ஏரோ டைனமிக் கார்

ஒரு லிட்டர் பெட்ரோலில் 180 கி.மீ., தூரம் செல்லும் காரை, இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் வடிவமைத்துள்ளனர். பெங்களூரு ஆர்.வி.இன்ஜினியரிங் கல்லூரியின் மெக்கானிக்கல் துறை மாணவர்கள், மிகவும் எடை குறைந்த இந்த ஏரோ டைனமிக் காரை வடிவமைத்துள்ளனர். இந்த காரில் இரண்டு குதிரைத் திறன் கொண்ட 97 சி.சி., ஹோண்டா இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த காரின் சேசிஸ், அதிக திறன் கொண்ட அலுமினியத்தால் செய்யப்பட்டுள்ளது. ஏர் கூல் இன்ஜினுடன் பைபர் கிளாஸ் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதன் சக்கரங்கள் ஒவ்வொன்றும் 600 கிராம் எடை கொண்டவை. காரின் மொத்த எடை 55 கிலோ. ஒருவர் மட்டுமே அமர்ந்து செல்லக்கூடிய இந்த கார், 10 அடி நீளமும், 2.5 அடி அகலமும் கொண்டது. இந்த காரில் டி.வி.எஸ்., கார்பரேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. எளிதில் கையாளப்படும் இலகு பிரேக்குகள் இதன் சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ளன. பெங்களூரு என்.ஐ.சி.இ., காரிடாரில் இந்த கார் இயக்கி சோதிக்கப்பட்ட போது, ஒரு லிட்டருக்கு 180 கி.மீ., மைலேஜ் கிடைத்தது.

இந்த காரின் இன்ஜின் வடிவமைப்பு, வர்த்தக ரீதியிலும் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. காரை வடிவமைத்த குழுவின் தலைவர் நிஷாந்த் சராவ்கத், ஒரு லிட்டருக்கு 500 கி.மீ., ஓடும் காரை வடிவமைப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த திட்டத்துக்கு, 5.5 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

நன்றி

http://www.dinamalar.com/pothunewsdetail.asp?News_id=7635&cls=row4&ncat=IN
–~–~———~–~—-~————~——-~–~—-~
“தமிழ் பிரவாகம்”
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்”

Piravakam@googlegroups.com

டீன் ஏஜ் காதல். . .

டீன் ஏஜ் காதல் தற்கொலையில் முடிகிறது
Thivya N,
———————————————
காதல், தற்கொலை, தற்கொலைக்கு காரணங்கள், டீன் ஏஜ், டீன் ஏஜ் காதல்

வாழ்க்கையில் முக்கியமானதும் வாழ்க்கையே தடம் புரளும் காலமும் இந்த டீன் ஏஜ் தான். என்ன நடக்குதோ தெரியல்ல அந்த வயதில் காதல் என்பது எல்லாரையும் தொடராவிட்டாலும் தொட்டு விட்டாவது போகிறது. அந்த காதலே வாழ்க்கையின் இறுதியையும் தீர்மானிக்கிறது,

டீன் ஏஜ் இல் வருகின்ற பெரும்பாலன காதல் கல்லறையிலேயே முடிகிறது. காதலிக்கும் போது இனம், மொழி, மதம் என்பது காதலுக்கு இல்லை என்று வியாக்கியானம் பேசும் சிலர் பெற்றோர்களின் எதிர்ப்பு வரும் போது மட்டும் பெட்டிப்பாம்பாக சோந்து போகிறார்கள்.

டீன் ஏஜ் பருவ காதல் தற்கொலை எனும் உயிர் கொல்லியாக பயன்படுகிறது. இதற்கு அதாவது தற்கொலைக்கு காரணம் ஒரு வகையில் அவர்களின் பெற்றோராகவே இருக்கலாம். காதலிக்கிறார்கள் என்றதும் ஊரயே கூட்டி எல்லாருக்கும் சொல்வது மட்டுமல்லாது, அவர்களை ஒரு கொலை காரர்கள் மாதிரி பார்ப்பது.

டீன்-ஏஜ் காதலர்களை தற்கொலைக்கு அழைத்துச் செல்லும் காரணங்களாக “மனநெருக்கடி அதிகரிப்பு, உறக்கம் இல்லாமல் தவித்தல், தனிமையில் உட்கார்ந்து சம்மந்தம் இல்லாமல் யோசித்தல், மன அழுத்தத்துக்கு உள்ளாகுதல்” என்பவற்றை ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே உங்கள் டீன் ஏஜ் பிள்ளைகளை தற்கொலையில் இருந்து பாதுகாக்க சில வழிகள்;

1. மகனோ-மகளோ காதலிப்பது தெரிந்தால் வீட்டில் அவர்களை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு மிகப்பெரிய பிரளயத்தை ஏற் படுத்திவிட வேண்டாம்.

2. டீன்-ஏஜ் மாணவப் பரு வத்தில் வரும் காதலால் படிப்பு- எதிர்கால லட்சியத்தில் விழும் கேள்விக் குறிகளை பெற்றோர் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். பெரியோர் புத்திமதி சொல்ல வேண்டும் என்கிற காரணத்துக்காக அக்கம்பக்கத்து வீடுகள், தூரத் தில் வசிக்கும் உறவினர் வீடுகளுக்கு தகவல் அனுப்பி, மகனின் – மகளின் காதல் ரக சியத்தை பரப்பிவிட வேண்டாம். இது அவர்களை எதிர்மறையாக சிந்தனை செய்ய வைத்து விடும்.

3. புத்திமதிகளுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை எனில் சிறந்த மனோதத்துவ நிபு ணரிடம் அவர்களை அழைத்துச் செல்லலாம்.

4. அவர்களின் நெருங்கிய நண்பர், பிடித்த உறவினர் மூலம் நல்ல விஷயங்களை எடுத் துக் கூறி புரிய வைக்கலாம்.

5. காதல் வாழ்க்கையால் எதிர்காலத்தை இழந்து தவிப்பவர்களைப் பற்றி எடுத்துக்கூறி நடைமுறை வாழ்க்கை என்ன என்பதை புரிய வைக்கலாம்.

6. பெற்றோரே நல்ல விஷயங்களைக் கூறி சிந்தனையைக் கிளறிவிட்டு பிள்ளைகளை இறுதி முடிவு எடுக்க வைக்கலாம்.

7. சில வீடுகளில் மூத்த சகோதர-சகோதரிகள் மணமாகாத நிலையில் இருப்பார்கள். எனவே குடும்பத்தில் அவர்களுக்கு உண்டான பொறுப்பு, கடமையைப் பற்றி எடுத்துக் கூறலாம்.

8. எக்காரணம் கொண்டும் காதல் வயப்பட்ட தங்கள் குழந்தையை தனிமைப்படுத்தவோ, சந்தேக கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது. வழக்கமான அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வீட்டில் தான் தனிமைப் படுத்தபடவில்லை என்கிற நம்பிக்கை அவர்களிடம் தெளிவை ஏற்படுத்திவிடும்.

9. மகளோ-மகனோ காதலிப்பது தெரிந்துவிட்டால் கண்கொத்திப் பாம்பாக பின்தொடர்ந்து நிழல்போல் கண்காணிக்க கூடாது.

10. அவர்கள் விரும்பும் இடங்கள், நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தலாம்.
************

Thanks:http://glory.mywebdunia.com/2008/10/14/1223965800000.html

இந்திரா நூயிக்கு முதலிடம்

அதிகாரமிக்க பெண்கள்: இந்திரா நூயிக்கு முதலிடம்

பெப்சி நிறுவன தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான இந்திரா நூயி, வர்த்தக உலகில் அதிகாரமிக்கவர் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பட்டியலை பிரபல பார்ச்சூன் இதழ் வெளியிட்டுள்ளது. வருகிற 13ஆம் தேதி வெளிவரும் இதழில் இப்பட்டியல் இடம்பெறும்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்திரா நூயி இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறார். 52 வயதான இவர், சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்தி, அமெரிக்க விற்பனையில் ஏற்படும் சரிவை சமாளித்து உள்ளதாக பார்ச்சூன் இதழ் குறிப்பிடுகிறது. இப்போது பெப்சி நிறுவனத்தின் மொத்த வருமானத்தில் 26 சதவிகிதம் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கிறது.

இந்திரா நூயிக்கு அடுத்த இடத்தில் கிராப்ட் புட்ஸ் நிறுவனத்தின் ரோசன் பெல்ட் உள்ளார்.

*******
நன்றி;http://www.tamilvanan.com/content/2008/09/30/world-powerful-lady-indra-nuie/

Twins are a challenge !

Twins are a challenge: Angelina Jolie

***********
Hollywood actress Angelina Jolie says she and her partner Brad Pitt are finding their newborn twins “a challenge”.

In July, Jolie gave birth to twins – Knox and Vivienne – and confesses she and Pitt are often left exhausted.

Imdb.com quotes her saying: “We’re exhausted a lot, because it’s twice as hard with two babies than with one.”

But she insists the thrill of raising twins makes the hard work worthwhile: “It’s twice as much fun, too. When you look at them, it’s like they were made for each other. They smile at each other, sniff each other, touch each other. It’s just beautiful.”

And the tots are already showing their different personalities – they have started resembling their famous parents.

“It’s funny. Knox looks more like Brad and Viv (Vivienne) more like me. They’re totally sweet. Knox is more the quiet one, very relaxed, while Viv is a little more aggressive and loud,” said Jolie.

Meanwhile, in the new W magazine, Jolie revealed that she and Pitt recently hired their first part-time live-in helper because they were going “loopy” trying to find time for all their kids.
***********

Source: IANS
Thanks:http://entertainment.in.msn.com/hollywood/article.aspx?cp-documentid=1677954

நல்ல மனிதர் ஜி.டி. நாயுடு!

நல்ல மனிதர் ஜி.டி. நாயுடு!
*****************************

எங்கள் கோவைக்குப் பல பெருமைகள் உண்டு.

கோவையை மேம்படுத்தியவர்களைப் பற்றிச் சொல்லும்போது நாங்கள் முதலில்
சொல்லும் பெயர் ஜி.டி.நாயுடு (கோபாலசாமி துரைசாமி நாயுடு). காலம் 1893 – 1974

அவரைப் பற்றி மேல் விவரங்களுக்குச் சுட்டி இங்கே!

அவர் பிறவி மேதை!

அது என்ன பிறவி மேதை?

”Some people are born genius. Some people become genius and some
people made genius” என்று ஒரு முதுமொழி உள்ளது

பிறவி மேதைத்தனத்திற்கு பலரைச் சொல்லலாம். கேட்டால்,
கவியரசர் கண்ணதாசன், கர்மவீரர் காமராஜர், இசைஞானி இளையராஜா
பாடகர் பாலமுரளி கிருஷ்ணா என்று பலரை அடையாளம் காட்டலாம்.

தங்கள் உழைப்பாலும், அறிவாற்றலாலும், அனுபவத்தாலும் மேதையானவர்கள்
இரண்டாவது பிரிவினர். அதற்கு உதாரணமாக இயக்குனர் பாலச்சந்தர்,
எழுத்தாளர் ஜெயகாந்தன் போன்றோரைச் சொல்லலாம்.

மூன்றாவது பிரிவினருக்குச் சிலரைச் சொல்லலாம், வலைப்பதிவு பொது இடம்
பொது நலப் பண்பு கருதி அதைச் சொல்லாமல், உங்கள் ஊகத்திற்கு விட்டு
விடுகிறேன்.

ஜி.டி.நாயுடு ஒருமுறை சொன்னார்.21 வயது வரை படி, பிறகு பத்து ஆண்டுகள்
ஏதாவது துறையில் வேலை செய், பிறகு உன்னுடைய படிப்பையும் பத்து
ஆண்டுகள் அனுபவத்தையும் வைத்துத் தொழில் செய். குறைந்தது அடுத்து இருபது
ஆண்டுகளுக்கு தொழில் செய்து பொருள் ஈட்டு. பிறகு உன்னுடைய படிப்பு
ஞானம் எல்லாம் பிறருக்குப் பயன்படப் பணி செய் என்றார்.

என்னவொரு உயர்ந்த நோக்கம், எண்ணம் பாருங்கள்!

அந்த நல்ல எண்ணத்தோடு வாழ்ந்த மனிதரை, அறிந்திராத இளைய
தலைமுறையினருக்கு என் பதிவின் மூலம் அறிமுகப் படுத்துவதில் மகிழ்வு கொள்கிறேன்
வாழ்க வளமுடன்!

SP.VR.SUBBIAH
நன்றி;devakottai.blogspot.com

வெப் உலக ரெக்கார்டுகள்

வெப் உலக ரெக்கார்டுகள்
****************************

யூடியூபின் மிக நீளமான வீடியோ – ஏறக்குறைய நாலரைமணிநேர வீடியோ
http://www.youtube.com/watch?v=Ct8nZ6eTTiY

யூடியூபின் மிக குறுகலான வீடியோ – .01 நொடி வீடியோ
http://www.youtube.com/watch?v=9uDgJ9_H0gg

இணையத்தின் மிகச் சிறிய வலைமனை
http://www.guimp.com

இணையத்தின் மிக உயரமான வலைமனை
http://worlds-highest-website.com

உலகின் முதல் .com இணையதள டொமைன் பெயர் (மார்ச் 15 1985)
http://www.symbolics.com

மிக குறுகிய இணையதள டொமைன் பெயர். வாடிகனின் வெப்சைட்.
http://www.va

மிக நீளமான இணையதள டொமைன் பெயர்.இது நார்த் வேல்ஸிலுள்ள ஒரு கிராமத்தின் பெயராம்.
http://www.llanfairpwllgwyngyllgogerychwyrndrobwyll-llantysiliogogogoch.com

வாழ்வது
சிலகாலம்
உள்ளம் அழுதிடினும்
உதடு சிரிக்கட்டுமே!

உலகின் பெரிய domain name registrar (30.7 மில்லியன் டொமைன்பெயர்கள்)
http://www.godaddy.com

உலகின் முதல் ஆன்லைன் செய்தித்தாள் மே 1993, the Tech published by students from MIT, launched.
http://www-tech.mit.edu

24 மணிநேரத்தில் மிக அதிக எண்ணிக்கையில் இறக்கம் செய்யப்பட்ட மென்பொருள் ஃபயர்பாக்ஸ் 3 (ஏறக்குறைய 8 மில்லியன் பதிவிறக்கங்கள்)

அதிக மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருப்பவர் Sujit Ghosh.இவர் தனக்கென 5555 ஈமெயில் அக்கவுண்ட்களை வைத்திருக்கிறாராம். Kolkataismycity1@rediffmail.com முதல் Kolkataismycity5555@rediffmail.com வரை.

*********************

நன்றி; pkp.blogspot.com

வாசிக்கப் பட வேண்டிய முக்கிய காமிக்ஸ்.

வாசிக்கப் பட வேண்டிய முக்கிய காமிக்ஸ்.

The Essential Calvin and Hobbes: A Calvin and Hobbes Treasury

Something Under the Bed is Drooling

The Calvin and Hobbes Lazy Sunday Book: A Collection of Sunday Calvin and Hobbes Cartoons

Weirdos From Another Planet!

The Indispensable Calvin and Hobbes: A Calvin and Hobbes Treasury

Calvin and Hobbes: Sunday Pages 1985-1995

The Days are Just Packed

It’s A Magical World

The Calvin and Hobbes Tenth Anniversary Book

The Complete Calvin and Hobbes
**************************
Books selected by S.Rammakrishnan(http://www.sramakrishnan.com/)

Experience is food for the brain – Bill Watterson

தாய்ப்பால் விற்பனை தடை

சுவிஸில் தாய்ப்பால் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது

[Friday September 19 2008 07:28:44 PM GMT] [yalini]

சுவிட்சர்லாந்தின் சூரிச்சில் உள்ள சில ஹோட்டல்களில் தாய்ப்பால் பரிமாறப்பட்டு வந்ததாகவும், இதற்கு தடை விதிக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாய்ப்பால் விற்பனை செய்யப்படுவது சட்டவிரோதமானதென மருத்துவ ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

பசுக்கள் மற்றும் ஆடுகளைப் போன்று தாய்ப்பாலை விற்பனை செய்ய முடியாதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரொச்சென் ஹோட்டல் உரிமையாளர் இந்த தடை குறித்து தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார். தாய்ப்பாலைப் பயன்படுத்தி பல்வேறு உணவுப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு பரிமாறுவதற்காக ஸரொச்சென் ஹோட்டல் உரிமையாளர் பல்வேறு புதிய உணவு வகைகளைப் பட்டியல் படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு லீற்றர் தாய்ப்பால் 16.25 கொள்வனவு செய்யப்படும் குறித்த ஹோட்டல் உரிமையாளா விளம்பரம் செய்திருந்தார்.

தாய்ப்பால் சிசுக்களுக்கான பிரத்தியேக உணவு எனவும் அதனை வயது வந்தோருக்கு விற்பனை செய்யக் கூடாது எனவும் மருத்துவ ஆலோசகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்

Source: http://www.coolswiss.ch/article.php?artiId=4172&catId=&token=dispNews

அதிசய நாய்

அதிசய நாய்
பாரிச வாதத்தால் பாதிக்கப்பட்டு உயிருக்காக போராடிய நபரொருவரை அவரது செல்லப் பிராணியான நாயானது அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து காப்பாற்றிய அதிசய சம்பவம், அமெரிக்க அரிஸோனா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.

ஸ்கொட்ஸ்டேல் எனும் இடத்தில் தனிமையில் வாழ்ந்த ஜோ ஸ்டால்னகர் என்ற நபர், திடீரென பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல் இயக்கங்கள் ஸ்தம்பிதமடைந்த நிலையில் வேதனையில் துடித்தார்.

இந்நிலையில் அவசர உதவி பிரிவுக்கு தொலைபேசி அழைப்பை எடுக்க ஏற்கனவே பழக்கப்பட்ட பட்டி என்ற இந்த 18 மாத வயதான நாய், துரிதமாக செயற்பட்டு மேற்படி பிரிவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியது.

பட்டியிடமிருந்து கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்பு தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தரான கிரிஸ்றோட் விபரிக்கையில், மறுமுனையில் அழைப்பை விடுத்தவர் யார் என வினவியபோது முனகல் குரலும் குரைக்கும் சத்தமும் மாறி மாறிக் கேட்டதாக தெரிவித்தார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தபோது முனகல் குரல் எழுப்பி குரைத்து தமக்கு அழைப்பை ஏற்படுத்தியது ஒரு நாயே என்பதை அறிந்து தாம் அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறினார்.

10 வருடங்களுக்கு முன் இராணுவத்தில் பணியாற்றும்போது ஏற்பட்ட விபத்தில் ஜோ ஸ்டால்னகரின் மூளையின் ஒரு பகுதி காயமடைந்ததில் அவர் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

இந் நிலையில் நோய் மற்றும் தனிமை என்பன தொடர்பில் அஞ்சிய ஜோ ஸ்டால்னகர், 8 வார வயதான பட்டி என்ற மேற்படி நாயை வளர்க்க ஆரம்பித்தார்.இதன்போது அதற்கு கால்களை உபயோகித்து அவசர உதவிப் பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்த பயிற்சியளித்தார்.

அவசர உதவிப் பிரிவினரால் அம்புலன்ஸ் வண்டி மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜோ ஸ்டால்னகர், தற்போது உடல் நலம் தேறி வருவதாகக் கூறப்படுகிறது.

நன்றி; mrishan.blogspot.com

உயிரைக் காப்பாற்றிய நாய்

அவசர உதவிப் பிரிவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி உரிமையாளரின் உயிரைக் காப்பாற்றிய நாய்

பாரிச வாதத்தால் பாதிக்கப்பட்டு உயிருக்காக போராடிய நபரொருவரை அவரது செல்லப் பிராணியான நாயானது அவசர சிகிச்சைப் பிரிவுக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து காப்பாற்றிய அதிசய சம்பவம், அமெரிக்க அரிஸோனா மாநிலத்தில் இடம் பெற்றுள்ளது.

ஸ்கொட்ஸ்டேல் எனும் இடத்தில் தனிமையில் வாழ்ந்த ஜோ ஸ்டால்னகர் என்ற நபர், திடீரென பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல் இயக்கங்கள் ஸ்தம்பிதமடைந்த நிலையில் வேதனையில் துடித்தார்.

இந்நிலையில் அவசர உதவி பிரிவுக்கு தொலைபேசி அழைப்பை எடுக்க ஏற்கனவே பழக்கப்பட்ட பட்டி என்ற இந்த 18 மாத வயதான நாய், துரிதமாக செயற்பட்டு மேற்படி பிரிவுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியது.

பட்டியிடமிருந்து கிடைக்கப் பெற்ற தொலைபேசி அழைப்பு தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தரான கிரிஸ்றோட் விபரிக்கையில், மறுமுனையில் அழைப்பை விடுத்தவர் யார் என வினவியபோது முனகல் குரலும் குரைக்கும் சத்தமும் மாறி மாறிக் கேட்டதாக தெரிவித்தார்.

உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தபோது முனகல் குரல் எழுப்பி குரைத்து தமக்கு அழைப்பை ஏற்படுத்தியது ஒரு நாயே என்பதை அறிந்து தாம் அதிர்ச்சியடைந்ததாக அவர் கூறினார்.

10 வருடங்களுக்கு முன் இராணுவத்தில் பணியாற்றும்போது ஏற்பட்ட விபத்தில் ஜோ ஸ்டால்னகரின் மூளையின் ஒரு பகுதி காயமடைந்ததில் அவர் பாரிசவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

இந் நிலையில் நோய் மற்றும் தனிமை என்பன தொடர்பில் அஞ்சிய ஜோ ஸ்டால்னகர், 8 வார வயதான பட்டி என்ற மேற்படி நாயை வளர்க்க ஆரம்பித்தார்.இதன்போது அதற்கு கால்களை உபயோகித்து அவசர உதவிப் பிரிவுக்கு அழைப்பு ஏற்படுத்த பயிற்சியளித்தார்.

அவசர உதவிப் பிரிவினரால் அம்புலன்ஸ் வண்டி மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட ஜோ ஸ்டால்னகர், தற்போது உடல் நலம் தேறி வருவதாகக் கூறப்படுகிறது.

•Thanks:mrishan.blogspot.com

« பழைய வரவுகள்