Reasons Not To Mess With Children

A little girl was talking to her teacher about whales.

The teacher said it was physically impossible for a
whale to swallow a human because even though it
was a very large mammal its throat was very small.

The little girl stated that Jonah was swallowed
by a whale.

Irritated, the teacher reiterated that a whale could
not swallow a human; it was physically impossible.

The little girl said, ‘When I get to heaven
I will ask Jonah’..

The teacher asked, ‘What if Jonah went to hell?’

The little girl replied, ‘Then you ask him’.

———————————————————————-

One day a little girl was sitting and watching her mother
do the dishes at the kitchen sink. She suddenly noticed t
hat her mother had several strands of white hair sticking
out in contrast on her brunette head.

She looked at her mother and inquisitively asked,
‘Why are some of your hairs white, Mum?’

Her mother replied, ‘Well, every time that you do something
wrong and make me cry or unhappy, one of my hairs
turns white.’

The little girl thought about this revelation for a while and
then said, ‘Mummy, how come ALL of grandma’s hairs
are white?’

——————————————————————————

The children had all been photographed, and the teacher
was trying to persuade them each to buy a copy of the
group picture.

‘Just think how nice it will be to look at it when you are
all grown up and say, ‘There’s Jennifer, she’s a lawyer,’ or
‘That’s Michael, He’s a doctor.’

A small voice at the back of the room rang out,
‘And there’s the teacher, she’s dead.

————————————————————————–

A teacher was giving a lesson on the circulation of the blood.
Trying to make the matter clearer, she said, ‘Now, class, if
I stood on my head, the blood, as you know, would run into it,
and I would turn red in the face.’

‘Yes,’ the class said.

‘Then why is it that while I am standing upright in the
ordinary position the blood doesn’t run into my feet?’

A little fellow shouted,

‘Cause your feet ain’t empty.’

——————————————————————————

God is watching. . .

The children were lined up in the cafeteria of a Catholic
elementary school for lunch. At the head of the table was
a large pile of apples. The nun made a note,
and posted on the apple tray:

‘Take only ONE . God is watching.’

Moving further along the lunch line, at the other end of the
table was a large pile of chocolate chip cookies.

A child had written a note, ‘Take all you want..
God is watching the apples.’

—————————————————————————-

The Honest Priest..

A distinguished young woman on a flight from Switzerland said to the priest beside her,”Father, may I ask a favor?”

 

“Of course. What may I do for you?”

“Well, I bought an expensive electronic hair remover that is well over the Customs limits and I’m afraid they’ll confiscate it.

Is there anyway you could carry it through Customs for me? …Under your robes perhaps?”

“I would love to help you, dear, but I must warn you: I will not lie.”

“With your honest face, Father, no one will question you.”

When they got to Customs, she let the priest go ahead of her.The official asked, “Father, do you have anything to declare?”
“From the top of my head down to my waist, I have nothing to declare.”

The official thought this answer strange, so asked,”And what do you have to declare from your waist to the floor?”

“I have a marvelous little instrument designed to be used on a woman, which is, to date, unused.”

Roaring with laughter, the official said, “Go ahead, Father.”…….Next!”
—————————————————————

Thanks: www.funnyclick.blogspot.com

தொப்பை கரைய . . .(சிறுவர் கதை)

தொப்பை கரைச்சான் லேகியம்..

திடீரென்று குரு பரமார்த்தரின் தொப்பை பெரிதாகிக் கொண்டே
போனது. வைத்தியரிடம் போனால் நிறைய செலவாகும், அதனால்
நாமே லேகியம் தயாரிக்லாம் என்றான் ஒரு சீடன் .

பழைய ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துப் படித்துப் பார்த்தனர்.

“குருவே! தொப்பை கரைச்சான் லேகியம் என்பது பற்றி இதிலே
எழுதியிருக்கு! இதில் குறிப்பிட்டிருக்கும் செடிகளை நாங்கள்
கொண்டு வருகிறோம்” என்று காட்டுக்குச் சென்றனர்.

முனிவர் ஒருவர் ஒட்டிய வயிறுடன் தவம் செய்து கொண்டிருந்தார்.

அவரைக் கண்ட சீடன் மட்டி, இவர் வயிறு இவ்வளவு ஒட்டி இருக்கிறதே
என்று ஆச்சரியப்பட்டு அவரிடம் போனான்.

“முனிவரே! இந்தச் செடிகளில் தொப்பை கரைச்சான் செடி எது
என்று தெரியுமா?” என்று பலமாகக் கத்தி அவரது தவத்தைக் கலைத்தான்.

கோபம் கொண்ட முனிவர், “எந்தச் செடி நாறுகிறதோ, அதுதான் நீ
கேட்கும் செடி!” என்று வேண்டுமென்றே சொல்லி அனுப்பினார்!

அதன்படி, நாறும் இலைகளை பறித்து வந்து லேகியம் தயாரித்து
குருவுக்கு கொடுத்தனர்.

பரமார்த்தர் தம் தொப்பையைக் கரைப்பதற்காக ஏதோ ஒரு லேகியம்
சாப்பிடுவதாகக் கேள்விப்பட்ட ஊர் மக்களில் சிலர், தாங்களும்
அந்த லேகியத்தைச் சாப்பிட ஆசைப்பட்டனர்.

அந்த நாட்டு அரசனுக்கும் பெரிய தொப்பை இருந்ததால், அவனும்
பரமார்த்தர் தயாரித்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு விட்டான்.

தொப்பை கரைச்சான் லேகியம் என்று நினைத்து, கண்டதையும் சாப்பிட்டதால்,
அனைவருக்கம் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு விட்டது.
எல்லோரும் விழுந்தடித்துக் கொண்டு ஏரிக் கரைக்கு ஓடினார்கள்.

மன்னரின் நிலைமையும் மோசமாகி விடவே, பரமார்த்தர் மீது கோபம்
கொண்டார்.

இத்தனைக்கும் காரணமான அந்தக் குருவைப் பத்து நாட்களுக்குச்
சிறையில் அடைத்துப் பட்டினி போடுங்கள்!” என்று ஆணையிட்டான்.

தண்டனை முடிந்து சிறையிலிருந்து தள்ளாடியபடி வந்த குருவைக்
கண்ட சீடர்களுக்கு வியப்பாகப் போயிற்று. முன்பு வீங்கியிருந்த
அவரது தொப்பை இப்போது கரைந்து அளவாக இருந்தது.

“குருவே! நாங்கள் தயாரித்த லேகியம் தான் உங்கள் தொப்பையைக்
கரைத்திருக்கிறது” என்று சீடர்கள் பெருமையோடு சொன்னார்கள்.

“லேகியமாவது, மண்ணாங்கட்டியாவது! சோறு தண்ணீர் இல்லாமல்
பத்து நாட்கள் சிறையில் பட்டினி கிடந்தேன். அதுதான் இப்படி
ஆகிவிட்டேன்!” என்றபடி பசிக் களைப்பால் சுருண்டு விழுந்தார்,
பரமார்த்தர்.
—————————————————————————————

——————————————

தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்…

ரா.பார்த்திபனின் கிறுக்கல்கள் இதழில் இருந்து………………..

தோஷம்: சர்ப்ப தோஷம்

பரிகாரம்: வெள்ளிக் கிழமை தோறும் புற்றுக்கு பால் ஊற்றி,
முட்டை வைக்க வேண்டும்.

என் பிரகாரம்: தினந்தோறும் ஆதரவற்ற இல்லங்களுக்கு சென்று,
இயன்ற போதெல்லாம் முட்டையும் பாலும் கொடுக்க வேண்டும்.

—————————————————————————————–

தோஷம்: செவ்வாய் தோஷம்

பரிகாரம்: வாழை மரத்தை வெட்டி விட்டு, பெண்ணுக்கு தாலி
கட்ட வேண்டும்.

என் பிரகாரம்: வாழை மரத்தை விட்டு விட்டு, வசதி இல்லாத
பெண்ணுக்கு மனமறிந்து மணம் முடித்து வைக்க வேண்டும்.

—————————————————————————————

தோஷம்: புத்திர தோஷம்

பரிகாரம்: அரசமரத்தை சுற்றி விட்டு, குழந்தை உருவ பொம்மை
செய்து தொட்டிலில் போட்டு ஆட்ட வேண்டும்.

என் பிரகாரம்: யாரோ பெற்று குப்பை தொட்டியில் போட்ட குழந்தையை
எடுத்து வந்து, நெஞ்சில் ஊறும் பாசம் ஊட்டி வளர்க்க வேண்டும்.

—————————————————————————————-

தோஷம்: சனி தோஷம்

பரிகாரம்: ஆஞ்ச நேயருக்கு துளசி மாலை போட்டு அபிஷேகம்
செய்ய வேண்டும்.

என் பிரகாரம்: மன வளர்ச்சி குன்றியவர்களுக்கு, மருந்து மாத்திரை
வாங்கித் தர வேண்டும்.

—————————————————————————————–

தோஷம்: பாத சனிக்கு

பரிகாரம்: திரு நள்ளாறு சென்று எள் தீபம் ஏற்ற வேண்டும்.

என் பிரகாரம்: வெய்யிலில் பாதம் வெடிக்க வேலை செய்யும்
தொழிலாளிகளுக்கு பாத அணிகள் வழங்க வேண்டும்.

——————————————————————————————

தோஷம்: ஆயுள் தோஷம்

பரிகாரம்: பிரம்மா, விஷ்ணு, சிவனுக்கு முப்பூஜை செய்ய வேண்டும்.
குல தெய்வத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

என் பிரகாரம்: ஆயுள் முடிவான எய்ட்ஸ் குழந்தைகளை இருக்கும்
வரை சிரிக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
மூன்று மாதத்திற்கு ஒரு முறை இரத்ததானம் செய்ய வேண்டும்.

—————————————————————————————-

கோவிலில் வரம் கொடுக்கும் கடவுள்கள் அப்படியே இருக்கட்டும்.
வாசலில் கையேந்தும் கடவுள்களை மட்டுமாவது இல்லாமல் செய்ய
வேண்டும். இது தேஷதோஷம் தீர ஒரு பரிகாரம்.

நன்றி: கிறுக்கல்கள், ரா.பார்த்திபன

மிஸ்டர் தலைவர்!

தலைவர் வேகமா ஓடிட்டே ஓட்டுக் கேட்கிறாரே?

அவ்வளவு அவசரமா?

நின்னு கேட்டா அவருக்கு உதை விழுமே!

>எஸ்.ஏ.பி.கற்பகம்

————————————————————————-

சபை முடியும் வரைக்கும் தலைவர் ஏன் வாயைத்

திறந்துகிட்டு உட்கார்ந்துகிட்டு இருக்கிறார்?

சபையில் தலைவர் வாயைத் திறக்கவேயில்லை-ன்னு

யாரும் சொல்லிடக் கூடாதாம்!

>தளிகை ஏ.டி.தமிழ்மணி

———————————————————————————

மீட்டிங்ல என்ன அந்தச் சின்ன பையன் நம்ம தலைவரை
‘நாசமா போய்டணும்’ னு திட்றான்?

அவனுக்கு தலைவரை வாழ்த்த வயதில்லையாம்!

>வி.சாரதிடேச்சு

———————————————————————————-

உங்க தலைவருக்கு மண்ணாசையே கிடையாதுன்னு

எதை வச்சி சொல்றிங்க?

ஆளுங்களை வச்சி ஆத்துல அள்ளுற மணலையெல்லாம்

உடனே வித்துடறாரே!

>நாகலட்சமி கருணாநிதி

——————————————————————————–

நம்ம கட்சி காலியாகிக்கிட்டே வருது தலைவரே!

இருக்கட்டுமே, நானும் ஒரு காலத்துல காலியா

திரிஞ்சவன்தானே!

>அ.பேச்சியப்பன்

————————————————————————————

நன்றி; குமுதம் 2-12-09

முட்டாள் எப்போது அறிவாளி ஆகிறான்?

அறிவாளி எப்போது முட்டாள் ஆகிறான்? முட்டாள் எப்போது
அறிவாளி ஆகிறான்?

அறிவாளி தன்னை அறிவாளி என்று நினைக்கிற போதெல்லாம்
முட்டாள் ஆகிறான்! முட்டாள் தன்னை முட்டாள் என்று
உணர்கிற போதெல்லாம் அறிவாளி ஆகிறான்!

———————————————————————————————

மதுவும் – மாதுவும் ஒன்றுதானே?

ஏதோ ஒன்றில் மயங்கியிருக்கிறீர்கள்… அதனால்தான் உங்களுக்கு
இரண்டும் ஒன்றாகத் தெரிகிறது. எனக்கு அப்படி இல்லை… எனக்கு
எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறது!

———————————————————————————————–
தென்கச்சி எந்த மாவட்டத்தில் இருக்கிறது? அந்த ஊரின் சிறப்பு
அம்சம் என்ன?

உங்கள் ஊர் (கேள்வி கேட்டவர் ஸ்ரீரங்கம்) எந்த மாவட்டத்தில்
இருக்கிறதோ அதே மாவட்டத்தில்தான் இருக்கிறது. அப்படியிருந்தும்
கூட அது இன்னும் உங்களுக்கு எட்டாமல் இருக்கிறதே அதுதான்
அதன் சிறப்பு அம்சம்!

———————————————————————————————

விதி என்பது என்ன? விளக்கம் தருக.

ஒருத்தன் ஒரு அம்மையாரை பார்த்து, “தாயே” என்றான்.
உடனே அந்த அம்மையார் இவனைப் பளாரென்று அறைந்து விட்டார்கள்!
என்ன காரணம்?

இவன் ‘தாயே’ என்று அழைத்தது அந்த அம்மையார் காதில் ‘நாயே’
என்று விழுந்து விட்டது!
இதற்கு என்ன விளக்கம்? விதி! அவ்வளவுதான்!

——————————————————————-

நன்றி;

தென்கச்சி பதில்கள்

———————————————————————————

மோதிரம் மாத்திக்க மறுத்தவள்!

“நாம ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயி மோதிரம் மாத்திக்கலாமா?”

“வேண்டாம்”

“ஏ‎ன்?”

“எ‎ன் மோதிரம் நாலு கிராம்; உன் மோதிரம் ரெண்டு கிராம்தானே!!”

———————————————————————————————

“டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல ‏இருக்கு.”

“அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு
இருக்கோம்?”

———————————————————————————————

“நம்ம காதலை வீட்டுல மெதுவாப் பேசி ஆரம்பிச்சி வச்சிட்டே‎ன்!”

“அப்படியா! அதுக்கு எ‎ன்ன ரெஸ்பா‎ன்ஸ்?”

“மெதுவா சொன்னதால அது யார் காதிலயும் விழல..
நா‎ன் இப்ப என்ன செய்ய..?”

———————————————————————————————-

நாம பெரிய ஆளா வரணும்னா ஏற்கெனவே பெரிய ஆளா‏ இருக்கறவங்க
கூட கை கோர்த்துக்கணுமாம்.

“அப்படியா! வித் ப்ளெஷர்! நீ எ‎ன் கூட கை கோர்த்துக்கறதுல
எனக்கு எந்த ஆட்சேப‎னையும் இல்ல..!”

——————————————————————————————-

“நான் சீசனுக்கு சீசன் வியாபாரத்தை மாத்திடுவேன்”

“இப்போ என்ன வியாபாரம் பண்றே?”

“செருப்பு வியாபாரம். நல்லா சேல்ஸ் ஆகுது. முக்கியமா பிரஸ்
மீட் நடக்குற இடங்கள்ல..!!”

———————————–

மனைவிகள் ஜாக்கிரதை!

- உங்கள் கணவர் குறட்டை விடுபவரா? மனைவிகள் ஜாக்கிரதை!

 

வெளியே மட்டும் போயீட்டீங்கன்னா போச்சு

—————————————————-
posted by ஜோசப் இருதயராஜ்
நன்றி; http://josaph.blogspot.com

// <![CDATA[//

தவளைக்குக் காது கேட்காது!

 

=======================================
ஒரு ஆராய்ச்சியாளர் தவளையை வைத்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தார். அவர் அதைத் “தாவு” என்று சொன்னால் அது தாவும்படி பழக்கியிருந்தார்.

 

ஆராய்ச்சியில் அதன் கால்களில் ஒன்றை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் தவளை மூன்று கால்களால் கஷ்டப்பட்டுக் குதித்தது.

அடுத்து இன்னொரு காலை வெட்டிவிட்டு, தாவு என்றவுடன் அப்போதும் கஷ்டப்பட்டு குதித்தது.

மூன்றாவது காலை எடுத்ததும் மிகுந்த வலியுடன் ஒற்றைக்காலால் குதித்து எப்படியோ தாவியது.

கடைசியாக நாலாவது காலையும் அவர் வெட்டிவிட்டு, தாவு என்றார்.

நகரவே முடியாமல் தவளை பரிதாபமாக விழித்தது. தவளை அசையவே இல்லை. அவர் தன் ஆராய்ச்சி முடிவில் எழுதினார்,

“நான்கு கால்களையும் எடுத்து விட்டால் தவளைக்குக் காது கேட்காது”

இப்படித்தான் பிரச்சினைகளின் உண்மையான காரணங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தவறான முடிவுகளுக்கு வந்துவிடுகிறார்கள்.

—————————————–
(படித்ததில் பிடித்தது)

« பழைய வரவுகள்