தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப்
கடலைப்பருப்பு – ஒரு கப்
சர்க்கரை – ஒரு கப்
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு
-
செய்முறை:
-
கடலைப்பருப்பை நன்றாக குழைய வேகவைத்து
தண்ணீரை வடித்து தனியாக வைக்கவும்.
-
அடி கனமான பாத்திரம் ஒன்றில் வேக வைத்த கடலைப்
பருப்பையும், சர்க்கரையும் சேர்த்து கலந்து மிக்ஸியில்
போட்டு ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். இதுதான் பூரணம்.
-
கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு, சிறிதளவு
நெய் சேர்த்து கெட்டியாக பிசையவும். பிசைந்த மாவை
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திக்கல்லில்
போட்டு வட்டமாக இட்டு, நடுவே தயாரித்து வைத்துள்ள
பூரணத்தை சிறிதளவு வைத்து மூடி, வட்டமாக தட்டி,
நெய் தடவிய சூடான தவாவில் போட்டு இருபுறமும் நன்றாக
வேக வைத்து எடுக்கவும்
====================================================
>தீபா பாலச்சந்தர்