes.
My point of view is that people are not made truthful and responsible because they love someone. They’re truthful and responsible because they love truth and responsibility. Love develops alongside the integrity of character that already exists. You don’t have to pursue the misguided hope of trying to make someone more consistent with your love. Instead, you can use the power of your wisdom to select a mate who already has integrity. If your partner doesn’t value his integrity sufficiently, then no amount of intense romance is going to change that.
If you would like to hear my recommendations to people who have written in about their various relationship problems, go to my website at www.carycounseling.com/door/Prototype/marriageadvicefak.html .
************
Thanks:http://docksidedoc.wordpress.com/2008/10/20/misguided-hope/
