வலைக்குள் மழை

http://valaikkulmazhai.wordpress.com/ வலையில் படித்து ரஸித்த
ஹைகூ கவிதைகள்

***************************
சூறைக் காற்றில் அலையும் கிளையின்
நுனியைத் துரத்தும்
பட்டாம் பூச்சி
******************************
ரேடியோ பாட்டு. . .
தலையாட்டும் தாத்தா. . .
நின்று விடுமோ . . . .?
*****************************

பழனி படிக்கட்டு சடை தாடி சாமியார்
காசு வேண்டி விரித்த பேப்பரில்
சவர பிளேடு விளம்பரம் !

*********************************************

காற்றில் அசையும்
நெற்கதிர் உச்சியில்
பயத்துடன்
கம்பளிப் பூச்சி !

************************

சர்க்கஸ் வலையின் ஆட்ட்த்தில்
கீழே விழுந்தது
சிலந்தி !

************************

சில ஹைகூகள்-அனுஜன்யா

அனுஜன்யா எழுதிய ஹைகூகள் படித்து ரஸித்தேன்.

அவைகளில் சில;-

——————————————————————————————————————————————-

காற்றில் பறித்த கொசுவை

யோசனைக்குப்பின் விடுவித்தேன்.

குறைந்திருக்கும் ஒரு கசையடி

 

காணமல் போய்விட்டது

ஊரின் குளம் மட்டுமல்ல

அதில் நிதம் குளித்த நிலவும்கூட

 

தன்னை மறந்து சல்யூட் அடித்தார்

போக்குவரத்து காவலர்

ஆம்புலன்சின் சுழல் விளக்கிற்கு

 

உடன் கட்டை ஏறத்

தயாராக படுத்துக் கிடந்தது

சடலத்தின் நிழல்

 

எண்ணைக் குழாய்கள்

மண்ணைப் புணர்ந்ததில்

கிழிந்ததென்னவோ

ஓசோன் திரைதான்

 

பத்து காகிதப் பந்துகளுக்குப்பின்

மரங்களைக் கொல்லாதீர்

என்று துவங்கியது கவிதை

                             

 

ஆரம்பப் பாடம்

உடற்பயிற்சி மையம்.

உயர்ந்த கட்டணத்தில்

சொல்லிக் கொடுக்கிறார்கள்

எவ்வளவு ஓடினாலும்

புறப்பட்ட இடத்திலேயே

இருப்பதற்கு

 

செங்கல் சுமப்பவளுக்கு

இடுப்பு பாரம் குறைவுதான்

குறைந்த எடை குழந்தையால்.

 

குளிர்சாதன இயந்திரத்தைப்

பழுது பார்த்த தொழிலாளி

சட்டை முழுதும் வியர்வை

 

 

Source: http://anujanya.blogspot.com/

ஹைகூகள்- அனுஜன்யா

அனுஜன்யா எழுதிய ஹைகூகள் படித்து ரஸித்தேன்.

அவைகளில் சில;-

————————————————————————————————————————–

 

சலனமின்றி ஓடும் நதி

கூட ஓட முடியாத

மரத்தின் நிழல்

 

வெறும் நட்பென்று விலகியே இருந்த

தண்டவாளங்கள் சங்கமித்தன

காதலில் தொடுவானத்தில்

 

விஷம் வாங்கியதில்

சில்லறைக்குப் பதில்

கிடைத்தது இரண்டு சாக்லேட்

 

கருவாட்டுச் சந்தையிலே

உயிருள்ள இரு மீன்கள் !

அசைவம் பழகியது

அன்று முதல்தான்.

 

தலைவனுக்காகக் காத்திருந்தான்

மாலை மரியாதையுடன்

கட்சிக்காகத் தீக்குளித்து

சடலமாய் படுத்தபின்னும்

 

கண்ணாடியில் கீறல்கள்

என் முகத்திலும் கோடுகள்

முதுமை நிச்சயம்

தொற்றுவியாதிதான்.

 

Source: http://anujanya.blogspot.com/

படித்து ரஸித்த ஹைகூகள்

அதிக விலை கொடுத்தாலும்

உரிமை விற்றவர்க்கே சொந்தம்!

கல்யாண மாப்பிள்ளை!

 

 

அதிக விலை கொடுத்தாலும்

உரிமை விற்றவர்க்கே சொந்தம்!

கல்யாண மாப்பிள்ளை!

 

 

பள்ளிக்கூடத்து பாடச்சத்தங்கள்

கேட்டுங்கொண்டே கழுவுகிறான்

தேநீர்க் குவளைகள்!

 

 

கல்யாண மண்டபம்

கடக்கும்போதெல்லாம்

கண்ணீர் சிந்தும்

பாலியல் தொழிலாளி!

 

 

சமபந்தி போஜனம்

வெளியே

எச்சில் இலைக்குக்

காத்திருக்கும் பிச்சைக்காரி!

 

 

பாலாபிஷேகம்!

அழுதுகொண்டிருக்கிறது

பிச்சைக் காரியின்

பச்சைக் குழந்தை!

 

 

எழுத்துக்கள்

பிரசுரிக்கப் படுவதில்லை!

பிரசவிக்கப் படுகின்றன!

 

படைப்பை

அனுப்பிவிட்டுக்

காத்திருந்தான்!

பேறுக்கால சுகம்!

 

சூல் கொண்ட

கருப்பை!

புதிய கதைக்கான

கரு!

 

வளை காப்பு!

படைப்பைப் படித்த

நண்பனின் பாராட்டு!

 

http://pithatralgal.blogspot.com/2006 வலைதளத்தில் படித்து ரஸித்தவை

 

மழைக்காதலி

வானக் காதலனுக்காய்
மழைக்காதலி எழுதிய கவிதை
வானவில்.

தன்னிறைவு பெற்றவர்கள்
மின் உற்பத்தியில்,
மின்மினிப் பூச்சிகள்.


உற்சாகத்தில் பறந்து சிரிக்கின்றது
வாழ்வு முடிந்தது அறியாமல்,
கிளைவிட்டு பிரியும் இலை.

பழக்கமில்லா புதியவன் என்பதால்
கடிக்கின்றதோ?!
செருப்பு.

புகைந்து அழியும் போதும்
அஸ்திவாரமிட்டுச் செல்கிறது அழிவிற்கு,
சிகரெட்.

உருகி அழும்போதும்
இருள் விலக்கி ஒளிர்கின்றது
மெழுகுவர்த்தி

 

courtesy:Kaaiarasan.wordpress.com

நிலா வெளிச்சம்

ஆற்றில் ஒருகால்

சேற்றில் ஒருகால்

அயல்நாட்டுத் தமிழர்

 

 

கிடைக்கும் வரை உழைப்பு

கிடைத்தபின் பிழைப்பு

பதவி

 

 

ஏழைகளுக்கான

இலவச மின்சாரம்

நிலா வெளிச்சம்

 

 

நல்லவர்களையும்

நாசமாக்கிவிடும்

நாலந்தா பல்கழைக்கழகம்

அரசியல்

 

 

ஆயில் கிணற்று மேலே

அயராத இடி மழை

வளைகுடா போர்

 

ஆக்கம்;ஜான் பீ.பெனடிக்ட்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers