ஜோக்குகள்

நோயா‌ளி: தினமு‌ம் ஒரு ப‌ச்சை மு‌ட்டை சா‌‌ப்‌பிடனுமா…
எ‌ன்னால முடியாது டா‌க்ட‌ர்.

டா‌‌க்ட‌ர்: ஏ‌ன் முடியாது?

நோயா‌ளி: ஏ‌ன்னா எ‌ங்க ‌வீ‌ட்டு கோ‌ழி வெ‌ள்ளை
மு‌ட்டைதா‌ன் போடு‌ம்.

————————————————————————————————–

ஒருவ‌ர்: இரும‌ல்‌ன்னு சொ‌ல்‌லி‌க்‌கி‌ட்டு டா‌‌க்ட‌ர்‌கி‌ட்ட செ‌ன்‌றாயே
அவ‌ர் எ‌ன்ன சொ‌ன்னா‌‌ர்?

ம‌ற்றவ‌ர்: இது இரும‌‌ல்தா‌ன்னு… அவரு‌ம் ஒ‌த்து‌க்‌கி‌ட்டா‌ர்.

—————————————————————————————————

கடை‌க்கார‌ர்: ம‌ளிக‌ை கடை‌யில வேலை பா‌ர்‌‌த்தவனை மரு‌‌ந்து
கடை‌யில வேலை‌க்கு வை‌த்தது ரொ‌ம்ப த‌ப்பா போ‌‌ச்சு.

ம‌ற்றவ‌ர்: ஏ‌ன் அ‌ப்படி சொ‌‌ல்‌‌றீ‌ங்க.

கடை‌க்கார‌ர்: எதை எடு‌க்க‌ச் சொ‌ன்னாலு‌ம் எ‌த்தனை ‌கிலோ
வே‌ணு‌ம்னு கே‌ட்‌‌கிறா‌‌ன்.

——————————————————————————————————

தொ‌‌ண்ட‌ர்: ந‌ம்ம தலைவ‌ர் ஏ‌ன் ‌திடீ‌ர்னு மரு‌த்துவமனை
க‌ட்டுகிறா‌ர்.

ம‌ற்றவ‌ர்: அவரு‌க்கு டா‌‌க்ட‌ர் ப‌ட்ட‌ம் கொடு‌க்‌கிறா‌ங்களா‌ம்…
அதா‌ன் தொ‌ழிலை ஆர‌ம்‌பி‌‌ச்சுடலா‌ம்னு பா‌ர்‌க்‌கிறாரு.

—————————————————————————————————–

“டாக்டர் தலைவலிக்கு நல்ல மருந்து எழுதிக் கொடுங்க!”

“தலைவலியைப் போக்கத்தான் என்னால மருந்து தரமுடியும்.
தலைவலி வேணுமின்னா போய் டி.வி. பாருங்க.”

——————————————————————————————————-
Posted by gowtham
http://gowtham-myaim.blogspot.com/2009/05/blog-post_10.html

தலை கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு !?

நோயாளி : எனக்கு எப்ப உடம்புக்கு சரியில்லாமல் போனாலும் நான் உங்ககிட்டே தான் டாக்டர் வருவேன்!

டாக்டர் : காரணம் …!

நோயாளி : உங்களுக்கு வர்ற ஒரே ஒரு பேஷண்டையும் அவளவு சீக்கிரம் சாகடிக்க மாடீங்கக்கிற நம்பிக்கையால் தான் !


நண்பர் 1: என்ன சார் தலை கொழுக்கட்டை மாதிரி வீங்கியிருக்கு ?

 

நண்பர் 2: இனிமே ‘அடிக்கவே மாட்டேனு’ என் மனைவி தலையில் அடிச்சு சத்தியம் பண்ணினா!


மனைவி : என்னங்க இது, நாம காஷ்மீருக்கு போறதுக்கு ஒரே ஒரு டிக்கெட் வாங்கிட்டு வந்திருன்கீங்க ?

 

புருஷன் : அடடே! சந்தோசத்துல என்னையே மறந்துடேன்!


நண்பர் : நீங்க போன பந்தியிலேயே உட்கார்ந்த மாதிரி தெரிஞ்சுதே ?

 

மற்றவர் : என்ன பண்றது … பொண்ணு, மாப்பிளை ரெண்டு வீட்டுக்கும் நான் தெரிஞ்சவனா போயிட்டேன் !


காதலன் : ஒரு நாளைக்கு நான் ஒரு பொய் தான் சொல்லுவேன்

 

காதலி : அப்படியா…அப்ப இன்னிக்கு கோட்டா முடிச்சு போச்சு ..!?


காதலி : நம் பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்! இல்லையேல் தற்கொலை! சரிதானே அத்தான் ?

 

காதலன் : ரெண்டும் ஓன்று தான் !

——————————————-

(வார இதழ்களில் படித்தவை)

Posted by Kolipaiyan

http://kolipaiyan.blogspot.com/2009/08/blog-post_19.html

யாருக்காக இந்தக் குறள்?

அண்ணாதுரை
கா. ந. அண்ணாதுரை

நாட்டுடமையாக்கப்பட்ட தமிழ்நாடு அரசு போக்குவரத்துப் பேருந்துகளிலெல்லாம் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெறச் செய்தார் அண்ணா.

திருவள்ளுவர் படமும், திருக்குறளும் பேருந்தில் இடம்பெற்றதைக் கேலி செய்து எதிர்க்கட்சியினர் பேசியபோதெல்லாம் அண்ணா தகுந்தவாறு பதிலளித்தார்.

ஒரு முறை எதிர்க் கட்சி உறுப்பினர் ஒருவர் தந்திரமாக ஒரு கேள்வியைக் கேட்டார்.

பேருந்தில் யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு என்று குறிக்கப்பட்டுள்ள குறள் யாருக்காக? டிரைவருக்காகவா? கண்டக்டருக்காகவா? பிரயாணம் செய்கின்ற பொதுமக்களுக்காகவா?

இக்கட்டான நிலையில் அண்ணா அகப்பட்டுத் தவிக்க வேண்டும் என்று எண்ணி எழுப்பப்பட்டக் கேள்வி இது!

டிரைவர் . . . கண்டக்டருக்காக என்றால் தொழிளாளர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும்.

பொதுமக்களுக்காக என்றால் மக்களின் கண்டனத்துக்கு உள்ளாக வேண்டும்.

இந்த கேள்விக்கு அண்ணா கொடுத்த பதில் சாதுர்யமானது மட்டுமல்ல – மிகவும் நுணுக்கமானதுமாகும்.
நாக்கு உள்ளவர்கள் எல்லோருக்காகவும் எழுதி வைக்கப்பட்டுள்ளது என்று பதில் கூறினார்.

இந்த உடனடியான பதில் கேள்வி கேட்டவரை மட்டுமல்ல, அனைவரையுமே அதிர வைத்துவிட்டது. இதைப் போல பொருத்தமாகத் தெளிவுடன் உடனே பதில் சொல்லும் அறிவாற்றல் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. இது அவரிடம் மிகுதியாக அமைந்திருந்தது.

—————————————————————-

நன்றி;

http://www.arignaranna.info/arasiyal_main.asp?flag=11

ஒரு கதை . . .

இந்த கதை சமீபத்துல ஜெயா டிவி ல சொன்னாங்க……….

ஒரு ஊருல ஒரு புருஷன் பொண்டாட்டி, முணு புள்ளைங்கன்னு ஒரு குடும்பம் .

புருஷன் பொண்டாட்டிக்குள்ள அடிக்கடி சண்டைவரும் பொண்டாட்டிகாரி சொல்லுறா ,… இந்த வீட்டுக்கு நான்தான் அதிக வேலை செய்யுறேன் துணி தொவைக்கிறது,சமைக்கிறது ,புள்ளைங்கள கவனிக்கிரதுன்னு எனக்குதான் வேலை அதிகம்னு .
புருஷன் சொல்லுறான் …. நான்மட்டும் என்ன ? சும்மாவா இருக்கேன் ,இந்த குடும்பத்துக்காகத்தான் மாடா உழைக்கிறேன் வெயில்லயும் மழைல அலைஞ்சு திரிஞ்சு வேலை செய்யுறேன் அப்படின்னு …

சண்டை அதிகரிச்சுகிட்டே போகுது இவங்க சத்தம் தாங்க முடியாம ,அவங்க முன்னாடி கடவுள் தோன்றுகிறார்!
ஏன் இப்படி சண்டை போடுறீங்க என்ன விவரம்ன்னு கேக்குறார் ?
ரெண்டுபேரும் நான்தான் அதிக வேலை செய்கிறேன் !!நான்தான் அதிக வேலை செய்கிறேன் !! அப்படின்னு சொல்லுறாங்க .

உடனே கடவுள் ஒரு யோசனை சொல்லுறார் ,,, அதாவது புருஷனை பொண்டாட்டியாகவும்,பொண்டாட்டியை புருஷனாகவும் மாத்திடுறேன் புருஷன் வேலைய பொண்டாட்டியும் ,பொண்டாட்டி வேலைய புருசனும் பாருங்க யாருக்கு வேலை அதிகம்னு உங்களுக்கே புரியும்னு சொல்லுறார் .

ரெண்டுபேரும் ஒத்துகிறாங்க !! அதுபோல கடவுள் ரெண்டுபேரையும் மாத்திடுறார்

இப்போ புருஷன் காரன் காலைல சீக்கிரம் எழுந்து புள்ளைங்கள ஸ்கூலுக்கு கிளப்பிவிட்டு ,டிபன் பண்ணி ,பாத்திரம் கழுவி , புருஷனை வேலைக்கு அனுப்பி ,வீடுபெருக்கி ,மதியம் சாப்பாடு பண்ணி , புள்ளைங்களுக்கு மதிய சாப்பாடு கொடுத்து , அப்புறம் மாலை ஆனதும் துணி தொவைச்சு ,அப்படி இப்படின்னு பெண்டு நிமிருது !!

கொஞ்சநாள் கழிச்சு புருஷன் ஒத்துகிறான் பொண்டாட்டிக்குதான் வேலை அதிகம்னு !

அவனால சமாளிக்க முடியாம கடவுள் கிட்ட போய் என்னால முடியல மறுபடியும் என்ன ஆம்பிளையா மாத்திடுங்கன்னு !

உடனே கடவுள் இதுக்குதான் அவங்க அவங்க வேலைய அவங்களே செய்யணும்

அடுத்தவங்க வேலையே சாதாரணமா நினைக்க கூடாதுன்னு சொல்லுறார் !!

அவனும் ஒத்துகிறான் ……………….

சரி… கதை இதோட முடிஞ்சுதா ?
அதுதான் இல்ல !

சரி என்னை ஆம்புளையா மாத்துங்க ன்னு சொல்லுறான்
அதுக்கு கடவுள் என்ன சொன்னார் தெரியுமா ?
இப்போ நீ கர்ப்பமா இருக்கே இப்போ மாத்த முடியாது !! பிரசவம் முடிஞ்சு வா !!

————————————————-

Posted by ஜீவன்

நன்றி; http://pirathipalippu.blogspot.com/2009/02/blog-post_14.html

“சீரியல்” நடிகை ஏன் அழுதார்?

நீங்க நடிச்ச சீரியலைப்பார்த்து நீங்களே அழறீங்களே ஏன்?

சம்பள பாக்கியை நினைச்சுக்கிட்டேன்!

———————————————————————————–

படம் முடியப் போகுதுன்னு எப்படி சொல்றே?

இவ்வளவு நேரம் மாடர்ன் உடையில் வந்த கதாநாயகி புடவை கட்டிக்கிட்டு
வருகிறாளே, அதான்!

———————————————————————————

நாளைக்கு எங்க அம்மா ஊர்லேர்ந்து வராங்க விமலா!

நேற்றே சொல்லியிருந்தா வேலைக்காரிக்கு லீவு கொடுத்து
அனுப்பி இருப்பேன்ல!

———————————————————————————–

நம்ம காதலைப்பற்றி எங்க அப்பாகிட்டே சொன்னா ‘கதல்’ ஆக்கிடுவாரோன்னு
பயமா இருக்கு!

என்ன சொல்றே டார்லிங்!

காலை முறிச்சுடுவாரேன்னூ சொல்றேன்!

————————————————————————————–

பத்து வருஷமா கள்ள நோட்டு அடிச்சுக்கிட்டு வர்றே.
இப்ப தீடீர்னு எப்படி மாட்டினே?

ஆர்வக் கோளாறு காரணமா நோட்டுல காந்திக்கு பதிலா நம்ம
தலைவர் படத்தைப் போட்டு அடிச்சிட்டேன்!

—————————————————————————–

நன்றி; கல்கி 6-04-03

யாருக்கு ‘பவர்’ அதிகம் ?


ஒவ்வொரு ஜவுளிக்கடை வாசலிலும் ஒரு இருக்கை
போடப்பட்டிருக்கும் . அதில் ஒரு அப்பாவி கணவன்
இருப்பான். அந்த சேருக்கு என்ன பெயர்?

”புருசன் சேர்!”

——————————————————————————-
யாருக்கு ‘பவர்’ அதிகம் ? ஆணுக்கா இல்லை பெண்ணுக்கா?

பெண்ணுக்குத்தான்!

செஸ்ஸிஸ் கூட பெண்ணுக்குத்தான் (ராணி) பவர் அதிகம்!
ஆணுக்கு பவர் கம்மிதான்!

__________________________________________________

கல்யாணம் முடிந்த முதலாண்டில் மனைவியின் பேச்சை
கணவன் கேட்பான்
இரண்டாம் ஆண்டு கணவனின் பேச்சை மனைவி கேட்பாள்

மூன்றாம் ஆண்டில் இருவரின் பேச்சையும் பக்கத்து வீட்டுக்காரர்கள்
கேட்பார்கள்!

——————————————————————————————

நான் என் கணவனிடம் ரொம்ப நாளா நான் போகாத
இடத்திற்கு என்னை அழைத்துச்செல்லுங்கள் என்றேன்.
அவரும் சரி கண்டிப்பா அழைத்துச்செல்கிறேன்
என்று கூறினார் நான் எங்கே என்று கேட்டேன் *

அவரோ சமையலறைக்குத்தான் என கூறி ”பின்ன நீ
ரொம்ப நாளா போகாத இடம் அதுதானே என்றார்”!

_———————————————————————

உனக்காக ஒரு மாளிகை கட்டுறேன் டார்லிங்!

காதலன்:
“மும்தாஜுக்காக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டின மாதிரி
உனக்காக நான் ஒரு மாளிகை கட்டுறேன் டார்லிங்”

காதலி:
“இந்தக் கதையெல்லாம் வேணாம்.
முதல்ல என் கழுத்துல தாலிய கட்டுங்க!”

—————————————————————————————————————————–

சந்தா சிங்: புலி வால் புடிச்சு இழுத்து, சிங்கத்து பிடறியை சீவிவிட்டு,
யானை தும்பிக்கைய கிள்ளி வெச்சு, கரடிக்கு பின்னாடி விட்டேன்
ஒரு உதை

பந்தா சிங்: அப்புறம்?

சந்தா சிங்: இதையெல்லாம் பார்த்த அந்த பொம்மை கடைக்காரர் என்னை வெளியே துரத்திப்புட்டார்!

————————————————————————————————————————————

ஏப்ரல் 1 ம்தேதி ஒரு சர்தார்ஜி டவுன் பஸ்ஸில் ஏறினார். கண்டக்டர் வந்து டிக்கெட்
எடுக்கச் சொன்னதும் 10 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கிவிட்டு சொன்னாரு ”

”ஹைய் ஏப்ரல் பூல்! நல்ல ஏமாந்தியா என்கிட்டே பஸ் பாஸ் இருக்கே !!”

—————————————————————————————————————————————-

நூறாவது ஜோக்…

ஒரு போட்டி. யாரால 100 ஜோக் கேட்டும் சிரிக்காம இருக்க முடியும்னு.

தமிழன், மலையாளி, தெலுங்கன், கன்னடன், இந்தி, பெங்காலி, சர்தார்ஜி,

அசாமி, ஒரியான்னு பலர் கலந்துக்கிட்டாங்க.

மொதல்ல ஒரு பாட்டி ஜோக் சொன்னாங்க. அசாமிக்காரர் சிரிச்சுட்டார். அவுட்.

அடுத்து ஒரு ஆடு பத்துன ஜோக். அதுக்கு ஆந்திராகாரர்.

அடுத்தது ரயில் பத்துன ஜோக். அதுக்கு தமிழன். அடுத்து கோழி…அதுக்கு கன்னடன்.

இப்படி எல்லாரும் தோத்துட்டாங்க.

99 ஜோக் சொல்லும் போது சர்தார்ஜி மட்டுந்தான் மேடைல இருந்தார்.

சரியா 100வது ஜோக் சொல்லப் போகும் போது சர்தார் சிரிச்சுட்டார்.

மத்த சர்தார்களுக்குக்கு கோவம். ஏய்யா ஒரு ஜோக்குக்குச் சிரிக்காம இருக்க

முடியாதான்னு….அப்ப சர்தார்ஜி சொன்னாராம்….

”மொதல்ல சொன்ன பாட்டி ஜோக் ரொம்ப சூப்பர்!”

——————————————————————————————————————————————-

பால் கறக்க போட்டி!

ஒரு ராஜா சர்தார்ஜி. அந்த ஊர் சர்தார்ஜிக்கெல்லாம் பால் கறக்கற ஒரு போட்டி வச்சாராம்.

அதில பத்து சர்தார்ஜி கலந்துகிட்டாங்க.

அதாவது எந்த சர்தார்ஜி அதிகமா பால் கறக்கறாரோ அவர்தான் வெற்றி பெற்றவர்.

போட்டி ஆரம்பமாச்சி எல்லா சர்தார்ஜியும் வேக வேகமா கறக்க ஆரம்பிச்சாங்க.

போட்டி நேரம் முடிஞ்சதும் அவங்கவங்க எவ்ளோ கறந்தாங்கன்னு பார்வையிட்டாராம் ராஜா.

ஒரு குடம் பால் சேகரித்த ஒரு சர்தார்ஜிய பாராட்டிட்டு அடுத்த ஆள பாத்தாரு

அடுத்தவர் அதை விட அதிகமா கறந்துருக்கார் ஆச்சரியப்பட்டு போனார் ராஜா.

நம்ம மக்கள் நல்ல திறமையோடதான் இருக்காங்கன்னு.

கடைசியா ஒருத்தன் மட்டும் ஒரு சின்ன சொம்புல கொஞ்சூண்டு வச்சிருந்தானாம்.

ஏம்பா கொஞ்சமா இருக்குன்னு கேட்டாராம்.

”எல்லாருக்கும் பசுமாடு கொடுத்திங்க

எனக்கு மட்டும் காளை மாடு கொடுத்திட்டிங்களே ராஜா” அப்படின்னாராம்!

தமாசு! (வாரமலர்)

நன்றி; தினமலர்

« பழைய வரவுகள்