காற்றில் வரும் கீதமே.. .

படம் – ஒரு நாள் ஒரு கனவு
இசை – இளையராஜா
பாடியவர்கள் -ஹரிஹரன், ஸ்ரயா கோஷல், பவதாரினிரி,
இளையராஜா,சாதனா சர்கம்
————————————————————————–

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
அவன் வாய் குழலில் அழகாக ஆ…
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
பசு அறியும் அந்த சிசு அறியும்
பாலை மறந்து அந்த பாம்பறியும்
வருந்தும் உயிர்க்கு ஆ..
வருந்தும் உயிர்க்கு ஒரு மருந்தாகும்
இசை அருந்தும் முகம் மலரும் அரும்பாகும்
இசையின் பயனே இறைவன்தானே

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

ஆதார ஸ்ருதி அந்த அன்னை அன்றே
அதக்கேற்ற லயம் எந்தன் தந்தை அன்பே
ஸ்ருதி லயங்கள் தன்னை சுற்றும் ஸ்வரங்கள் எல்லாம்
உறவாக அமைந்த நல்ல இசைக் குடும்பம்

திறந்த கதவு என்றும் மூடாது
இங்கு சிறந்த இசை விருந்து குறையாது
இது போல் இல்லம் எது சொல் தோழி

காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா
காற்றில் வரும் கீதமே என் கண்ணனை அறிவாயா

அவன் வாய் குழலில் அழகாக ஆ…
அமுதம் ததும்பும் இசையாக
மலர்ந்தாய் நடந்தாய் அலை போல் மிதந்து

வசந்தமுல்லை போலே வந்து …

இந்த புறா ஆட வேண்டுமானால் இளவரசர் பாட வேண்டும்
ஓ.. பாட வேண்டுமா

வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே……
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
மாயமெல்லாம் நான் அறிவேனே… வா.. வா.. ஒடி வா…
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
மாயமெல்லாம் நான் அறிவேனே… வா.. வா.. ஒடி வா…
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே…….

இசையினில் மயங்கியே.. இன்புறும் அன்பே வா…….. ஆ…… ஆ ஆ…….
இசையினில் மயங்கியே.. இன்புறும் அன்பே வா
ஈடிலா உன்னையே… என்… மனம் நாடுதே….
ஈடிலா உன்னையே… என்… மனம் நாடுதே….
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
மாயமெல்லாம் நான் அறிவேனே… வா.. வா.. ஒடி வா…
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே…….

சிந்தனை விருந்தாகி சீரிய கனவாகி விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே…….
சிந்தனை விருந்தாகி சீரிய கனவாகி விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே…
மந்திர கண்ணாலே தந்திர வலை வீசும் சுந்தர வடிவே உன் துணை காணவா……
மந்திர கண்ணாலே தந்திர வலை வீசும் சுந்தர வடிவே உன் துணை காணவா…
இந்திர வில் நீயே… சந்திர ஒளி நீயே…
இந்திர வில் நீயே… சந்திர ஒளி நீயே…
ஈடிலா உன்னையே… என்… மனம் நாடுதே….
ஈடிலா உன்னையே… என்… மனம் நாடுதே….
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே…….

—————————————————————-

படம்; சாரங்கதாரா
பாடலாசிரியர்; மருதகாசி
இசை; ஜி.ராமநாதன்
ராகம்; சாருகேசி

குரல்: டி எம் சௌந்தரராஜன்

வீடு வரை உறவு!

———————————————————-

கண்ணதாசனின் உண்மையை உணர்த்தும் ஒரு தத்துவ பாடல்

படம்; பாத காணிக்கை (வருடம் 1962)

————————————————————–

ஆடிய ஆட்டமென்ன? பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வமென்ன? திரண்டதோர் சுற்றமென்ன?
கூடுவிட்டு ஆவிபோனால் கூடவே வருவதென்ன…?

வீடுவரை உறவு
வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?

ஆடும் வரை ஆட்டம்
ஆயிரத்தில் நாட்டம்
கூடிவரும் கூட்டம்
கொள்ளிவரை வருமா? (வீடு)

தொட்டிலுக்கு அன்னை
கட்டிலுக்குக் கன்னி
பட்டினிக்குத் தீனி
கெட்ட பின்பு ஞானி! (வீடு)

சென்றவனைக் கேட்டால்
வந்துவிடு என்பான்
வந்தவனைக் கேட்டால்
சென்று விடு என்பான்! (வீடு)

விட்டுவிடும் ஆவி
பட்டுவிடும் மேனி
சுட்டுவிடும் நெருப்பு
சூனியத்தில் நிலைப்பு! (வீடு)

————————————————–

குல்மொஹர் மலரே…

படம்: மஜ்னு

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

பாடியவர்: ஹரிஹரன், டிம்மி, அனுபமா

எழுதியவர்: கவிப்பேரரசு வைரமுத்து

மலரே, மலரே, மலரே, மலரே,
முகவரி என்ன?
உன் மனதில், மனதில், மனதில் உள்ள,
முதல் வரி என்ன?

[பெண் பிண்ணனியில்:
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஓஒஓஒஓ ஓ..ஒஒஒ,
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஒஒஒஒஓ.. (ஒஓஒஓஒ..)]

குல்மொஹர் மலரே, குல்மொஹர் மலரே,
கொல்லப் பார்க்காதே!
உன் துப்பட்டாவில், என்னைக் கட்டித்
தூக்கில் போடாதே!
(பிண்ணனி)ஹே, அயியே… ஓ,ஹோ.. (குல்மொஹர்..)
தூக்கில் போடாதே!
தூக்கில், போடாதே! தூக்கில்,போடாதே!

மலரின் தொழிலே,
உயிரைக் கொல்லுவதில்லையடி..
மனிதன் உயிரைக் கொன்றால்,
அதன் பெயர் மலரே இல்லையடி..,
அதன் பெயர் மலரே இல்லையடி.. (குல்மொஹர்..)
தூக்கில் போடாதே! தூக்கில், போடாதே!
(மலரே,..)
(மலரே,..)
முதல் வரி என்ன?
முதல் வரி.. முதல் வரி.. முதல் வரி..

உயிரைத் திருகி, உந்தன் கூந்தலில் சூடிக் கொள்ளாதே!
என் உதிரம் கொண்டு, உதட்டுச்சாயம் பூசிக்கொள்ளாதே!
விண்மீன் பறிக்க வழியில்லையென்று கண்களை பறிக்காதே!
என் இரவை எரித்து குழைத்துக் குழைத்து கண்மை பூசாதே!

என்னை விடவும் என்னை அறிந்தும்,
யார் நீ என்று கேட்காதே!
இருக்கும் கவிஞர்கள் இம்சை போதும்,
என்னையும் கவிஞன் ஆக்காதே!
என்னையும் கவிஞன் ஆக்காதே! (குல்மொஹர்..)
தூக்கில் போடாதே! தூக்கில், போடாதே!
தூக்கி எறியாதே,,, தூக்கில்,போடாதே!

உடைந்த வார்த்தையில் உன் பெயர் சொல்லி, உடனே ஓடுகிறாய்!
என் ரத்தக் குழாயில் புகுந்துகொண்டு, சத்தம் போடுகிறாய்!
கண்ணாடி நெஞ்சில் கல்லை எறிந்து, கலகம் மூட்டுகிறாய்!
இன்று ஐந்தரை மணிக்குள் காதல் வரும் என, அறிகுறி காட்டுகிறாய்!

மௌனம் என்பது உறவா? பகையா?
வயதுத் தீயில் வாட்டுகிறாய்..
ஏற்கனவே மனம் எரிமலை தானே,
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..?
ஏனடி பெட்ரோல் ஊற்றுகிறாய்..?
(மலரே,..)
[பெண் பிண்ணனியில்: முகவரியே...]
(மலரே,..)
முதல் வரி என்ன? முதல் வரி என்ன?

மலரே, மலரே, குல்மொஹர் மலரே,
கொல்லப் பார்க்காதே!
உன் துப்பட்டாவில், என்னைக் கட்டித்
தூக்கில் போடாதே!

[பெண் பிண்ணனியில்:
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஓஒஓஒஓ ஓ..ஒஒஒ,
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஒஒஒஒஓ..]
முதல் வரி என்ன? முதல் வரி என்ன?
முதல் வரி என்ன? தூக்கில் போடாதே!

முதல் வரி என்ன? முதல் வரி என்ன?
[பெண் பிண்ணனியில்:
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஓஒஓஒஓ ஓ..ஒஒஒ,
ஓஒஓஒஓ ஓஒஒஒ, ஒஒஒஒஓ..]
முதல் வரி என்ன?

—————————————————————

பிள்ளை நிலா. . .

படம்: நீங்கள் கேட்டவை
இசை:இளையராஜா
பாடியவர்: KJ ஜேசுதாஸ்

நன்றி; http://paatupadava.blogspot.com/2009/09/blog-post.html

————————————————————————————

பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலா
பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா.. லலலா
அலை போலவே விளையாடுமே
சுகம் நூறாகுமே
மண் மேலே துள்ளும் மான் போலே

பிள்ளை நிலா..

என்னாளும் நம்மை விட்டு போகாது வசந்தம்
தோளோடு ரோஜா ரெண்டு உறங்கும்
தள்ளாடும் பூக்கள் எல்லாம் விளையாட அழைக்கும்
ஏதேதோ ஏழை மனம் நினைக்கும்
தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை
தென்னை இளஞ்சோலை பாலை விடும் நாளை
கையிரண்டில் அள்ளிக்கொண்டு காதோடு அன்னை மனம்
பாடும்..
கண்கள்..
மூடும்..

பிள்ளை நிலா..

ஆளான சிங்கம் ரெண்டும் கைவீசி நடந்தால்
காளடியில் பூமி எல்லாம் அடங்கும்
சிங்கார தங்கம் ரெண்டும் தேர் போல வளர்ந்தால்
ஆகாயம் வந்து இங்கே வணங்கும்
எங்களா தாயே உயிர் சுமந்தாயே
எங்களா தாயே உயிர் சுமந்தாயே
கந்தலிலே முத்துச் சரம் காப்பாத்தி கட்டி வைத்தாய்
நீயே..
எங்கள்..
தாயே..

பிள்ளை நிலா..
———————————————————————–
பாடலின் வீடியோ காண

உலவும் தென்றல் காற்றினிலே!

ஒரு படத்தின் கதை, காட்சியின் சூழல், பாடலின் வரிகள் என்று அனைத்துக்கும் ஏற்ப மெட்டுப் போட்டு இசையமைப்பதை நியதியாகக் கொண்ட காலகட்டம் இருந்தது. அந்தச் சமயம் அனைத்து இசையமைப்பாளர்களும் அந்த நியதியைப் பின்பற்றினார்கள்.

இந்த வித்தையில், இசையமைப்பாளர் ஜி.ராமநாதன் ஒரு ஜாம்பவான்.

உலவும் தென்றல் காற்றினிலே, ‘திரையில்’ ஆடும் ஓடத்தின் வேகத்துக்கு இசைவாக இசைத்து, பாடலின் தாளத்தையே ஆடும் ஓடமாக்கிய கில்லாடி அவர்.

————————————————————-

பாடியவர்: திருச்சி லோகநாதன்

இயற்றியவர்:

இசை: ஜி.ராமநாதன்

திரைப்படம்: மந்திரி குமாரி

உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
உலவும் தென்றல் காற்றினிலே
ஓடமிதே நாம் மகிழ ஊஞ்சலாடுதே
அலைகள் வந்து மோதியே
ஆடி உன்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே
அலைகள் வந்து மோதியே
ஆடி உன்தன் பாட்டுக்கென்றே தாளம் போடுதே

உயர்ந்த மலையும் உமது அன்பின்
உயர்வைக் காட்டுதே
உயர்ந்த மலையும் உமது அன்பின்
உயர்வைக் காட்டுதே
இதயம் அந்த மலைக்கு ஏது
அன்பைக் காட்டவே?
இதயம் அந்த மலைக்கு ஏது
அன்பைக் காட்டவே?

தெளிந்த நீரைப் போல தூய காதல் கொண்டோம் நாம்
களங்கம் அதிலும் காணுவாய்
களங்கம் அதிலும் காணுவாய் கவனம் வைத்தே பார்
குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ?
குதர்க்கம் பேசி என்னை மயக்க எங்கு கற்றீரோ?
உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே
உனது கடைக்கண் பார்வை காட்டும் பாடம் தன்னிலே

உலக வாழ்க்கை ஆற்றினிலே
காதலெனும் தோணிதனில் ஊர்ந்து செல்லுவோம்
உலக வாழ்க்கை ஆற்றினிலே
காதலெனும் தோணிதனில் ஊர்ந்து செல்லுவோம்

—————————————————–

நன்றி;http://www.thamizhisai.com/tamil-cinema/tamil-cinema-001/tc0000_all-songs/tca0076tl_ulavum-thendral.php

http://www.bbc.co.uk/tamil/highlights/story/2004/08/printable/040805_filmsongs.shtml

மாலைப் பொழுதின் மயக்கத்திலே. . .

திரைப் படம்: பாக்யலஷ்மி

பாடியவர்: பீ.சுசீலா

இசை: எம்.எஸ்.விஸ்வநாதன் – டி.கே.ராமமூர்த்தி

பதிந்தவர் முத்துலெட்சுமி

—————————————————————–

மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி (மாலைப்பொழுதின்)

மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி (2)

ஆஆஆஆஆ(மாலைப் பொழுதின்)

இன்பம் சில நாள் துன்பம் சில நாள்
என்றவர் யார் தோழி
இன்பம் கனவில் துன்பம் எதிரில்
காண்பது ஏன் தோழி (2)

ஆஆஆஆஆ(மாலைப் பொழுதின் )

மணம் முடித்தவர் போல் அருகினிலே-ஓர்
வடிவு கண்டேன் தோழி
மங்கை என் கையில் குங்குமம் தந்தார்
மாலையிட்டார் தோழி
வழி மறந்தேனோ வந்தவர் நெஞ்சில்
சாய்ந்து விட்டேன் தோழி
அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்து விட்டார் தோழி
மறந்து விட்டார் தோழி ஆஆஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி

கனவில் வந்தவர் யாரெனக் கேட்டேன்
கணவர் என்றார் தோழி
கணவர் என்றால் – அவர்
கனவு முடிந்ததும்
பிரிந்தது ஏன் தோழி
இளமையெல்லாம் வெறும் கனவு மயம்
இதில் மறைந்தது சில காலம்
தெளிவும் அறியாமல் முடிவும் தெரியாமல்
மயங்குது எதிர் காலம்
மயங்குது எதிர் காலம் ஆஆஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை
காரணம் ஏன் தோழி
காரணம் ஏன் தோழி
ஆஆஆஆஆ
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி

——————————————–

நன்றி;

http://thenkinnam.blogspot.com/2008/08/651.html

இரு கண்கள் சொல்லும்

———————————————————————————

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி
உன் காதல் செய்யும் லீலை இங்கே கொஞ்சம் இல்லை
(இரு கண்கள்..)

என்னோடு நான் பேச கண்ணாடி சிரிக்கின்றதே
என் உடல் ஏனோ ஆடைகள் வெறுக்கின்றதே
வருவாய் நீ ஓர் முறை தான்
ஒரு நாளில் என் வாழ்வில்
என் நக கண்ணும் கண்ணீரில் நனைகின்றதே
(இரு கண்கள்..)
(இரு கண்கள்..)

என் பேரை கேட்டாலே உன் பேரை சொல்கின்றேன்
என் நிழல் கூட நீயாக தெரிகின்றதே
என் கண்ணில் மை எழுதி உன் கண்ணை பார்க்கின்றேன்
நான் உடை மாற்ற அது சேலை ஆகின்றதே
(இரு கண்கள்..)

நீ போர்த்திய போர்வை வேண்டுமே
கனவு தினம் தானே கேட்கின்றதே
நீ பார்த்ததில் காயம் ஆனதே
வலிகள் உன் பார்வை பார்க்கின்றதே
கூரான நகத்தாலே கொல்வாய் கண்ணே
அடி போராடி தோற்க்கத்தான் சொல்வாய் கண்ணே
நீ பூவாலே பாய் போடு ரோஜாக்கள் வேண்டாமே
குத்தும் முட்கள் குத்தும்
(இரு கண்கள்..)

ஏன் சிரிக்கின்றேன் உடலை நெளிக்கிறேன்
இரண்டு தலையணைகள் நான் கேட்கிறேன்
நீ மட்டுமா நானும் நண்பனை
இருக்கி அணைத்தேனே புரிகின்றதா
நீ நீராடும் நீர் அள்ளி குடிப்பேன் அன்பே
என் காதோரம் உன் மூச்சில் துடிப்பேன் அன்பே
உன் கழுத்தோரம் நுனி நாக்கால் ஒரு கோலம்
வரைந்தாலே போதும் கண்ணே போதும்
(இரு கண்கள்..)
(இரு கண்கள்..)
(என்னோடு..)
(இரு கண்கள்..)

படம்: காதல் சாம்ராஜ்யம்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள்: பால்ராம், கோபிகா பூர்ணிமா
பாடலாசிரியர்: அகத்தியன்

———————————————

பதிந்தவர் .:: மை ஃபிரண்ட்

நன்றி; http://thenkinnam.blogspot.com/2008/01/166.html

துயிலாத பெண் ஒன்று கண்டேன்

திரைப் படம்: மீண்ட சொர்க்கம்
பாடியவர்கள்: ஏ.எம்.ராஜா, பி.சுசீலா
இசை: டி.சலபதி ராவ்
வரிகள்: கண்ணதாசன்
நடிப்பு: ஜெமினி, பத்மினி
—————————————————-
ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
எங்கே?

ராஜா:
இங்கே
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
எங்கே?

ராஜா:
இங்கே
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
அழகான பழம் போலும் கன்னம்
அதில் தர வேண்டும் அடையாள சின்னம்

ராஜா:
பொன் போன்ற உடல் மீது மோதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்
இந்தக் கண் தந்த அடையாளம் போதும்

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
நானா?

ராஜா:
ஆமாம்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
மாலைக்கு நோயாகிப் போனேன்
காலை மலருக்குப் பகையாக ஆனேன்

ராஜா:
உறவோடு விளையாட எண்ணும்
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே
கண்கள் உறங்காது உறங்காது கண்ணே

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
யாரோ?

ராஜா:
நீ தான்
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
மண மேடை தனில் மாலை சூடும்
உங்கள் மன மேடை தனில் ஆட வேண்டும்

ராஜா:
நெஞ்சம் பிறர் காண முடியாத மேடை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை
அதில் நடமாடிப் பயன் ஏதுமில்லை

ராஜா:
துயிலாத பெண் ஒன்று கண்டேன்

சுசீலா:
ஓஹோ..

ராஜா:
என்னாளும் துயிலாத பெண் ஒன்று கண்டேன்
——————————————————————–
Posted by Chandravathanaa
நன்றி; http://cinemapadalkal.blogspot.com/

அந்தி மழை பொழிகிறது. . .

இளையராஜா, வைரமுத்து, பாலு என்ற மூவர்
கூட்டணி கொடுத்த எத்தனையோ முத்துகளில்
இந்தப் பாடலும் ஒன்று.

இந்தப் பாடலை பாலுவும் ஜானகியும் “ஏக்கம்”
என்ற ஒரே உணர்வைப் பாடல் முழுதும் தெளித்து
நன்றாகப் பாடியிருக்கிறார்கள்.

———————————————————————–

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
இந்திரன் தோட்டத்து முந்திரியே
மன்மத நாட்டுக்கு மந்திரியே

(அந்தி மழை)

தேனில் வண்டு மூழ்கும்போது
பாவம் என்று வந்தாள் மாது
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்

தனிமையிலே வெறுமையிலே
எத்தனை நாளடி இளமையிலே
கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
இமைகளும் சுமையடி இள மயிலே

(அந்தி மழை)

தேகம் யாவும் தீயின் தாகம்
தாகம் தீர நீதான் மேகம்
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது

நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
தாவணி விசிறிகள் வீசுகிறேன்
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனைப் பூசுகிறேன்

(அந்தி மழை)

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
சிப்பியில் தப்பிய நித்திலமே
ரகசிய ராத்திரி புத்தகமே

அந்தி மழை பொழிகிறது
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

————————–

Posted by வற்றாயிருப்பு சுந்தர்

நன்றி; http://myspb.blogspot.com/2006/03/blog-post_24.html

« பழைய வரவுகள்