சமையல் டிப்ஸ்

சமையல் அறை சிலாப்களை துடைக்க பயன்படுத்தும்

தண்ணீரில் சிறிதளவு வினீகர் கலந்திடுங்கள், எறும்பு தொல்லை

நீங்கும்

சர்க்கரை டப்பாவுக்குள் கிராம்பு போட்டு வைத்தால், எறும்புகள்

ஓடிவிடும்.

புதினா இலையை அரைத்து தண்ணீரில் கலந்து தெளித்தால்,

ஈத்தொல்லை நீங்கும்

பாதாம்பருப்புக்கு பதில் வேர்க்கடலை நல்லது.

தினமும் காலையில் ஒரு கப் தயிர் சாப்பிடுவது உடலுக்கு நல்லது.

மூளயைக் குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. தயிரில்

எலும்புகளை உருவாக்கும் கால்சியம் நிறைய இருக்கிறது

கிச்சன் டிப்ஸ்

*வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை, தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டி விட்டு பின் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.

*உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது, சிறிதளவு பச்சரிசியையும் சேர்த்து அரைத்தால், வடை மொறுமொறுப்பாக இருக்கும்.

*உளுந்தம்பருப்பு வடைக்கு அரைக்கும் போது தண்ணீர் அதிகமாகி விட்டதா? அதில், சிறிது பச்சரிசி மாவை தூவினால் தண்ணீரை அரிசி மாவு உறிஞ்சிவிடும்.

*உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம்பருப்பு மாவை தூவி, சிப்ஸ் செய்தால் மொறுமொறுவென்று இருக்கும்.

*பருப்பில் சிறிதளவு நெய் விட்டு வேக வைத்தால், விரைவாக வேகும். அதோடு சுவையும் மணமும் அதிகரிக்கும்.

*மோர் குழம்பு செய்து இறக்கும் போது சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி இறக்கினால் வாசனையாக இருக்கும்.

*கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றில் சமையலுக்கு தேவையானதை, முதல் நாள் ஊறப் போட மறந்து விட்டால், அவற்றை எண்ணெய் விடாமல் நன்றாக வறுத்து பிறகு குக்கரில் வேக வைத்தால் நன்கு வெந்து விடும்.

*தோசை மாவு அரைக்கும் போது சிறிதளவு கடலைப் பருப்பை சேர்த்து அரைத்தால், தோசை பொன்னிறமாக வரும்.

*தோசை மாவில் வெந்தயப் பொடி சிறிதளவு சேர்த்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும்.

*மிளகாயை வறுத்து பொடி செய்யும் போது, சிறிது நல்லெண்ணெய் ஊற்றி வறுத்தால், அவை கமறாமல் இருப்பதோடு, பொடியும் மணமாக இருக்கும்.

*வற்றல் குழம்பு தாளிக்க நல்லெண்ணெய் பயன் படுத்தினால், வாசனை நன்றாக இருக்கும்.

கிச் டிப்ஸ்

* தேங்காய் துருவலுடன், ஊறவைத்து அரைத்த வேர்க்கடலையை சேர்த்து, தேங்காய் பர்பி செய்தால், வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.

* தோசை மாவுடன், சிறிதளவு சோளமாவு சேர்த்து தோசை வார்த்தால், தோசையின் சுவை அபாரமாக இருக்கும்.

*இட்லிப் பொடி தயாரிக்கும் போது, சிறிதளவு கருவேப்பிலையை வறுத்து சேர்த்து அரைத்தால், ருசியாக இருக்கும்.

*தயிர் வடை செய்யும் போது வடையை பொரித் ததும், அதை சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்து பின் தயிரில் போட்டால் நன்றாக ஊறும்.

*ஜவ்வரிசி பாயசம் செய்யும் போது, இரண்டு டீஸ்பூன் வறுத்த கோதுமை மாவை பாலில் கரைத்து ஊற்றி செய்தால், பாயசம் கெட்டியாகவும் ருசியாகவும் இருக்கும்.

*இட்லிக்கான அரிசியை வெந்நீரில் ஊற வைத்து அரைத்தால், இட்லி பஞ்சு போல இருக்கும்.

*முள்ளங்கி சாம்பார் செய்யும் போது, சிறிதளவு எண்ணெயில் முள்ளங்கியை வதக்கிய பின் சாம்பார் செய்தால் ருசி கூடும்.

*கட்லெட் செய்யும் போது, அவை எண்ணெயில் போட்டதும் உதிர்ந்து போகாமல் இருக்க, கலவையில் சிறிது முட்டையை ஊற்றி பிசைந்து செய்யலாம். முட்டை விரும்பாதவர்கள் அதற்கு பதில் பிரட் துண்டுகளை தண்ணீரில் நனைத்து கட்லெட் கலவையுடன் சேர்த்து செய்யலாம்.

*கட்லெட் செய்ய ரொட்டி தூள் இல்லையென்றால், அரிசியை பொரித்து தூளாக்கி பயன்படுத்தலாம்.

*வெங்காய பஜ்ஜிக்கான வெங்காயத்தை, தோலை உரிக்காமல் வட்டமாக வெட்டி விட்டு பின் தோலை உரித்தால், வெங்காயம் தனித்தனியாக பிரியாமல் வட்டமாக இருக்கும்.

மிளகு,மஞ்சள்,சீரகம் -சிறப்பு

தலைவலிக்கு நம்மூர் குழம்புப்பொடி போதுமாம்.ஆம், ஆஸ்பிரினில் உள்ள மருத்துவ குணங்கள், இந்து ‘கறிப்பொடிகளில்’ அதிகம் உள்ளது என ஸ்காட்லாந்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து கூறியுள்ளனர்.

மருத்துவ நிபுணர்களில் ஒருவரான கேரி டத்தே வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் உள்ள விஷயங்களைப் படித்தால் ஆச்சரியப்பட்டுப் போவீர்கள்.நம்மூர் சாம்பார், ரசம் குடித்து அவற்றை ஆராய்ச்சி செய்து முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.
அதன் விளக்கம் வருமாறு:தலைவலிக்கான மாத்திரை ஆஸ்பிரின்.இது பக்கவிளைவைத் தருகிறது.ஆனால்,இந்து சமயலறைகளில் உள்ள சமையல் தானிய வகைகளில் ஆஸ்பிரினைத் தாண்டி பலன் தரும் வகையில் சத்துக்கள் அமைந்துள்ளன.
இந்து சமையலறைகளில் மிளகு, மஞ்சள்,கறிவேப்பிலை போன்றவை இல்லாமல் சமையலே இல்லை.அவற்றைக் கொண்டுதான் குழம்புப்பொடி, ரசப்பொடி என்று பவுடர்களைத் தயாரிக்கின்றனர்.இந்த கறிப்பொடிகளில் மூலிகை சத்துக்கள், ஆஸ்பிரினில் உள்ள ரசாயன(கெமிக்கல்)சத்துக்களைவிட சிறந்தவை.

இந்த குழம்புப்பொடியில் சாலிசிலிக் ஆசிட் என்ற ரசாயனக்கலவை கிடைக்கிறது.இதுதான் தலைவலியைப் போக்க முக்கியமானது.
அதே சமயத்தில் நீண்டகாலமாக ஆஸ்பிரின் முழுங்கிக் கொண்டே இருந்தால் பக்கவிளைவு நிச்சயம்.உதாரணமாக, கிட்னி செயலிழந்து போகலாம்.

ஆனால், நீண்டகாலம் இந்தகுழம்புப்பொடியை உணவில் பயன்படுத்தினால் தலைவலி பறந்து போகும்.அதையும் மீறி தலைவலி வந்தால் அதற்கு வேறு பல காரணங்கள் இருக்கும்.
இந்த குழம்புப்பொடியில் சிறிதளவு எடுத்து சோதனை செய்து பார்த்ததில் 95 மில்லி கிராம் சாலிசிலிக் ஆசிட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.அதே சமயம் ஆஸ்பிரின் மாத்திரை ஒன்றில் வெறும் 65 கிராம் சாலிசிலிக் ஆசிட்தான் இருக்கிறது.

அதே போல எந்தளவுக்கு சூடாக சாப்பிடுகிறோமோ, அந்தளவுக்கு பலன் இருக்கிறது.இந்த மூலிகை சத்துக்கள் நிறைந்த சாற்றை(ரசம் அல்லது குழம்பை) சூடாகக் குடித்தாலே தலைவலி போய்விடும்.இவற்றில் உள்ள மிளகு, மஞ்சள்,சீரகம் இம்மூன்றும் உடலில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகின்றன.முழு மனித உடல் ஆரோக்கியத்துக்கு இவை பயன்படுகின்றன.

———

Source:

தினமலர்-. 28.8.2006

&  http:// aanmigakkadal.blogspot.com

நீங்கள் உண்பது நிறையுணவா..?!

நீங்கள் உண்பது நிறையுணவா..?! இங்கு பரிசோதித்துக் கொள்ளுங்கள்.

—————————————————————————————————–

//Image from: food.gov.uk/ & Edited for translation only.)// -

படத்தில் அழுத்தினால் விபரமாக நோக்கலாம்

————————————————————————-

.நீங்கள் அரோக்கியமான வாழ்வு வாழ உண்ண

வேண்டியது நிறையுணவு (Balance diet) ஆகும்.

அந்த நிறை உணவு எவ்வகை உணவுப் பொருட்களை

எவ்வெவ்வளவுகளில் கொண்டிருக்க வேண்டும்

என்று சொல்கிறது இப்படம்.

நீங்கள் உணவு உண்ணப் பாவிக்கும் வட்ட வடிவ

உணவுத் தட்டில் மேற்படி அளவுக்கு குறிப்பிட்ட வகை

உணவுகளை நீங்கள் நாள் தோறும் உண்டு வந்து..

நல்ல உடற்பயிற்சி அல்லது உடற்பயிற்சி அளிக்கக் கூடிய

கடின வேலைகளையும் செய்து வந்தால் உங்கள் ஆயுள்

நீண்டதாக இருக்கும்.

பூமியில் பிறந்த யாருக்குத்தான் நீண்ட நாள் வாழ

ஆசையில்லை. உங்களின் ஆசையை பூர்த்தி செய்ய

இக்குறிப்பு உதவும் என்று நம்புகின்றோம்.

———————————–

பதிந்தது <-குருவிகள்->

நன்றி; http://kuruvikal.blogspot.com/

கீரைகளின் பயன்கள்

http://pirabuwin.files.wordpress.com/2009/06/leaves.jpg

கீரையில் சக்கரை கிடையாது ஆகவே நீரிழவு நோயாளிகளுக்கும்
இது உகந்தது.
உணவில் உட்கொள்ள வேண்டிய கீரைகளின் பரிந்துரைக்கப்பட்ட அளவு

*
பெண்களுக்கு 100 கிராம் ஒரு நாளைக்கு
*
ஆண்களுக்கு 40 கிராம் ஒரு நாளைக்கு
*
பள்ளி செல்லும் சிறு பிள்ளைகள் (4-6 வயது) க்கு 50 கிராம் ஒரு நாளைக்கு
*
10 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் 50 கிராம் ஒரு நாளைக்கு

கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வதின் மூலம், இரத்த சோகை வருவதை தடுத்து, நல்ல உடல் நலனை பெறலாம்

வியா‌தி வ‌ந்த ‌பி‌ன் அத‌ற்கே‌ற்ற உணவுகளை க‌ட்டு‌ப்பா‌ட்டுட‌ன் சா‌ப்‌பிடுவதை‌க் கா‌ட்டிலு‌ம், வருவத‌ற்கு மு‌ன் ஆரோ‌க்‌கியமான உணவுகளை உ‌ண்பதே ‌சிற‌ந்தது.

************************************

உளுந்து சாதம்

உளுத்துப் போன உடம்புக்கு உளுந்து சாதம்

சர்க்கரை நோய் வந்தாலே உடம்பின் அனைத்து பாகங்களும்
கெட ஆரம்பிக்கும் .

ஆகவே உளுத்துப்போன உடம்புக்கு உளுந்து தான் சிறந்தது.

உளுந்துப் பொடி சாதம் ஒரு சிறந்த உணவு
————————
செய்முறை

அவல் ஒன்றிண்டாக பொடித்தது -ஒரு கப்

உளுந்தை முளைக்க வைத்து நன்றாய் காய வைத்து
ரவை போல் பொடித்தது-கால் கப்

தோல் நீக்கிய சுக்குத் தூள்-ஒரு டீஸ்பூன்

தோல் நீக்கிய பூண்டு-பத்து பற்கள்’

தேங்காய்ப்பூ-ஒரு கப்

உளுந்தைப் பொடியாக்கும் போதே பூண்டு பற்களையும் சேர்த்துப்
பொடியாக்கவும்.
பின் மீதமுள்ள சாமான்களை எல்லாம் உளுந்தோடு சேர்த்து நன்றாக
கலந்து விடவும்.
பின் அதோடு உளுந்து கலவையை போட்டு நன்றாக் கிளறவும்.
இந்தக் கலவைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு மூழ்கும் வரை
தண்ணீர் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து சாப்பிடவும்.

சர்க்கரை நோய்க்கு மட்டுமல்ல முதுகு வலி ,இடுப்பு வலிக்கு மிகவும் நல்லது.
——————————–

க்ஷகலமி; http://sugar-desease.blogspot.com/2009/01/blog-post_23.html

முருங்கைக்காய் குருமா!

Mangaiyarmalar image

தேவையான பொருட்கள் :

முருங்கைக்காய் – 4, தக்காளி-3, சின்னவெங்காயம்-10, இஞ்சி சிறுதுண்டு, பூண்டு – 4 பல், பச்சை மிளகாய்-4, சிவப்பு மிளகாய்-2, சோம்பு-1 டீஸ்பூன், தேங்காய் – 1/2 மூடி, மல்லித்தழை – சிறிது, உப்பு – தேவைக்கேற்ப

தாளிக்க:

பட்டை -1, அன்னாசிப் பூ – சிறிது, கிராம்பு -1, கறிவேப்பிலை – சிறிது, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,

செய்முறை :

முருங்கைக்காயைத் துண்டாக்கி, உள்ளிருக்கும், சதைப்பற்றை மட்டும் ஸ்பூனால், சீவி எடுத்துக் கொள்ளவும். தக்காளி, சின்னவெங்காயம், பச்சை மிளகாய் மூன்றையும் பொடியாக நறுக்கவும். தேங்காயைத் துருவி, சிவப்பு மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாய் அரைக்கவும். வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ சேர்த்து தாளித்து, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்க்கவும்.

பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். சீவிய முருங்கைக்காய் சதைப்பற்றைச் சேர்த்து வதக்கவும். சுருண்டு வரும்போது ஒரு கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். நன்கு வெந்ததும், அரைத்த மசாலாவைச் சேர்க்கவும். குழம்பு கொதித்ததும், மல்லித் தழை சேர்த்து இறக்கவும். சுவையான முருங்கைக்காய் குருமா, தயார். சாதம், சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை எல்லாவற்றுக்கும் பொருத்தமாய் இருக்கும்.

- எஸ். ஜனனி கண்ணாத்தாள், திருச்சி -20

நன்றி;
மங்கையர் மலர்-ஜூன் 09

http://www.dinamalar.com/piraithalkal/mangaiyarmalarnewsdetail.asp?news_id=59&dt=06-09-09

சமையலுக்கு பயன் படுத்தும் சில பொருட்களின் குணநலன்கள்:

சோம்பு:
இதில், உப்புச் சத்து உள்ளது; குடல் நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை பெருக் கும் தன்மை கொண்டது. எனவே, ஜீரண சக்தி குறைவாக உள்ளவர்கள் இதை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
சீரகம்: விட்டமின் ஏ, சி சத்துகள் கொண்டவை. எல்லாருக்குமே நல்லது என்றாலும், உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. பித்தத்தை தணித்து, பிரஷரை குறைக்கும். உடல் உஷ்ணத்தை சீராக வைத்திருக்க உதவும்.

வெந்தயம்:
இரும்பு, கால்சியம் சத்துகள் கொண்டது. வளரும் குழந்தைகளுக்கும், சர்க்கரை நோயாளிகளுக்கும் நல்லது. உடலை இளைக்கச் செய்யும் குணம் கொண்டது. நீரிழிவை தடுக்கும். தாய்ப்பாலை பெருக்கும்.

மிளகு:
காப்சைன் எனும் சத்து உள்ளது. இதய நோய், ரத்த கொதிப்பு, மூச்சுத் தொந்தரவு, ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள், உணவில், மிளகாய்க்கு பதில் மிளகை சேர்க்க, நோயின் கடுமை குறையும். நஞ்சை முறிக்கும். கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டது. கொழுப்பு அடைப்பையும் விலக்கிடும்.

ஏலக்காய்:
விட்டமின் சி, பி12 சத்து கொண்டது. நீரிழிவு நோய் மற்றும் கண் பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு மிகவும் நல்லது. கண் பார்வைக்கு நல்லது. செரிமானத்தை தூண்டும்.

முந்திரிப் பருப்பு:
புரதம், கொழுப்பு, விட்டமின் இ சத்து கொண்டது. பித்தம் அதிகம் உள்ளவர்களும், இதய நோயாளிகளும் இதை சாப்பிடக் கூடாது. மிளகுடன் முந்திரியை வறுத்து சாப்பிட உடல் பெருகும்.

கிராம்பு:
இரும்பு மற்றும் கால்சிய சத்து நிறைந்தது. தொண்டை வலி, ரணம், வறட்டு இருமல் உள்ளவர் களுக்கு மிகவும் நல்லது. பல்வலியை போக்கும் குணம் கொண்டது. உடல் உஷ்ணத்தை சீர்படுத்தும். கிருமி நாசினியாக பயன்படும். வாய் துர்நாற்றத்தை போக்கக் கூடியது.

மஞ்சள்:
‘டானின்’ எனப்படும் “ஆன்டி ஆக்ஸிடெண்ட்’ உள்ளது. வறட்டு இருமல் உள்ளவர்களுக்கும், அடிக்கடி நோய்வாய்படுபவர்களுக் கும் மிகவும் நல்லது. வாழ்நாளை நீடிக்கச் செய்யும் தன்மை கொண்டது. நோய் தடுப்பாற்றலை பெருக்கும். கிருமிகளை கொல்லும். பித்தத்தை தணிக்கும். காசநோய் கிருமிகளை அழிக்கும். திசுக்களின் ஆயுளை நீடிக்கச் செய்யும்.

இஞ்சி:
கால்சியம், கார்போ ஹைட்ரேட், பாஸ்பரஸ், நிகோடினிக் ஆசிட், விட்டமின் ஏ சத்து நிறைந்தது. அஜீரணக் கோளாறு, மூச்சுத் தொல்லை, மூட்டுவலி உள்ளவர்க ளுக்கு மிகவும் நல்லது. வயிற்றுப் புண் உள்ளவர்கள் தவிர்க்கவும், பித்தத்தை தணிக்கும் குணம் கொண்டது. வாயுத் தொல்லையை நீக்கும். ஆயுளை நீடிக்க செய்யும். கொழுப்பை கரைக்கும்.

பூண்டு:
விட்டமின் சி, ஏ உள்ளது. பாலில் பூண்டு மற்றும் தேன் கலந்து, தினமும் பருகிவர வயிற்றுக் கடுப்பு குணமாகும். அதிகப்படியான கொழுப்பு, மூட்டுவலி உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. சீரான ரத்த ஓட்டத்திற்கு உதவும். மூட்டுவலியை போக்கும். வாயுப்பிடிப்பை நீக்கும்.

ஓமம்:
விட்டமின் பி, இரும்பு சத்து கொண்டது. வயிற்று உப்புசம் தொல்லை உள்ளவர்களுக்கு நல்லது. தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் டாக்டர்களின் ஆலோசனை இன்றி சாப்பிடக் கூடாது. பித்தம், வாயுவை கட்டுப்படுத்தும் குணம் கொண்டது. துரித செரிமானத்துக்கு உதவும்.

பெருங்காயம்:
கால்சியம் சத்து கொண்டது. தடிப்பு, அரிப்பு போன்ற “சரும நோய்’ உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. வெள்ளைபடுதல் உள்ளவர்கள் இதை சாப்பிடக் கூடாது. வெள்ளைப்படுதலை அதிகரிக்க செய்யும்.

நன்றி தினமலர்!

பூண்டுக் குழம்பு

தேவையான பொருட்கள்

மலைப்பூண்டு (பெரியது) – 250 கிராம்
மிளகாய் வற்றல் – 10
மல்லிவிதை – 4 தேக்கரண்டி
சீரகம் – 8 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
எண்ணெய் – 7 தேக்கரண்டி
வெல்லம் – ஒரு சின்னக்கட்டி
கடுகு – 1 தேக்கரண்டி
புளி – எலுமிச்சை அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு

செய்முறை
மிளகாய், மல்லி, இரண்டையும் 1/2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு வறுக்கவும். வறுபட்டதும் சட்டியை அடுப்பில் இருந்து இறக்கி சீரகத்தைக் கலந்து கிளறி ஆற வைத்து நைசாக மிக்சியில் அரைக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். பூண்டுகளைத் தோல் உரித்துக் கொள்ளவும். இண்டாலியம் சட்டியை அடுப்பில் வைத்து, எண்ணெய்விட்டு கடுகு போட்டுத் தாளித்து பூண்டைப் போட்டு வதக்கவும். கொஞ்சம் வதங்கியதும் புளி, உப்பு, அரைத்த மசாலா, வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். பூண்டுகள் வெந்து குழம்பு நன்கு கொதித்து எண்ணெய் தெளித்து வந்ததும் கறிவேப்பிலை போட்டுப் பரிமாறவும். சீரகத்தை அதிகமாக வறுக்க வேண்டாம்.

குறிப்பு : மிளகாய் காரம் பிடிக்காதவர்கள் 7 அல்லது 8 மிளகு சேர்த்து வறுத்து அரைக்கலாம். மிளகாய் வற்றல் 4 சேர்த்தால் சரியாக இருக்கும். கொஞ்சமாவது மிளகாய் சேர்த்தால்தான் சுவையாக இருக்கும்.

Chettinadu Samayal

———————————

- அலமேலு ரங்கநாதன்

நன்றி; http://www.tamilvanan.com/content/2009/05/29/garlic-kulambu/

« பழைய வரவுகள்