
-
1) செய்வதைச் செய்வான்; சொன்னதைச் செய்யான்.
– அவன் யார்?
2) பிறக்கும் போது வால் உண்டு; இறக்கும் போது
வால் இல்லை. – அது என்ன?
3) பச்சை கதவு, வெள்ளை ஜன்னல், திறந்தால்
கருப்பு ராஜா – அது என்ன?
4) கையிலே அடங்குவார்; கதை நூறு சொல்லுவார்.
– அது என்ன?
5) ஒரு கிணற்றில் ஓரே தவளை! – அது என்ன?
-
===========================================
விடைகள்:-

1) கண்ணாடி
2) தவளை
3) சீத்தாபழம்
4) புத்தகம்
5) வாய்,நாக்கு








