வினா-விடை ! -பாரதியார்

இன்றைய பத்திரிக்கைகளின் வினா-விடைப் பகுதிகளுக்கு முன்னோடி, இலக்கிய உலகில் பல புதுமைகளுக்கு வித்திட்ட மகாகவி பாரதி என்றுதான் சொல்லவேண்டும். தன்னுடைய பத்திரிக்கையிலே, கட்டுரைகளின் மூலம் பலரின் வினாக்களுக்கு விடையளித்து வந்திருக்கிறார் பாரதி.

எடுத்துக்காட்டாக, ஒரு கேள்வியும் அதற்கு பாரதி அளித்த பதிலும்: ‘எல்லா சான்றோர்களும் சினத்தை கைவிடச் சொன்னால், நீங்கள் ‘ரெளத்திரம் பழகு’ என்று எழுதியிருக்கிறீர்களே ஸ்வாமி?’ இது கேள்வி.

பாரதி தன் பதிலை ஒரு கதை மூலம் தருகிறார்.  ஒரு ஊரில் ஒரு பாம்பு எல்லோரையும் கடித்துத் துன்புறுத்தி வந்தது. ஊரார் அந்தப் பாம்பிற்கு பால், முட்டை என்று தாரளமாகத் தந்து, அதை யாரையும் கடிக்காமல் இருக்கும்படி வேண்டி, விண்ணப்பித்தினர்.   இருந்தும், தொடர்ந்து பாம்பு தொல்லை தந்து வந்தது. அப்போது, அந்த ஊருக்கு ஒரு மகரிஷி வந்தார். ஊராரின் வேண்டுதலுக்கிணங்க அவர் பாம்பிடம், ‘யாரையும் இனிமேல் கடிக்கக்கூடாது, கடித்தால் நீ இறந்துவிடுவாய்!’ என்று கட்டளையிட்டுவிட்டு, வேறோர் ஊருக்குச் சென்றுவிட்டார்.   ஒரு வாரம் கழித்து, அந்த மகரிஷி அதே ஊருக்குத் திரும்பி வந்தபோது, அதே பாம்பு வாடி, வதங்கி, சோம்பிக் கிடந்தது. மகரிஷியைக் கண்டதும், ‘ஸ்வாமி, முன்பெல்லாம் நான் நன்றாய் இருந்தேன். கடிக்கக் கூடாதென்று கட்டளையிட்டீர்கள். இப்போதெல்லாம் ஒருவரும் என்னைக் கண்டுகொள்வதில்லை. பாலில்லை, முட்டையில்லை. என் அவல நிலையைப் பார்த்தீர்களா?’ என்று புலம்பியது.  மகரிஷி சொன்னார்: ‘நான் உன்னை மனிதர்களைக் கடித்து, அவர்களைப் பிணமாக்க வேண்டாமென்றுதான் சொன்னேன். அவர்களைப் பார்த்து சீற வேண்டாமென்று சொன்னேனா? நீ கடிப்பதுபோல் அச்சுறுத்தி, சீறியிருக்க வேண்டியதுதானே? அப்படிச் செய்திருந்தால், உனக்கும் கொண்டாட்டம். உயிர்களும் பிழைக்கும்.’

“அதுபோல், நான் ‘ரெளத்திரப்படு’ என்று சொல்லவில்லை. ‘ரெளத்திரம் பழகு’ என்றுதான் சொன்னேன். சிறுமைகளைக் கண்டு சீறச் சொன்னேன். ரோஷத்துடன் இரு என்றேன். இதில், என்ன தவறு?” என்று பாரதி ஒரு counter-question கேட்டு முடித்திருக்கிறார்.

**********************

நன்றி; http://www.ilakkyavattam.com/talks-05

நின்னையே ரதியென்று. . .

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன் ஆ ஆ ஆ ஆ..

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.

தத்தத்தோம் தரிகிடதோம் தளாங்குதோம்.
தகதிமிதோம் தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்
தரிகிட தரிகிட தரிகிட தரிகிட தோம் தத்தத்.

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்… ஆஆ…

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்… ஆஆ…

பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பொன்னையே நிகர்த்த மேனி, மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே.. கண்ணம்மா
பின்னையே நித்ய கன்னியே..

மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி
மாரனம்புகள் என்மீது வாரி வாரி வீசடி

கண்பாரயோ.. வந்து சேராயோ.. கண்ணம்மா.

யாவுமே சுக முனிபோல் ஈசனாம் எனக்கும் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே கண்ணம்மா,

கண்ணம்மா கண்ணம்மா

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி கண்ணம்மா,
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்.

**********************************

பாடல் வரிகள் : பாரதியார்
இசை : இளையராஜா

http://ganakandharvan.blogspot.com/2008/07/blog-post_22.html

நின்னையே ரதியென்று

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடிகண்ணம்மா
தன்னையே சசியென்று சரணம் எய்தினேன்
(
நின்னையே)

பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா

மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீசநீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா

யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
(
நின்னையே)

வரிகள்: சுப்ரமணிய பாரதியார்
படம்: கண்ணே கனியமுதே

காற்று வெளியிடைக் கண்ணம்மா

காற்று வெளியிடைக் கண்ணம்மாநின்றன்
காதலை எண்ணிக் களிக்கின்றேன் -அமுது
ஊற்றினை ஒத்த இதழ்களும்நிலவு
ஊறித் ததும்பும் விழிகளும்பத்து

மாற்றுப்பொன் ஒத்தநின் மேனியும்இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும்எனை
வேற்று நினைவின்றித் தேற்றியேஇங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே! இந்தக்
(
காற்று)

நீயெனது இன்னுயிர் கண்ணம்மா! – எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன்துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்எனக் கொண்ட பொழுதிலேஎன்றன்

வாயினிலே அமு தூறுதேகண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலே
கண்ணம்மா ம்ம்ம்
கண்ணம்மா ம்ம்ம்கண்ணம்மா
என்ற பேர்சொல்லும் போழ்திலேஉயிர்த்
தீயினிலே வளர் சோதியேஎன்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே! – இந்தக்
(
காற்று)

படம்: கப்பலோட்டிய தமிழன்
வரிகள்: பாரதியார்

 

காதல்

மகாகவி பாரதியார் காதலைப் பற்றி இப்படிச் சொல்கிறார்.
காதலினாலுயிர் வாழும் – இங்கு
காதலினால் உயிர் வீரத்தில் ஏறும்
காதலினால் அறிவுண்டாகும் – இங்கு
காதல் கவிதைப் பயிரை வளர்க்கும்
ஆதலினால் அவள் கையைப் – பற்றி
அற்புதம் என்றிரு கண்ணிடை ஒற்றி
வேதனை இன்றி இருந்தேன்……..


(காதற்பாட்டு, அந்திப்பொழுது -
பாரதியார் பாடல்கள்
)