கைதியாய்…

கண்களால்

என்னை கைது செய்!

உன் இதயச்

சிறையில் அடை!

ஆயுட் கைதியாய்

மட்டமல்ல,

கணவனாகவும்!

====================

>கி.திலகர்

-

காதல் ரசனை..!

நான் உனக்காகக் காத்திருக்கையில்

நீ என்னை பார்க்காமல்

சென்றாலும்…

நான் பார்த்து ரசிப்பேன்,

உன் பாதச் சுவடுகளை…!

=======================

>எஸ்.ஆல்வின் ஜேக்கப்

தியாகம்

-

தீ வைப்பது – நீ என்றால்

தேகம் எரிந்து

இறப்பதில் மகிழ்ச்சிதான்!

மெழுகுவர்த்தி

==========================

>து.மனோகரன்

கோலம் …!

http://tamilkudumbam.com/images/fbfiles/images/5231B_onam03.jpg

வேலை
——-

தேங்கிக் கிடக்கும்
கோப்புகளில்
சுறுசுறுப்பாக
வேலை பார்க்கிறது
சிலந்தி

>ப.உமாமகேஸ்வரி

==========================

கனவு
—–

குதிரையும் மாடும்
கனவு கண்டால்
ஒரு வேளை அது
மனிதர்களைக்
கவிழ்த்துப் போட்டு
லாடம் அடிக்கும்
கனவாகத்தான் இருக்கும்!

>கமருதீன்

==========================

கோலம்

————–

அவள் விரல் பட்ட
மயக்கத்தில்
வாசலில்
விழுந்து கிடக்கிறது
கோலம்>

>சி.பி.செந்தில்குமார்

==========================
நன்றி: குங்குமம்
படம்: வெப்துனியா

ஆயத்தம்..!

http://kovaikkavi.files.wordpress.com/2010/09/rainbow_umbrella.jpg?w=477

=

ஆயத்தம்
———
மழைக்காலத்தில்
கலப்பையை
தயார் செய்கிறார்கள்
கிராமத்தில்

குடையை
ரிப்பேர் செய்கிறார்கள்
நகரத்தில்!

>பெ.பாண்டியன்

=============================
நன்றி: குங்குமம்

 

உழைக்காதவன் மெத்தையில்..!

http://tamilkudumbam.com/images/fbfiles/images/Less_Sleep.jpg

=

தூக்க மாத்திரையும்
துணை செய்யவில்லை
உழைக்காதவன் மெத்தையில்!

===========================

கழுத்தில் கட்டிய தாலி
அசைந்தாடியது
பழைய காதலன் ஞாபகத்தில்.!

=============================
>அமீர் அப்பாஸ்

(படித்ததில் பிடித்தது)

நிலவில் பாட்டி!

-

பெயர் எனப்படுவது

-

எங்கள குடிசையில்

அடுப்பெரிந்து

ஆறு நாட்களாகிறது

இருந்தும்

எங்களின் பெயர் அன்றாடங்காய்ச்சி..!

>திருவைக்குமரன்

=======================================

பின் தொடர்ச்சி

-

எப்போதும்

வெள்ளை உடையில்

அப்பா!

அப்பாவின்

மறைவுக்குப் பின்

அம்மா!

>இரா.கமலக்கண்ணன்

-===================================

பாட்டி

-

அங்கு யார் கட்டியதோ

முதியோர் இல்லத்தை

நிலவில் பாட்டி!

>அதிரை புகாரி

==================================

நன்றி: குங்குமம் 13-12-10

அவள் சிரித்து விழுந்த முத்துகள்..!

http://tamilkudumbam.com/images/fbfiles/images/sneha.jpg

அள்ளிச் செல்ல
ஆளில்லை
அவள் சிரித்து விழுந்த முத்துகளை..!

==============================

“ஊரெல்லாம்
உறங்கிய நேரத்தில்
உறங்காமல் தெருவிளக்குகள்..!

===============================

நிற்கும் போதே
பறக்கிறேன்
நினைவில் நீ இருப்பதால்..!

===============================

அங்கும் இங்கும் அலைந்து திரிந்து
எப்படியோ  ஒரு கடிகாரம் வாங்கினேன்
நேரம் சரியில்லை என்றார் வீட்டு ஜோசியர்!

========================================

என் உயிரோடு உணர்வோடு
கலந்த அவள்!
கனவோடு இருக்கிறாள்
வடிவம் பெறாத உருவமாய்

======================================
PagesPosted by Ashok
நன்றி: http://ashok-kavithaigal.blogspot.com

நம்மை பேச வைப்பவள்…!

=

அவள் ஒரு நிலா…!

பேச மாட்டாள்

நம்மை பேச வைப்பாள்!

>ஈரோடு இறைவன்

————————————————–

(படித்ததில் பிடித்தது)

அதிக பட்ச மந்திரிகள்…!

 

 

எத்தனை தடவை கொள்ளையடிப்பது

ஒரே வீட்டில்

உன் கண்கள்

-=============================

ஐந்தில் வளையாத்து

ஐம்பதில் வளைந்தது

முதியோர் கல்வி

-

அறுக்க மாட்டாதவன் இடுப்பில்

ஐம்பத்தெட்டு அரிவாள்

அதிக பட்ச மந்திரிகள்

-===============================

அமாவாசையானது

நிலவு

எதிர்வீட்டு சன்னலில்.

===============================

நன்றி:

Kummacchi.blogspot..com/2010/09/4

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers