வானில் தவழும் நிலா தரையில் தவழும் குழந்தை,
இரண்டில் உங்களைக் கவர்ந்தது எது?
நிலா என்பது வளர்ந்த குழந்தை.
குழந்தை என்பது வளரும் பிறை.
என்னைக் கவர்ந்தது தரையில்
தவழும் குழந்தைதான்.
ஏனென்றால்_
வளர்ந்த நிலாவுக்குக் கறை
உண்டு;
வளரும் பிறைக்குக் கறை இல்லை.
——————————————————–
செம்மொழி என்றால் என்ன?
ஈராயிரம் ஆண்டுகள் இலக்கண இலக்கியத்
தொடர்ச்சியுள்ள மொழி;
தன்னிலிருந்து சில மொழிகளை
ஈன்று கொடுத்த மொழி;
இன்னும் உயிருள்ள மொழி;
உலகப் பண்பாட்டுச்
செழுமைக்குப் பங்களிப்புச்
செய்த மொழி இவை போன்ற
தகுதிகளால் உலகத்தின் ஐந்தே
மொழிகளில் ஒன்றாகத் திகழும்
நம் மொழி செம்மொழி.
—————————————————–
இலக்கிய கூட்டங்கள் அரசியல்
கூட்டங்கள் என்ன வித்தியாசம்?
அன்று அரசியல் கூட்டங்களில் இலக்கியம்
இருந்தது.
இன்று இலக்கியக் கூட்டங்களில்
அரசியல் இருக்கிறது.
——————————————————-
புதிதாக வரும் பாடலாசிரியர்களுக்கு
என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
வளைந்து கொடுங்கள்;
ஒடிந்து விடாதீர்கள்.
——————————————————–
இல்லை… இல்லை… இல்லை… இல்லை…
நான்கு சொல்ல முடியுமா?
நிலாவில் காற்று இல்லை;
கொசுக்களுக்குப் பல் இல்லை;
தண்ணீர்ப் பாம்புக்கு விஷம் இல்லை;
சுவிட்சர்லாந்துக்கு ராணுவம் இல்லை;
இவை சாமர்த்தியமான இல்லைகள்;
ஜார்ஜ் புஷ்ஷ¨க்கு இதயம் இல்லை;
சதாம் உசேனுக்கு நீதி இல்லை;
ஈராக்கில் அமைதி இல்லை;
ஐ.நாவில் சத்தம் இல்லை
இவை சத்தியமான இல்லைகள்.
——————————————————–
கவிஞன் ஓவியன்
இருவருக்குமுள்ள வேறுபாடு என்ன?
வர்ணங்களில் கவிதை
தீட்டுகிறவன் ஓவியன்
வார்த்தைகளில் ஓவியம்
தீட்டுகிறவன் கவிஞன்.
——————————————————
மனிதனை உயர்த்துவது பாராட்டுதலா
அல்லது தாக்குதலா?
கல்மேல் உளி விழுவது போன்ற
தாக்குதலும்
விதை மேல் மழை விழுவது போன்ற
பாராட்டும்.
——————————————————
வடிவேலு விவேக் ஒப்பிட
முடியுமா?
வடிவேலு வெகுளித்தனமான
புத்திசாலித்தனம்.
விவேக் புத்திசாலித்தனமான
வெகுளித்தனம்.
நான் இருவருக்குமே ரசிகன்.
——————————————————-
நன்றி;
பதிவிட்டவர்; சரபி. (http://www.yarl.com)
& குமுதம்





