ஹாய் மதன் கேள்வி-பதில்(1)

ஹாய் மதன் கேள்வி-பதில்

பரமத்தித்தி கனகு, ஈரோடு-4.

மழைக் காலங்களில் கொசுவின் றெக்கைகள் நனைந்துவிடுவதால் தானே கொசுக்கள்
அதிகம் வெளியே வருவது இல்லை?

உண்மைதான்! ஆனால் ‘மழை பெய்யும்போது மட்டும்’ என்று சொல்லுங்கள். மழை
நின்றவுடன் ‘வட்டியும் முதலுமாக’ கொசுக்களின் அட்டாக் இன்னும்
அதிகரிக்கும். இரண்டு நாட்கள் ‘டாஸ்மாக்’ கடை களை மூடிவிட்டுப் பிறகு
திறந்தால், ஆவேசமான ஆர்வத்துடன் கூட்டம் அலை மோதும் இல்லையா?!

*********************************************************************************************

பார்வையே இல்லாதபோது வெளவாலுக்குக் கண் எதற்கு?

அது கண்கள் அல்ல… அதன் மிச்சம்! வெளவால்கள் உருவாகும்போது கண்களுக்கான
‘செல்’கள் உருவாக ஆரம்பித்து, பிறகு தேவையில்லை என்று அகன்று விடுகின்றன.
ஆணுக்கும் முலைக்காம்பு (ணிப்ப்லெ) இருப்பது போலத்தான்!

****************************************************************************************

பா.சு.மணிவண்ணன், திருப்பூர்-4.
சாதி என்பது அடையாளமா? அல்லது பெருமையா?

அங்கீகாரம் மற்றும் அகங்காரம்!

*************************************************************************************

நா.முருகானந்தம், போளியம்மனூர்.
இறைபக்தி இல்லாத இசை மேதைகள் இருக்கின்றார்களா?

இறைவனைப் பார்க்க முடியுமா? ஆனால் கேட்க முடியும்… அதுதான் இசை. எல்லா
நாகரிகங்களிலும் நாடுகளிலும், அத்தனைவிதமான இசை வடிவங்களும் இறைவனுடன்
இரண்டறக் கலந்தே இருக்கின்றன. நம் நாட்டைப்பற்றிச் சொல்லத் தேவையில்லை.
மேலை நாட்டுப் புராணப்படியும் ஜீயஸ் (தேவேந்திரன்) பெற்றெடுத்த ஒரு
தேவதைதான் (மூசெ) மனிதனுக்கு இசை தந்தது. (‘மூசெ’ லிருந்துதான் மூசிச்)
சுருக்கமாக, இசைக் கலைஞர்களுக்கு இசை என்பதே இறைவன்தான். குறிப்பாக எந்த
மதத்தின் கடவுள், அவர் பெயர் என்ன என்றெல்லாம் அபத்தமாக நாம் கேட்க
வேண்டாம்!

*************************************************************************************

மஹிந்திரநாத், சென்னை-45.

மணிபர்ஸ் உபயோகிக்கும் பழக்கம் இருக்கா?
விகடனில் சேர்ந்த புதிதில் ரொம்பப் பெருமையாக மணிபர்ஸ் உபயோகித்தது
உண்டு. ஒரு முறை பஸ்ஸில் அதை பிக்பாக்கெட் அடித்துவிட்டார்கள். அடுத்த
ஸ்டாப்பில் கண்டக்டர் என்னை இறக்கி விட்டுவிட்டார். பர்ஸில் இருந்தது
சுமார் 40 ரூபாய். இடிந்து போய்விட்டேன். அதிலிருந்து பர்ஸ் கிடையாது.
பிறகு ‘லெதர் பேக்’ ஒன்றைக் கையோடு (கெட்டியாகப் பிடித்துக்கொண்டு) எடுத்
துச் செல்வேன். அண்மைக் காலமாக நான் சந்திக்கும் வி.ஐ.பி-க்கள் அனை வரும்
கை வீசிக்கொண்டுதான் வருகிறார்கள். நாமும் அப்படி இருந் தால், மதிப்பு
கூடுமோ என்று ஓர் அல்ப ஆசை. இப்போது மீண்டும் மணிபர்ஸ் வந்துவிட்டது.
பிக்பாக்கெட் அடிப்பார்கள் என்பதால் பஸ்ஸில் அவ்வளவாகப் போவது இல்லை.
பார்ப்போம்!

**************************************************************************************

விக்கிரமாதித்தன், ஜேடர்பாளையம்.

இந்தியாவில் உள்ள பெரிய குறை என்ன?

மக்களின் அசாத்தியப் பொறுமை!

***************************************************************************************

யமுனா ரெங்கநாதன், பெங்களூரு.

சுப்ரீம் பவரினால் (கடவுள்) ஏன் எடுத்த எடுப்பிலேயே ஒரு சூப்பர் மனிதனை
(அதாவது நம்மை) உருவாக்க முடியவில்லை?!

அதாவது, ஒரு குரங்கு மனிதனைத்தான் உருவாக்க முடிந்தது, ஆகவே
உருவாக்கியவருக்கு ‘சூப்பர் பவர்’ இல்லை என்கிறீர்கள். தான்
ரசிப்பதற்காக, அந்த சுப்ரீம் பவர், பரிணாம வளர்ச்சி என்ற ஒன்றையும்
உருவாக்கியிருக்கலாம் இல்லையா?!

********************************************************************************

சுமாலி, மேலப்பாலையூர்.

தொப்புளுக்கு ‘செக்ஸில்’ உள்ள பங்கு என்ன?
தொப்புளுக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால், பாலூட்டிகள் மேற்கொண்ட உறவின்
மூலம் பிறந்தவர் என்பதை நிரூபிப்பதற்கே தொப்புள்!

ஹாய் மதன் கேள்வி-பதில்

ஹாய் மதன்: கேள்வி பதில்
நன்றி; ஆனந்த விகடன்

**************************************

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாவின் மகன் முத்து வீரப்பரின் துணிச்சலைக்
கண்டு பேரரசர் ஒளரங்கசீப் வியந்துபோனாராமே?

டெல்லி பாதுஷாவான ஒளரங்கசீப், தன்னுடைய செருப்பு ஒன்றை யானை மீது வைத்து
தென்னாட்டுக்கு ஊர்வலமாக அனுப்பினார். அந்தச் செருப்பு பய ணிக்கும்
ராஜ்ஜியங்களின் மன்னர்கள் அதற்குத் தலை வணங்கி மொகலாய அரசுக்குக் கப்பம்
கட்ட வேண்டும். முத்து வீரப்பர் அந்தச் செருப்பை வணங் காமல்
சர்வசாதாரணமாகத் தன் காலில் அணிந்து கொண்டு மொகலாய படைத் தளபதியிடம்,
‘மனிதர்களுக்கு இரண்டு கால்கள் உண்டு என்பது உங்கள் பாதுஷாவுக்குத்
தெரியாதா? இன்னொரு செருப்பு எங்கே?’ என்று இகழ்ச்சியாகக் கேட்க, கூடவே
மெகலாய வீரர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர். இது பற்றிக் கேள்விப்பட்ட
ஒளரங்கசீப் முதலில் கோபப்பட்டாலும், பிறகு யோசித்து, ‘செருப்பு ஊர்வலப்
பழக்கத்தை’க் கைவிட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கான திட்டவட்டமான
சான்றுகள் இல்லை என்றாலும், அ.கி.பரந்தாமனார், தான் எழுதிய ‘மதுரை
நாயக்கர் வரலாறு’ புத்தகத்தில் இது உண்மையில் நடந்ததாகவே
குறிப்பிடுகிறார்!

********************************************************************************************

என்.பிரபாகர், ஆ.புதூர்.

கணவன் – மனைவி இடையே நடைபெறும் பிரச்னையில் நியாயத்தை விட்டுவிட்டு,
பெண்கள் தங்கள் தாய் வீட்டுக்கே பரிந்து பேசுகிறார்களே? நியாயம் என்னாவது

பெற்று வளர்த்தவர்களையும் அத்தனை பேரையும் விட்டுவிட்டு, யாரோ ஓர் அந்நிய
னுடன் வந்து சேர்ந்துகொண்டவள்தான் மனைவி. ஆழ் மனதில் அந்தக் குற்ற உணர்வு
இருக்குமா, இருக்காதா? மற்றபடி ஆஃப்டர் ஆல் கணவன் – மனைவிபிரச்னை தானே?
ஏதோ காஷ்மீர் பிரச்னை மாதிரி டென்ஷன் ஆக வேண்டியது இல்லை!

*******************************************************************************************

க.நா.இராஜேஸ்வரன், மொரட்டுப்பாளையம்.

நமது அரசியல் தலைவர்கள் ஏன் இன்னும் சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கவில்லை?
வெறும் 30 கோடி ரூபாய்கூட அவர்களிடம் இல்லையா, என்ன?

ஒவ்வொரு தலைவரும் ஒரு டஜன் ஹெலிகாப்டர்களை வாங்க முடியும். ஆனால்,
தெருவில் இருபுறமும் உள்ள சாமான்ய மக்களைப் பார்த்து வணங்க முடியாது, கை
அசைக்க முடியாது, ஹெலிகாப்டரை நிறுத்தி குழந்தை களுக்குப் பெயர் சூட்ட
முடியாது. பாதி வழியில் டீக்கடையில் நிறுத்தி ஏழை களோடு டீ அருந்த
முடியாது.இதை எல்லாம் செய்ய வேண்டும் என்பதற் காக நம் தலைவர்கள்
மேற்கொண்டு இருக்கும் தியாகம்தான் ஹெலிகாப்டர் வாங்காமல் இருப்பது என்பது
கூட உங்களுக்குப் புரியவில் லையா?

*********************************************************************************************

ஜூனியர் கேள்வி-பதில் – லேனா தமிழ்வாணன்

ஜூனியர் கேள்வி-பதில்லேனா தமிழ்வாணன்

என்.நரேந்திரன், கூடுவாஞ்சேரி.

 

பலரும் உங்களை விரும்புகிறார்களே, எப்படி?

 

சிரிப்பினால் என்ன செலவு என்று சும்மா சிரித்து வைப்பேன். அது பல நேரங்களில் கை கொடுக்கிறது.

**********************************************************

எம்.பாலமுருகன், கோவை.

 

நல்லது சொன்னால் ஏற்காதவர்கள் கெட்டது சொன்னால் ஏற்கிறார்களே, ஏன்?

 

நல்லது, பாகற்காய் மாதிரி விலை அதிகம். பலர் வாங்க யோசிப்பார்கள். கெட்டது, கத்தரிக்காய் மாதிரி! விலை சகாயம். பூச்சி பிடித்திருந்தாலும் வாங்கி பையில் போடுவார்கள்.

**********************************************************

 

டி.தனராஜ், மன்னார்குடி.

 தங்களுக்குப் பிடிக்காதது எழுத்தாளர் கருணாநிதியா? அல்லது அரசியல்வாதி கருணாநிதியா?

எழுத்தாளர் கருணாநிதியை அப்பட்டமாயப் பிடிக்கும். அதுவும் அப்பழுக்கில்லாமல் பிடிக்கும். அரசியல் கருணாநிதியை.

**********************************************************

 

 

 

பி.வசந்தன், சென்னை.

 

எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்ளும் சாமர்த்தியம் உங்களுக்கு உண்டா?

இதற்கெல்லாம் ஒரு சாமர்த்தியம் வேண்டும். அப்படியொரு நிலைமை இல்லாததால் இப்படியொரு சாமர்த்தியம் எனக்குத் தேவைப்படலை. சினனக்குழந்தைகள் மாதிரி யாரோடும் நான் காய் போடுவதில்லை. இந்த விஷயத்தில் வள்ளுவர்தான் எனக்கு வாத்தியார்.

*****************************************************************

 

ஜி.பாஸ்கர், மாதவரம்.

எதுவொன்றுக்கும் சகுனம் பார்ப்பது நல்லதா?

ஒன்றேயொன்று சொல்லட்டுமா? நீங்கள் முன்னுக்கு வரவேண்டுமானால் சகுனத்தைப் பின்னுக்குத் தள்ளுங்கள்.

****************************************************************

 

சி.ராஜேந்திரன், சிதம்பரம்.

 

மனைவியின் தொண தொணப்பில் இருந்து எப்படித் தப்பிப்பது?

 

ஒரு கணைப்புக் கணைத்து அவர் பல்லவியைத் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் சரணத்திற்குப் போய்விடுங்கள்.

*************************************************************

வி.எழிலன், திருவான்மியூர்.

 

அரசியலில் இன்று சாணக்கியர் யார்?

 

ஒருவரும் இல்லை. தனது சபதப்படி சந்திரகுப்தனை அரியணையில் ஏற்றிவிட்டு, எங்கோ ஒரு குடிசையில் ஓரங்கட்டிக்கொண்ட சாணக்கியன் எங்கே? எல்லா குடிசைகளையும் தனது மாளிகையாக்கிக் கொண்டிருக்கும் இன்றைய அரசியல்வாதிகள் எங்கே?

**************************************************************

 

கே.சேதுபதி, நாகப்பட்டினம்.

 

தமிழ் இலக்கியங்கள் படிக்கப் படிக்க நீண்டு கொண்டே போகிறதே?

 

இத்தனைக்கும் கடல் கொண்டு போனவை போக மிகுந்தவைதான் இப்போதுள்ள இலக்கியங்கள். கடல் மட்டும் அபாரக்காதல் கொண்டு தமிழ் இலக்கியங்கள் பலவற்றைக் கொண்டு போகாமல் இருந்தால் அடா அடா!

***************************************************************

 

எஸ்.கங்காதரன், சென்னை-60.

இன்று குடும்பப் பாசம் எப்படியிருக்கிறது?

சொந்தத்தை இன்று நாம் எல்லோருமாகச் சேர்ந்து மந்தமாக்கி வருகிறோம்!

***************************************************************

 

 

 

.ஜார்ஜ், நெமிலி.

 

எந்த மாதிரி பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளலாம்?

 

இதற்கு என்னிடம் பதில் இல்லை. ஒரு பெண்ணுக்குள் சீதையும் இருக்கிறாள; சூர்ப்பனகையும் இருக்கிறாள். எனவே கவனம்!

***********************************************************

 

பா.வளனரசு, புவனகிரி.

 

அன்புமணி புகைபிடிப்போர் விஷயத்தில் பாறைபோல் உறுதி காட்டுகிறாரே?

 

அப்பா மதுவை ஒழி என்கிறார். மகன் புகையை ஒழித்தே தீருவேன் என்கிறார். நாட்டிற்கு நல்லது செய்ய நினைக்கும் இந்த அப்பா பிள்ளையை எனக்கு மிகவும் பிடிக்கிறது.

********************************************************

 

எம்.கெளசிக், ரத்னகிரி.

 

பொடா சட்டம் தேவையா?

 

பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரும்போது பொடா வந்துவிடும். கண்ணா! ராஜா! தீவிரவாதம் வேண்டாமடா! என்கிறது காங்கிரஸ் அரசு. பொடாவால் வாலை ஒட்ட நறுக்குவோம் என்கிறது. பொடா வேண்டும்தான்.

*****************************************************************

 

முகமது மீரான், நெல்லூர்.

 

விஜயகாந்த் யாருடன் கூட்டுச் சேர்வார்?

 

தி.மு.., .தி.மு.. இரண்டையும் தொடர்ந்து தாக்குகிறார். காங்கிரசையும் பாரதிய ஜனதாவையும் விட்டு வைத்திருக்கிறார். இவற்றுடன் சேர்த்தால் இந்த இரண்டும் தி.மு.. மீதும் .தி.மு.. மீதம் குதிரைச் சவாரி செய்யும் கட்சிகள் தாமே! விஜயகாந்த் தெளிவாக இருந்து நம்மைக் குழப்புகிறாரா அல்லது தாமும் குழம்பி நம்மையும் குழப்புகிறாரா? ஒன்று நிச்சயம். விஜயகாந்த் தனிமனிதனாக இயங்கி எதையும் பெரிதாகச் சாதிக்க முடியாது!

*********************************************************************

 

மா.வசந்த், செவ்வாய்ப்பேட்டை.

 

ஒரிஸ்ஸா வன்முறைக்குப் பதில் தரும்படி தமிழகக் கிறித்தவர்கள் போராடியது குறித்து?

 

இந்த மண்ணில் அனைவருக்கும் தங்களவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க உரிமை இருக்கிறது. வரவேற்போம். இதில் பள்ளி பிள்ளைகளைச் சம்பந்தப்படுத்தியதை மட்டும் தவிர்த்திருக்கலாம்! பிஞ்சுக்களுக்குள் ஏன் வகுப்புவாத விதைகள்?

*****************************************************************

இருதயராஜ், வேளச்சேரி.

 

உலக அளவில் பெட்ரோல் விலை குறையும்போது இந்தியாவும் குறைத்தால் என்னவாம்?

 

நஷ்டத்தின் பங்கு குறைக்கப்பட்டுள்ளதே தவிர நீங்கள் எண்ணுமளவு நிலைமைகள் ஆரோக்கியமாக இல்லை. பெட்ரோல் நிறுவனங்கள் தினந்தோறும் 400 கோடி ரூபாய் நஷ்டத்தில்தான் இன்றளவும் இயங்குகின்றன.

*******************************************************************

 

எம்.செல்வராணி, ஆத்தூர்.

 

சிரஞ்சீவி ஆந்திர அரசியலில் ஜெயிப்பாரா?

 

ஆந்திர அரசயிலை அலசுமளவிற்கு எனக்கு ஆற்றல் போதாது. இருந்தாலும் ஆந்திர மக்கள் திரையுலக நேசர்கள் என்பதால் சிரஞ்சீவி ஒரு கலக்குக் கலக்குவார் என்றே தோன்றுகிறது. ஆனால் கட்சி ஆரம்பித்ததுமே பதவிக்கு வந்த எம்.ஜி.ஆர்.போல் தன்னை எண்ணிக் கொள்ளாமல் பொறுமையாக, திட்டமிட்டு, சரிவர அரசியல் நடத்தினால் பெயருக்கு ஏற்றபடி ஆந்திர அரசியலில் சிரஞ்சீவியாய்த் தொடர்வார் என்று மனம் கணக்குப் போடுகிறது.

*********************************************************************

 

எம்.அப்பாதுரை, வேலூர்.

 

கேபிள் டி.வி. பிரச்னை தீர்வு காணப்படுமா?

 

எது குறித்து ஊசி முனை குத்திக் கேட்கிறீர்கள் என்பது பிடிபடாத நிலையிலும் என் பதில் இது. மதுரைப் பகுதியில் ஆர்.சி.வி. டி.வி, ஆளுங்கட்சியின் பலத்துடன், காவல்துறை அனுசரணையுடன் நுழையப் பார்க்கிறது. ஆர்.சி.வி மக்கள் விரும்பிப் பார்க்கும் ஒளிபரப்புகளைச் சேர்த்துக் கொண்டால் ஆதரவு அமோகமாகும். கம்யூனிஸ்டுகள் இந்த விஷயத்தில் மூக்கை நுழைந்திருப்பதால் நன்மைகள் விளையலாம்!

*********************************************************************

கே.ரங்கராஜன், கோவைப்புதூர்.

 

அண்ணாவின் குடும்பம் உதவிகளைப் பெறும் (பெற்ற) நிலையில் உள்ளது எதைக் காட்டுகிறது?

 

அரசியலில் அண்ணா நேர்மையாக வாழ்ந்தார் என்பதை! திராவிட இயக்கத்தின் நேர்மை அரசியல் அண்ணாவுடன் முடிந்துவிட்டதோ என்றே சிந்திக்கத் தோன்றுகிறது.

********************************************************************

ஆர்.புவனா, புதுக்கோட்டை.

 

ஒரு ரூபாய் அரிசி?

 

உதவாது! தேர்தலுக்கு உதவாது என்று சொல்ல வந்தேன்.

***********************************************************************

  

கே.காளிமுத்து, காரைக்குடி-2.

இரண்டரை ஆண்டுகளுக்கு மின்தட்டுப்பாடு தொடரும் என்று பொங்கலூரார் மிரட்டிவிட்டாரே?

 

தி.மு.. இருக்கும்வரை மினவெட்டும் தொடரும் என்கிறாரா? அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் செயலாகும் வரை மின் வெட்டுத் தொடரும் என்று சொல்ல வந்து, இந்த ஒப்பந்தத்தின் அவசியத்தை வலியுறுத்துகிறார். அனல்(கரி) பொய்த்துவிட்டது. புனல் (நீர்) ஏமாற்றிவிட்டது. காற்றாலைக்கூடக் கைவிரித்துவிட்டது. அணுமின் உற்பத்தியின் அவசியத்தை நாட்டிற்கும் குறிப்பாக கம்யூனிஸ்டுகளுக்கும் உணர்த்தும் மின்வெட்டு இது.

*************************************************************

எஸ்.ராஜா, கோத்தகிரி.

 

ஒன்றரை இலட்சம் பேர் ஓடிய பத்து இலட்ச ரூபாய் மாரத்தான் ஓட்டப்பந்தயம் பற்றி?

 

நல்ல முயற்சிகளுக்குத் ஆதரவு கொடுக்கும் என்பதற்கு இந்த ஓட்டம் நல்ல உதாரணம். முயற்சிகள், உழைப்புகள், விளம்பரங்கள், செலவுகள் வீண்போகவில்லை. பத்து இலட்சம் பரிசு வாங்கிய உத்திரப்பிரதேசத்துக்காரர் தன்னாலியன்ற சிறு பங்களிப்பையும், ஏழைப் பிள்ளைகளுக்குச் செய்திருந்தால் ஐஸ்கிரீம் மிது வைக்கப்பட்ட செர்ரி பழமாக இருந்திருக்கும்.

****************************************************************

 

 

 

எஸ்.முகேஷ், வாடிப்பட்டி.

 தமிழக வீரர் பத்ரிநாத் இலங்கைக்கு எதிரான ஆட்டங்களில் பெரிதாகச் சோபிக்கவில்லையே?

 

நம்மவர்களுக்கு நம்மவர்களைப் பற்றிய மதிப்பீடுகள் குறைவுதான். இலங்கைத்தொடரை வென்று கொடுத்தவர் பத்ரிநாத்தான் என்கிறார் கவாஸ்கர். இதற்கு என்ன சொல்கிறீர்கள்? பத்ரிநாத்திற்கு எதிரே விரிவான கிரிக்கெட் வாய்ப்புக் குவிந்து கிடக்கின்றன. நல்லபடி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

 

Thanks:

http://www.tamilvanan.com/content/2008/09/12/20081012-junior-kelvi-pathil/

கிரேஸி பதில்

    கிரேஸி பதில்

 

‘’அழுத்திச் சொன்னால் அற்ப விஷயமும்-அரிய பொருளாகும்’’

என்பதற்கு சான்று தருக ?

 

‘’ தூணில் இருக்கிறான்’’ என்று மட்டும் சொல்லியிருந்தால்

குழந்தையின் பேச்சு’’ என்று பிரகலாதனை இரணியன் சும்மா

விட்டிருப்பான். அற்ப விஷயமான ‘’துரும்பிலும் இருக்கிறான்’’ என்று அழுத்திச் சொன்னதால்தான் அவன் ஆவேசமாகி தூணை உதைக்க, அரிய பொருளாம் அந்த ‘’அரி-பரம்பொருள் வெளி வந்தது.

 

 

நிறம் மாறும் ‘’பச்சோந்தி’’ மனிதனைப் பார்த்தால் என்ன

நினைக்கும்  ?’

 

‘’இவன் true-colour என்னவென்றே தெரியவில்லையே’’ என்று பச்சாதாபத்தோடு பார்க்கும் பச்சோந்தி.

 

 

படித்து ரஸித்தது-‘’கிரேஸியைக் கேளுங்கள்’’-கல்கி 31-8-08

செக்ஸ் எஜூகேஷன்

செக்ஸ் எஜூகேஷன்

 

பள்ளிக் குழந்தைகளுக்கு செக்ஸ் எஜூகேஷன் தேவையா ?

 

ஓஷோ சொன்ன கதைதான் ஞாபகம் வருகிறது. அதிகம் படிக்காத

பெண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான் ஒரு இளைஞன்.

வேலை நிமித்தமாக வெளியூர் போக வேண்டி வந்தது. அன்பை

எல்லாம் கொட்டி தன் மனைவி தனக்குக் காதல் கடிதம் எழுத

வேண்டும் என்று அவனுக்கு ஆசை.

 

கடிதங்களை ‘’ என் உயிரின் நாயகனே ‘’ என்று ஆரம்பிக்க

வேண்டும். ‘’தங்கள் சரணங்களில் தாசி’’ என்று முடிக்க வேண்டும்.

என்று ஊருக்குப் புறப்படும்முன் அவசரம் அவசரமாக மனைவிக்குக் கடிதம் எழுதக் கற்றுக் கொடுத்து விட்டுப் போனான்.

 

சில நாட்கள் கழித்து அவனுக்குக் கடிதம் வந்தது. ஆவலோடு

பிரித்தான்.’’என் சரணங்களின் தாசனே’’ என்று ஆரம்பித்து

‘’உங்கள் உயிரின் நாசகி ‘’ என்று கடிதம் முடிந்திருந்தது.

 

நீதி; கற்றுக் கொடுப்பதை ஒழுங்காக கற்றுக் கொடுக்க வேண்டும்.

அரை குறையாக கற்றுக் கொடுத்தால் விஷயம் விபரீதமாகி விடும்.

 

நன்றி; அரசு பதில்கள்- குமுதம் 8-1-98

கொய்யாக்கனி. . .

. “விடையவன் விடைகள்” என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில்
சொல்லி வந்தார் தமிழறிஞர் ஒருவர்; அவர் யார்?

விடையவன் விடைகள் – பதிலளித்து வந்தவர் திரு.கி.வா.ஜகன்னாதன்.

2. கொய்யாக் கனி என்ற பெயர் அக்கனிக்கு ஏன் எற்பட்டது?

கொய்யாக் கனி பிரேசில் நாட்டிலிருந்து வந்தது. அங்கே அதனை
Guayaha என்று வழங்குவார்கள். அதுவே திரிந்து கொய்யாக் கனியாயிற்று.

3. அருணகிரி நாதர் முருகனை, “சூர்க்கொன்ற ராவுத்தனே” என்று சொல்கிறார். ராவுத்தர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

ராவுத்தன் என்பது குதிரை வீரன் என்ற பொருளுடையது. அது ரவுத் என்னும் உருதுச் சொல்லிலிருந்து வந்தது. டாக்டர் ஐயரவர்கள் “ராவுத்தர்” என்ற
கட்டுரையில் இந்தச் சொல்லைப் பற்றிய ஆராய்ச்சியைத் தெரிவித்திருக்கிறார்கள்.

4. பேட்டி என்பது தமிழ்ச் சொல்லா?

அது உருதுச் சொல்லிலிருந்து வந்தது.

5. சீதக்காதி என்ற முஸ்லிம் வள்ளலுக்கு அதுவே இயற்பெயரா?

சையத் அப்துல் காதர் என்பது அவர் இயற்பெயர். அதுவே சீதக்காதி ஆயிற்று.

6. செங்கல்வராயன் என்ற பெயர் எந்தக் கடவுளைக் குறிப்பது?

செங்கல்வம் என்பது செங்கழுனீர். திருத்தணிகையில் ஒரு பொய்கையில்
மூன்று செங்கழுனீர் மலர்ந்ததனால் அதற்கு செங்கல்வகிரி என்று பெயர். அங்கே எழுந்தருளியிருக்கும் முருகனுக்குச் செங்கல்வராயன் என்றூ பெயர்.

7. உம்மாச்சி என்று குழந்தைப் பேச்சில் கடவுளைக் குறிக்கிறார்கள். அது
எப்படி வந்தது?

உமா மகேஸ்வரன் என்பதே அவ்வாறு வந்ததென்று காஞ்சி காமகோடி
பீடாபதி ஸ்ரீ சங்கராரிய சுவாமிகள் அருளியிருக்கிறார்.

8. தேவகுசுமம் என்பது என்ன?

கிராம்புக்குப் பெயர்

9. சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?

வட சொல்

 

நன்றி;http://simulationpadaippugal.blogspot.com/2006/02/blog-post_18.html

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers