உறைந்த கரு முட்டை மூலம் பிறந்தது குழந்தை!
உறைய வைத்த கரு முட்டை மூலமாக, சென்னையைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணுக்கு குழந்தை நேற்று பிறந்துள்ளது.
இம்முறையில் குழந்தை பிறந்திருப்பது, இந்தியாவிலேயே இதுவே முதல் தடவை என்பது சிறப்புக்குரியது.
இந்தச் சாதனையை புரிந்திருப்பவர்கள், சென்னையிலுள்ள ஜி.ஜி. மருத்துவமனையின் மருத்துவர்கள்.
இதுகுறித்து அம்மருத்துவமனையின் மருத்துவரும், இப்புதிய முறையைக் கையாண்ட மருத்துவக் குழுவுக்கு தலைமை வகித்தவருமான பிரியா செல்வராஜ் கூறுகையில், “உறைய வைத்த கரு முட்டை மூலமாக, 28 வயதுப் பெண்ணுக்கு சிசேரியன் அறுவைச் சிகிச்சை வாயிலாக 2.5 கிலோ எடையுள்ள ஆண் குழந்தை பிறந்துள்ளது,” என்றார்.
இம்முறை குறித்து அவர் விவரிக்கையில், கருவக பாதிப்பு உள்ள பெண்களின் கரு முட்டையை மைனஸ் 196 டிகிரி வெப்ப நிலையில் சேமித்து வைத்து, தேவைப்படும்போது கணவனின் உயிர் அணுவுடன் சேர்த்து கருவை உண்டாக்க முடியும்.
பின்னர், அந்தக் கருவை பெண்ணின் கர்ப்பப் பையில் செலுத்தி, குழந்தைப் பேற்றை அளிக்க முடியும். கரு முட்டையில் பாதிப்பு, இரண்டு முறை கருக்கலைப்பான 28 வயது பெண்ணுக்கு இந்த உறைய வைத்த கரு முட்டை முறையில் குழந்தைப் பேறு அளிக்கப்பட்டுள்ளது,” என்றார்.
(மூலம் – வெப்துனியா)
நன்றி; http://in.tamil.yahoo.com/