வாழ்க்கை எங்கே இருக்கிறது? – கவிப்பேரரசு வைரமுத்து

இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட
வேண்டும் உணவை;
இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட
வேண்டும் கலவியை;
இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட
வேண்டும் பணத்தை.
இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட
வேண்டும் மூச்சை.
இந்த முயற்சிகளுக்கும் – முடியாமைகளுக்கும்
இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது
பாவப்பட்ட மனித வாழ்க்கை.

-

=============================================

அறிவோம் அறிவியல் – 1

அறிவோம் அறிவியல்
————————
இங்கே இருப்பவை நீங்கள் சரியா அல்லது தவறா என
விடை தர வேண்டிய கேள்விகள்:-

=======================================

1) நான்கு இந்திய மாநிலங்கள் தங்கள் பெயரில் (பிரதேஷ்)
பிரதேசம் என்ற வார்த்தைகளைக் கொண்டுள்ளன

2) (சிலப்பதிகார) கண்ணகியின் தந்தை பெயர் மாசாத்துவான்

3) புத்தர் பிறந்த இடமான லும்பினி தற்போது உத்ராஞ்சல்
மாநிலத்தில் உள்ளது

4) காந்திஜியை முதன்முதலாக ‘தேசபிதா’ என்றழைத்தவர்
நேதாஜி

5) தங்கம் பாதரசத்தில் மிதக்கும்

=====================================================

சரியான விடைகள் (அடுத்த பதிவில்)

மூக்குக்கு மேல் கோபம் வராமல் இருந்தால்…!

http://www.alaikal.com/news/wp-content/nametha.jpg

-வாழ்க்கையின் உயர்வு நம் நாக்கின் நுனியில் உள்ளதா..?

நாக்குக்கு கொஞ்சம் மேலே மூக்கின் நுனிக்கும் அந்த சக்தி உண்டு.
உங்களுக்கு மூக்குக்கு மேல் கோபம் வராமல் இருந்தால்…!
-
===========================================

அரசு பதில்கள், குமுதம்
படம்: இணையம்

 

வெற்றிகரமான அரசியல்வாதி…!

அரசியல் ஒரு சிலருகு மட்டும் வெற்றியாய் அமைவதன்
ரகசியம் என்ன..?


அரசியல் ஒரு வியாபாரம். அதைக் கடை விரித்து வியாபாரம்
செய்ய ஒரு தனித்திறமை வேண்டும்.
அது என்ன மாதிரியான திறமை என்று கேட்கிறீர்களா…?
-
இந்தக் குட்டிக் கதையைப் படியுங்கள்:-
-
விமான நிலையத்துக்குப் பக்கத்தில் வியாபாரி ஒருவன் கடை போட்டு
பாராசூட்டுகளை விற்றுக் கொண்டிருந்தான்.
‘ஸார்..! பாராசூட்டுகளை வாங்கிட்டுப் போங்க! விமானம் திடீர்னு விபத்துல
சிக்கும்போது கீழே குதிச்சு உயிர் பிழைக்கலாம் ஸார்….!’

ஒரு பயணி நின்றார்.
பாராசூட் என்ன விலை?
ரெண்டாயிரம் ரூபாய் ஸார்
சரி…வாங்கிக்கிறேன். விமானம் விபத்துக்குள்ளாகி நான் பாராசூட்டிலிருந்து
குதிக்கும்போது அது ஒரு வேளை விரியலைன்னா ….?

”பணம் வாபஸ் ஸார்”
அந்த பாராசூட் வியாபாரிதான் வெற்றிகரமான அரசியல்வாதி…!
-
===========================================================
>ராஜேஷ்குமார்
நன்றி: கல்கி 11-12-11

வயதானப்பிறகு தான் ஆன்மீகம்…

வயதானப்பிறகு தான் ஆன்மீகம் என்று பலரும் நினைக்கிறார்களே?

இது சரியா?

சரியா, தவறா என்பதல்ல பிரச்சனை. இது சௌகரியம்.
ஆடுகிற வரை ஆடிவிட்டு, ஆட முடியாமல் கைகால்கள் நடுங்குகிற

போது ஆன்மீகம் போய் கொள்ளலாமே என்று மனதில் ஏற்படுகின்ற
சௌகரியம்.

கைகால் நடுங்குவது வயதானால் தான் வரும் என்றில்லை.
வாலிபத்திலும் கைகால் நடுங்க, மனம் நடுங்க, வாழ்க்கை நடுங்க
நிறைய பேர் பார்த்திருக்கிறேன்.

துன்பம் வரும் பொழுது ஆன்மீகம். துன்பம் இல்லாத போது ஆன்மீகம்
இல்லை என்பதுதான் பலருக்கும் நிலையாக இருக்கிறது.

தன்னுடைய துன்பத்தைப் பற்றி அக்கறை உள்ளவருக்கு ஆன்மீகம் வயது
பார்த்து வருவதில்லை. தன் துன்பம், மற்றவர் துன்பம் எதுவும்
தெரியாதவர்தான் ஆன்மீகம் அப்பால் பார்த்துக் கொள்ளலாம் என்று
சொல்கிறார்கள்.

ஆன்மீகம் என்பது வயதோடு சம்பந்தப்பட்டது அல்ல. அனுபவத்தோடு
சம்பந்தப்பட்டது. ஆன்மீகம் என்பது மோசமான அனுபவங்களிலிருந்து
மீண்டு எவர் வெளியே வருகிறாரோ அவரிடம் பலமாகவும், தெளிவாகவும்
இருக்கும்.
-
==================================================

>பாலகுமாரன்

தீபாவளியைப் பற்றி …

தீபாவளியின் பெருமையைச் சொல்லும் புராணம்…

பிரம்ம வைவர்த்த புராணம்

நரகாசுரனின் பெற்றோர்…

வராஹமூர்த்தி, பூமிதேவி

நராகாசுரனின் இயற்பெயர்…

பவுமன் {பூமியின் பிள்ளை}

கிருஷ்ணரோடு யுத்தம் செய்ய நரகாசுரன் …வாகனத்தில்
வந்தான்

யானை

நரகாசுரனின் மகன் பெயர்…

பகதத்தன்

தீபாவளியை …நாளில் கொண்டாடி வருகிறோம்

ஐப்பசி தேய்பிறை சதுர்த்தி

தீபாவளி ஸ்நானத்தை ….என்றும் அழைப்பதுண்டு

நரகசதுர்த்தி ஸ்நானம்

கங்காதேவி தீபாவளியன்று எதில் வசிப்பதாகக் கூறுவர்..?

வெந்நீர்

தீபாவளி நாளிக் எண்ணெயில் …இருப்பதாக ஐதீகம்

லட்சுமிதேவி

வடநாட்டில் தீபாவளியன்னு  …வழிபாடு நடத்துவர்

லட்சுமி பூஜை, குபேர பூஜை

-
=====================================
நன்றி: தினமலர்

ஆண்களும் பெண்களைப் போல் முடி வளர்க்கிறார்களே?

==-

சி.முருகவேல், திண்டுக்கல்.

ஆண்களும் பெண்களைப் போல் முடி வளர்க்கிறார்களே?

அவர்கள் நமது உடைக்கு மாறுகிறார்கள்.
எனவே நாம் அவர்களின் ஜடைக்கு மாறுவோம் என்று.

========================

ஜூனியர் கேள்வி-பதில் – லேனா தமிழ்வாணன்

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரத்யேகப் பேட்டி

-

கேள்வி:

உங்களுடைய ‘ப்ரே ஃபார் மீ பிரதர்’ ஆல்பம் இந்தியாவிற்கு
மட்டும் என்றில்லாமல், உலகளாவிய மனித குலத்திற்கான
கருத்துகளைக் கொண்டிருந்தது.
இதற்கான எண்ணம் உங்களுக்கு எப்படித் தோன்றியது?

-
ரஹ்மான்:

கிறிஸ்துவர்களை எடுத்துக்கொண்டால் ரெட்கிராஸ், பள்ளிகள்
இப்படிப் பலவற்றை நிறுவி, நல்ல விஷயங்களை செய்துவிட்டுப்
போயிருக்கிறார்கள்.

நாம் பழைய காலத்தில் செய்திருக்கிறோம். இப்போது பங்களிப்பு
மிகவும் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. அதாவது,
மனிதகுலத்திற்கு இந்தியாவுடைய பங்களிப்பு குறைவாக இருக்கிறது
என்கிறேன்.

இன்னும் நிறையச் செய்திருக்கலாம். இந்த எண்ணமே எனக்கு
அப்படி ஓர் ஐடியாவைக் கொடுத்தது. நாம் 1.3 பில்லியன் மக்கள்
இருக்கிறோம். ஐடியாக்கள், தலைமைப்பண்பு என்று பார்த்தால்
ஒன்றுமே இல்லை.

ஊழல் நிறைந்த அரசாங்கங்கள் இருக்கின்றன. ஊழல் மலிந்துபோய்
விட்டது. ஆனால், இளைஞர்கள் தலைமை பதவிக்கு வந்தால்
மாற்றத்தை ஏற்படுத்தலாம்.

கிரிக்கெட்டில் சச்சின், சாஃப்ட்வேரில் நாராயணமூர்த்திபோல
வெவ்வேறு துறைகளில் ஒருசிலர் மட்டுமே இருக்கிறார்கள்.

ஆனால், நாட்டில் எல்லோருடைய கவனமும் சினிமாவில் இருக்கிறது.
ஒரு சுதந்திரமான ஐடியாவை வைத்துக்கொண்டு, அந்த
ஐடியாவின்மேல் நம்பிக்கை வைத்து அதை ஊக்கப்படுத்த நிச்சயமாக
இங்கே ஆட்கள் இல்லை.

அமெரிக்காவில் நிலைமை இப்படி இல்லை. அங்கே இந்தியர்களேகூட
பெரிய பணக்காரர்கள் இருக்கிறார்கள். ஆனால், இங்கே ஏதாவது
புதிதாக முயற்சித்தால் ‘அதெல்லாம் வொர்க் அவுட் ஆகாது மச்சான்’
என்று சொல்லி விடுவார்கள். முளையிலேயே கிள்ளிப்போட்டு விடுவார்கள்.

ஆனால், இப்போது மாற்றம் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக புதிய
தலைமுறை மாறிக்கொண்டு இருக்கிறது. ஒரு நல்ல நோக்கமிருந்து
அதற்காகச் செயல்பட்டால், உடனே விளைவை எதிர்பார்க்கக்கூடாது.
பொறுமை வேண்டும். ஐந்து வருடமோ, பத்து வருடமோ கழித்து
வரலாம். அதற்கு மேலும்கூட ஆகலாம். காத்திருக்க வேண்டும்.
ஆனால், நம்பிக்கை வேண்டும்.

இப்போது கஷ்டப்பட்டால், இந்த வருஷத்தைவிட அடுத்த வருஷம்
நல்லாயிருக்கலாம். அடுத்த வருஷம் கஷ்டப்பட்டால், அதற்கடுத்த
வருஷம் நல்லாயிருக்கலாம் என்று நினைக்க வேண்டும். ஆனால்,
நாம் இப்போதே ஒரு ஐடியாவை எடுத்துக்கொண்டு நாளைக்கே
அதன் விளைவை எதிர்பார்க்கிறோம்.

பொறுமையோடு காத்திருக்க வேண்டும்.

-

====================================

நன்றி: http://kalyanje.blogspot.com/2010/04/blog-post.html

தேனக்கள் தருகின்ற தேனும்…

தேனீக்கள் தருகின்ற தேனும், பட்டுப்பூச்சிகள்
தருகின்ற பட்டும் இலவசங்கள்தானா?
-
- பாவலர் அறிவரசன், திருலோக்கி,
-
பதில்: பேராசிரியர் கு.சானசம்பந்தன்

தங்களது கேள்வியில் அரசு நம் வரிப்பணத்தில்
தருகின்ற இலவசங்களைக் குறிப்பிட்டு அவை
போலவே தேனும் பட்டும் இலவசங்களா? எனக்
கேட்டிருக்கிறீர்கள்.

வரிப்பணங்கள் நம்முடையவை. ஆனால் தேனீக்கள்
தங்களது வாழ்க்கைக்காக உழைத்துச் சேகரிக்கும்
தேனையும் தன் உடம்பில் உருவாக்கித் தன்
வாழ்க்கையின் பாதுகாப்புக் கூடாக வைத்திருக்கும்
பட்டு நூலையும் மனிதர்கள் பயன்படுத்துகிறோம்.
இன்றைக்கும் கூட சமண, பௌத்த மதங்கøச் சார்ந்த
துறவிகள் தேனை அருந்த மாட்டார்கள்;
பட்டாடை உடுத்தமாட்டார்கள், தோல் செருப்பு
அணியமாட்டார்கள்;

சான்றாக சிலப்பதிகாரத்தில், சமணத் துறவியாகிய
கவுந்தியடிகள் “”தேன் கூடுகளிலிருந்து வழியும்
தேன் துளிகள் வாய்க்கால் வழியே வரும் நீரில்
கலந்திருப்பதால் அந்நீரை அருந்தமாட்டேன்”
எனக் கூறுவதைக் காண்கிறோம்.
-
================================

நன்றி: மஞ்சரி

கேள்வி-பதில் (பேராசிரியர் கு. ஞானசம்பந்தன்)

இன்றைய கவிர்ஞர்கள் இலக்கணத்தில் ஆர்வம்
காட்டுவதில்லையே ஏன்?

தாமல் கண்ணன், பெங்களூரு.
-
-மூவாயிரம் ஆண்டுகள் பழமையுடைய நம் தமிழ்
மொழி இலக்கணக் கட்டமைப்பு உடையது.
எழுத்து சொல், பொருள், யாப்பு, அணி எனும்
ஐந்து பகுதிகளை உடைய இலக்கண நூல்கள்
தமிழில் ஐந்திலக்கண நூல்கள் என அழைக்கப்
படுகின்றன.

ஓர் எழுத்து மற்றொரு எழுத்துடன் சேர்ந்து
சொல்லாக மாறி, பின் தொடராகி இலக்கண
விதிகளுக்கு உட்பட்டு, உவமை, உருவக
அணிகளால் அழகு செய்யப்பட்டு பின்னர்
கவிதையாக அது உருவாகிறது.

ஆயினும் திரைப்படப் பாடல்கள் இசை
இலக்கணத்துக்க உட்பட்டவை. திரையுலகில்
சாதனை புரிந்த உடுமலை நாராயணகவி,
கவி.கா.மு. செரீப், தஞ்சை ராமையாதாஸ்
பணியில் இருந்தவர்கள். பாரதி, பாரதிதாசன்
போன்றவர்களும் பள்ளி ஆசிரியர்களே.

கண்ணதான், வைரமுத்து, வாலி, மேத்தா,
எனத் தொடங்கி நா. முத்துக்குமார், கபிலன்
போன்ற இன்றையக் கவிஞர்களும் தமிழ்
இலக்கணம் கற்றவர்கள்தான்.

இசையமைப்பாளர்களான ஜி.இராமநாதன்,
கே.வி.மகாதேவன், எம்.எஸ். விஸ்வநாதன்,
இளையராஜா, போன்றவர்கள் நம்நாட்டின்
மரபு இசை தெரிந்தவர்கள், மேற்கத்திய
இசையின் தாக்கத்தால் இலக்கண வரம்புகள்
உடைந்து போயின. புதிய கவிஞர்களும்
ஓசைக்குப் பாட்டெழுத வந்ததால் இலக்கணம்
பற்றி கவலைப்படவில்லை.
-
======================================
நன்றி: மஞ்சரி

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 56 other followers