கண்களும் கவி பாடுதே…!

பாடியவர்: திருச்சி லோகநாதன், சீர்காழி கோவிந்தராஜன்
இயற்றியவர்:
இசை:
திரைப்படம்: அடுத்த வீட்டுப் பெண்

===========================================

=

கண்களும் கவி பாடுதே கண்ணே உன்
கண்களும் கவி பாடுதே உன்னாசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு – உன்
கண்களும் கவி பாடுதே உன்னாசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு – உன்
கண்களும் கவி பாடுதே கண்ணே

விண்மணி போலே மண்மேலே விளையாடும்
விண்மணி போலே மண்மேலே விளையாடும்
கண்மணி நீயே பெண்மானே செந்தேனே
கண்மணி நீயே பெண்மானே செந்தேனே
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு – உன்
கண்களும் கவிபாடுதே உன்னாசையால்
காலமெல்லாம் இன்ப காதல் மேவும் நீதியோடு – உன்
கண்களும் கவி பாடுதே

கவிகளும் கண்பாடுதே என்ன ஆ. ஆ கண்களும்
ஆ.
கண்களும் கவிபாடுதே கண்ணே உன்
கண்களும் கவிபாடுதே

-

======================================

அடி சுகமா சுகமா சுடிதாரே…

***

அடி சுகமா சுகமா சுடிதாரே

—————————-

படம்: காதல் சுகமானது
இசை: சிவா
பாடல் வரி: விவேக

——————————————————–

அடி சுகமா சுகமா சுடிதாரே
நான் என்னை மறந்தேன் உன்னை பார்த்தே
இரு விழிகளால் எந்தன் இதயத்தை
நார் நாராய் கிழிக்காதே

நீ ஆசை காட்டி மறையாதே
என்னை ஆர்வகொளார் ஆக்காதே

துருதுருதுரு

ரோஜா தோட்டம் வைத்தேன்
செடிகள் உன்னை பூத்தது
ஓடை நீரில் பார்த்தேன்
உந்தன் கண்கள் நீந்துது
ஏன் காதலி ஒ காதலி
இன்று போதுமே உன் காலடி
அடி நீ மட்டும் என்னை நீங்கினால்
இந்த வாழ்வெல்லாம் சுமைதானடி

அடி சுகமா சுகமா சுடிதாரே…

துருதுருதுரு

கூந்தல் ஓரம் வந்தால்
நல்ல இரவை பார்க்கலாம்
கொஞ்சம் கீழே வந்தால்
இதழில் விடியல் பார்க்கலாம்
நீ சேலையில் கொஞ்சம் மூடிய
தொப்புல்தானடி பகல் சூரியன்
அடி நான் இங்கே உருவானதும்
உந்தன் நினைவினால்
மட்டும் வாழ்பவன்

-

=================================

சட்டி சுட்டதடா கை விட்டதடா..!

-
படம் – ஆலயமணி
இசை – விஸ்வநாதன் இராமமூர்த்தி
குரல் – சௌந்தரராஜன்
வரிகள் – கண்ணதாசன்

சட்டி சுட்டதடா கை விட்டதடா
புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
நாலும் நடந்து முடிந்த பின்னால்
நல்லது கெட்டது தெரிந்ததடா

பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா
மீதி மனதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா
ஆட்டி வைத்த மிருகம் இன்று அடங்கி விட்டதடா
அமைதி தெய்வம் முழுமனதில் கோவில் கொண்டதடா

ஆரவார பேய்கள் எல்லாம் ஓடி விட்டதடா
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடி விட்டதடா
தர்ம தேவன் கோவிலிலே ஒலி துலங்குதடா
மனம் சாந்தி சாந்தி சாந்தி என்று ஓய்வு கொண்டதடா

எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா
நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா
பிறக்கும் முன்னே இருந்த உள்ளம் இன்று வந்ததடா
இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா
-
=======================================
பதிவிட்டவர்: Chandravathanaa
http://cinemapadalkal.blogspot.in/2005/09/blog-post_112668862688398047.html

தேவதையைக் கண்டேன் காதலில்

படம் : காதல் கொண்டேன்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
குரல் : ஹரிஷ் ராகவேந்தர்
வரிகள் : நா. முத்துக்குமார்தேவதையைக் கண்டேன்
காதலில் விழுந்தேன்
என் உயிருடன் கலந்துவிட்டாள்.
நெஞ்சுக்குள் நுழைந்தாள்
மூச்சினில் நிறைந்தாள்
என் முகவரி மாற்றி வைத்தாள்.

ஒரு வண்ணத்துப்பூச்சி எந்தன்
வழி தேடி வந்தது
அதன் வண்ணங்கள் மட்டும் இன்று
விரலோடு உள்ளது.
தீக்குள்ளே விரல் வைத்தேன்
தனித்தீவில் கடை வைத்தேன்
மணல் வீடு கட்டி வைத்தேன்.

(தேவதையை)

தேவதை தேவதை தேவதை தேவதை
அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை
தேவதை தேவதை தேவதை தேவதை
அவளொரு தேவதை
தேவதை தேவதை தேவதை
தேவதை தேவதை

விழி ஓரமாய் ஒரு நீர்த்துளி
வழியுதே என் காதலி
அதன் ஆழங்கள் நீ உணர்ந்தால்
போதும் போதும் போதும்
அழியாமலே ஒரு ஞாபகம்
அலைபாயுதே என்ன காரணம்
அருகாமையில் உன் வாசம் வீசினால்
சுவாசம் சூடேறிடும்
கல்லறை மேலே பூக்கும் பூக்கள்
கூந்தலைப் போய்த்தான் சேராது
எத்தனை காதல் எத்தனை ஆசை
தடுமாறுதே தடம் மாறுதே
அடி பூமி கனவில் உடைந்து போகுதே

(தேவதையை)

தோழியே ஒரு நேரத்தில்
தோளிலே நீ சாய்கையில்
பாவியாய் மனம் பாழாய்ப்
போகும் போகும் போகும்
சோழியாய் என்னை சுழற்றினாய்
சூழ்நிலை திசை மாற்றினாய்
கானலாய் ஒரு காதல் கண்டேன்
கண்ணை குருடாக்கினாய்
காற்றினில் கிழியும் இலைகளுக்கெல்லாம்
காற்றிடம் கோபம் கிடையாது
உன்னிடம் கோபம் இங்கு நான் கொண்டால்
எங்கு போவது என்ன ஆவது
என் வாழ்வும் தாழ்வும் உன்னைச் சேர்வது.

(தேவதையை)

===========================
நன்றி:

http://cinemapadalkal.blogspot.in/search/label/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D

மழையும் நீயே வெயிலும் நீயே

படம்; அழகன்
இசை: மரகத மணி
பாடல்: மழையும் நீயே வெயிலும் நீயே
குரல்: எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள்: வைரமுத்து

===============================

மழையும் நீயே வெயிலும் நீயே
நிலவும் நீயே நெருப்பும் நீயே
அடடா உனைத்தான் -இங்கு
வாழும் மானிடர் காதல் என்பதா

(மழையும்)

இது என்ன மண்ணில் கூட நிலவும் வருமா
சரசம் பயிலும் விழியில் வருமே
இது என்ன தென்றல் கூட அனலாய்ச் சுடுமா
தனிமை நினைவில் அனலாய்ச் சுடுதே
பார்க்காமல் மெல்லப் பார்த்தாளே அதுதானா காதல் கலை
தோளோடு அள்ளிச் சேர்த்தானே அதுதானா மோன நிலை
அடடா இதுதான் சொர்க்கமா
இது காமதேவனின் யாகசாலையா

(மழையும்)

கலையெல்லாம் கற்றுக் கொள்ளும் பருவம் பருவம்
கடலின் அலைபோல் மனமும் அலையும்
கருநீலக் கண்கள் ரெண்டும் பவழம் பவழம்
எரியும் விரகம் அதிலே தெரியும்
ஏகாந்தம் இந்த ஆனந்தம் அதன் எல்லை யாரறிவார்
ஏதேதோ சுகம் போதாதோ இந்த ஏக்கம் யாரறிவார்
முதலாய் முடிவாய் இங்கு என்றும் வாழ்வது காதல் ஒன்றுதான்

(மழையும்)
-

================================================

நன்ற:-

http://spbindia.wordpress.com/category/uncategorized/page/54/

http://thenkinnam.blogspot.com/2012/03/blog-post.html

சின்னச்சின்ன மூக்குத்தியாம்

படம்: பாதை தெரியுது பார்’

பாடல் இயற்றியவர்: : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பாடியவர்:  டி.எம். சௌந்தரராஜன்

=============================================

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புக்கல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா…ம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்- பொண்ணே!
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா..ம்

கழுத்தை சுத்தியோர் அட்டியலாம்
உன் கட்டழகே ஒரு பட்டியலாம்
முத்தும் சிரிப்பில் மறஞ்சிருக்கும்- பேச்சு
ஒவ்வொண்ணும் தேனா இனிச்சிருக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புகல்லு மூக்குத்தியாம்

வெத்தில போட்டா உன் வாய் செவக்கும்- கன்னம்
வெக்கத்தினாலே செவந்திருக்கும்
உழைக்கும் மேனி கருத்திருக்கும்-உன்
முகத்தில் தாமரை பூத்திருக்கும்

சின்னச்சின்ன மூக்குத்தியாம்
செகப்புகல்லு மூக்குத்தியாம்
கன்னிப் பொண்ணே உன் ஒய்யாரம் கண்டு
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா…ம்
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்-பொண்ணே
கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியா..ம்

==================================

அன்றாடம் என்னைக் காதலி..!


திரைப்படம் : ஆழ்வார் (2006)
இசை : ஸ்ரிகாந்த் தேவா
இயக்கம் : செல்லா
பாடியவர்கள் : குணால்,குஷ்பு
நடிப்பு : அஜித்,அஸின்

வரிகள்:

ஆண்
அன்புள்ள காதலி அன்றாடம் என்னைக் காதலி
உன்னைப் போல் என்னைப் போல் உலகத்தில் யாரடி

பெண்
அன்புள்ள காதலா என்மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீ தானே இதயத்தின் காவலா


ஆண்
கண்ணாலே கண்ணாலே
கல்விக் கல்விக் கொள்ளவா
தூக்கத்தில் நான் உன்னை தொட்டுத் தொட்டுக் கிள்ளவா


பெண்
உன் கண்ணும் என் கண்ணும் சிக்கிமுக்கிக் கல்லடா
உன் தேகம் என் தேகம்
ஒண்ணுக்குள்ள ஒண்ணுடா (அன்பு)

ஆண்
I Love You சொல்கின்ற இருவிழி வானொலி
பொய் வேஷம் போடாத அழகிய காதலி


பெண்
மின்சார கையாலே உடலினைத் தீண்டடா
உன் காந்தக் கண்ணாலே உயிரினைத் தூண்டடா


ஆண்
நான் தேடிடும் தேடிடும் தேவதை நீயடி
உன் ஒவ்வொரு பாகமும் ஒவியம் தானடி


பெண்
கண்ணாடி பூச்செடி கண்முன்னே நிக்குதே
உன்னை நான் கண்டதும் உள்நாக்கு திக்குதே


ஆண்
புதிர் போட்டதை புதிர் போட்டதை
விடை கண்டு கொண்டேனே
அதை உன்னிடம் எதிர்பார்த்துதான்
அட நேரில் வந்தேனே


பெண்
ஆண் பாதி பெண் பாதி ஷிவ ஷிவ தாண்டவா
உன் போலே என் காதல் உயர்ந்தது ஆண்டவா


ஆண்
நீ எந்தன் நீ எந்தன் உடல் பொருள் ஆவியே
என்கைகள் உன்மேனி திறந்திடும் சாவியே

பெண்
நான் சொல்வதை கேட்கிற செல்லமே ஓடிவா வா வா
என் வெண்ணிலா மேனியில் வெட்கத்தை மூடவா

ஆண்
பெண்ணென்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் ஆயிரம்
ஒவ்வொன்றhய் அறிந்திட ஓர் ஜென்மம் போதுமா


பெண்
இது காதலின் விளையாட்டுத்தான்
அதை கண்டு கொள்ளாதே
உன் வார்த்தைகள் வீண் வார்த்தைகள்
வெறும் வாயை மெல்லாதே (அன்பு)

-

===========================================

நன்றி: http://pkp.blogspot.com/2007/02/aalwaar-lyrics.html

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்..

திரைப்படம்: சபாஷ் மாப்பிள்ளை
இயற்றியவர்: ஏ. மருதகாசி
இசை: கே.வி. மஹாதேவன்
பாடியவர்: பி. சுசீலா, சீர்காழி கோவிந்தராஜன்
ஆண்டு: 1961

======================================

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடைபாதையிலே
உழைப்பவன் வாழ்வே வீதியிலே
உறங்குவதோ நடைபாதையிலே
இரக்கம் காட்டத் தான் நாதியில்லே
இரக்கம் காட்டத் தான் நாதியில்லே

தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

இருப்பவர் உள்ளம் திறந்திடுமா?
ஏழ்மையும் வறுமையும் பறந்திடுமா?
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா?
அழுபவர் சிரிக்கும் நாள் வருமா?
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆஆஆஆஆ

சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை
உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை
உயர்ந்தவர் தாழ்ந்திடத் தேவையில்லை
உள்ளதை இழந்திடச் சொல்லவில்லை
உழைப்பவர் உயர்ந்தால் போதுமையா

தினம் சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?
சிரிப்பவர் சிலபேர் அழுபவர் பலபேர்
இருக்கும் நிலை என்று மாறுமோ?

==================================================

நன்றி:

http://www.thamizhisai.com/video/tamil-film-songs/sabash-mappillai/sirippavar-sila-per.php

அன்பென்ற மழையிலே!

படம்: மின்சாரக் கனவு
இசை: ஏ.ஆர்.ரகுமான்
பாடியவர்: அனுராதா ஸ்ரீராம்

-

அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே!

வைக்கோலின் மேலொரு
வைரமாய், வைரமாய்
வந்தவன் மின்னினானே!

வின்மீன்கள் கண்பார்க்க
சூரியன் தோன்றுமா போல்
புகழ் மைந்தன் தோன்றினானே!

கண்ணீரின் காயத்தை
செந்நீரில் ஆற்றவே
சிசுபாலன் தோன்றினானே!

கல்வாரி மலையிலே
கல்லொன்று பூக்கவும்
கருணை மகன் தோன்றினானே!

நூற்றாண்டு இரவினை
நொடியோடு போக்கிடும்
ஒளியாகத் தோன்றினானே!

இரும்பான நெஞ்சிலும்
ஈரங்கள் கசியவே
இறை பாலன் தோன்றினானே!

முட்காடு எங்கிலும்
பூக்காடு பூக்கவே
புவிராஜன் தோன்றினானே!

-

=========================================

முதன்முறை வாழப்பிடிக்குதே..

-

பாடல் : நா.முத்துகுமார்
இசை : யுவன்சங்கர் ராஜா
குரல் : இளையராஜா
படம் : கற்றது தமிழ் (தமிழ் M.A.)

-

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே…

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே…

அடி என் பூமி தொடங்கும் இடமெது? நீ தானே..
அடி என் பாதை இருக்கும் இடமெது? நீ தானே..

பார்க்கும் திசைகளெல்லாம்..
பாவை முகம் வருதே

மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்னே நானும் படகாக

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன்.. அன்பே…

உன்னோடு நானும்.. போகின்ற பாதை
இது நீளாதோ, தொடுவானம் போலவே
கதை பேசிக்கொண்டே.. வா.. காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும்.. உன் மெளனங்கள் போதும்
இந்த புல்பூண்டும் பறவையும் நாமும் போதாதா..
இனி பூலோகம் முழுதும் அழகாய் போகாதா

முதன்முறை வாழப்பிடிக்குதே..
முதன்முறை வெளிச்சம் பிறக்குதே..
முதன்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே..

முதன்முறை கதவு திறந்ததே
முதன்முறை காற்று வருகுதே
முதன் முறை கனவு பலிக்குதே.. அன்பே..

ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்..
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி
உடையாமல் உருண்டோடும் நதியாகிடுவோம்
இதோ இதோ இந்த பயணத்திலே..
இது போதும் கண்மனி.. வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்
இந்த நிகழ்காலம் இப்படியே தான் தொடராதா
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா..

முதன்முறை வாழப்பிடிக்குதே..
முதன்முறை வெளிச்சம் பிறக்குதே..
முதன்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே..

முதன்முறை கதவு திறந்ததே
முதன்முறை காற்று வருகுதே
முதன் முறை கனவு பலிக்குதே.. அன்பே..
-

==============================================

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers