கவிப்பேரரசு வைர முத்து பதில்கள்….

வானில் தவழும் நிலா தரையில் தவழும் குழந்தை,
இரண்டில் உங்களைக் கவர்ந்தது எது?

நிலா என்பது வளர்ந்த குழந்தை.
குழந்தை என்பது வளரும் பிறை.
என்னைக் கவர்ந்தது தரையில்
தவழும் குழந்தைதான்.
ஏனென்றால்_
வளர்ந்த நிலாவுக்குக் கறை
உண்டு;
வளரும் பிறைக்குக் கறை இல்லை.

——————————————————–

செம்மொழி என்றால் என்ன?

ஈராயிரம் ஆண்டுகள் இலக்கண இலக்கியத்
தொடர்ச்சியுள்ள மொழி;
தன்னிலிருந்து சில மொழிகளை
ஈன்று கொடுத்த மொழி;
இன்னும் உயிருள்ள மொழி;
உலகப் பண்பாட்டுச்
செழுமைக்குப் பங்களிப்புச்
செய்த மொழி இவை போன்ற
தகுதிகளால் உலகத்தின் ஐந்தே
மொழிகளில் ஒன்றாகத் திகழும்
நம் மொழி செம்மொழி.

—————————————————–

இலக்கிய கூட்டங்கள் அரசியல்
கூட்டங்கள் என்ன வித்தியாசம்?

அன்று அரசியல் கூட்டங்களில் இலக்கியம்
இருந்தது.
இன்று இலக்கியக் கூட்டங்களில்
அரசியல் இருக்கிறது.

——————————————————-

புதிதாக வரும் பாடலாசிரியர்களுக்கு
என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

வளைந்து கொடுங்கள்;
ஒடிந்து விடாதீர்கள்.

——————————————————–

இல்லை… இல்லை… இல்லை… இல்லை…
நான்கு சொல்ல முடியுமா?

நிலாவில் காற்று இல்லை;
கொசுக்களுக்குப் பல் இல்லை;
தண்ணீர்ப் பாம்புக்கு விஷம் இல்லை;
சுவிட்சர்லாந்துக்கு ராணுவம் இல்லை;
இவை சாமர்த்தியமான இல்லைகள்;

ஜார்ஜ் புஷ்ஷ¨க்கு இதயம் இல்லை;
சதாம் உசேனுக்கு நீதி இல்லை;
ஈராக்கில் அமைதி இல்லை;
ஐ.நாவில் சத்தம் இல்லை
இவை சத்தியமான இல்லைகள்.

——————————————————–

கவிஞன் ஓவியன்
இருவருக்குமுள்ள வேறுபாடு என்ன?

வர்ணங்களில் கவிதை
தீட்டுகிறவன் ஓவியன்
வார்த்தைகளில் ஓவியம்
தீட்டுகிறவன் கவிஞன்.

——————————————————

மனிதனை உயர்த்துவது பாராட்டுதலா
அல்லது தாக்குதலா?

கல்மேல் உளி விழுவது போன்ற
தாக்குதலும்
விதை மேல் மழை விழுவது போன்ற
பாராட்டும்.

——————————————————

வடிவேலு விவேக் ஒப்பிட
முடியுமா?

வடிவேலு வெகுளித்தனமான
புத்திசாலித்தனம்.

விவேக் புத்திசாலித்தனமான
வெகுளித்தனம்.
நான் இருவருக்குமே ரசிகன்.

——————————————————-
நன்றி;
பதிவிட்டவர்;  சரபி. (http://www.yarl.com)
& குமுதம்

செயற்கை மார்பகம். . .

- ஹாய் மதன் கேள்வி பதில்
————————————-
சி.பி.நாராயணசாமி, செக்கானூர்.

“சிலிகான் இம்ப்ளான்ட்’ செய்துகொண்டவர்களுக்குப்
பால் ஊறுவதில் பிரச்னை உண்டா? குழந்தை பால்
அருந்துவதில் சிரமம் ஏற்படுமா?

இம்ப்ளான்ட் (செயற்கையாக மார்பகத்தை பெரிதாக்குவது)
என்பது மேலேழுந்த வாரியாகச் செய்யப்படுவது.
நதிகளைப்போல் பாலின் உற்பத்தி ஸ்தலம் இருப்பது
மார்பகத்துக்கு உட்பகுதியில்! ஆகவே, பிரச்னை இருக்காது.

கர்ப்பமுற்ற பெண்ணின் மார்பகத்துக்கு உள்ளே “வியர்வைச்
சுரப்பிகள்’ உண்டு. ஒரே வித்தியாசம், அவை சுரப்பது பால்!
கர்ப்பம் தரித்த பிறகு, காம்புக்கு , நேர் பின்னால் உள்ள
சுரப்பிகள் சற்றுப் பெரிதாகும். இப்படிச் சுரக்கும் பால்
மெல்லியகுழாய்கள் மூலம் குட்டிக் குட்டி கோடவுன்களுக்கு
வந்து சேர்கிறது.

அங்கேயிருந்து மினி “டியூப்’கள் மூலம் பால் ஒவ்வொரு
காம்பின் நுனிக்கும் வந்து சேர்கிறது. பிறந்தவுடனே குழந்தை
அதை நுகர்ந்து தெரிந்துகொண்டு உறிஞ்சுவதுதான் ஆச்சர்யம்!

“இம்ப்ளான்ட்’, தோலுக்கு ஜஸ்ட் உள்ளே பொருத்தப்படுவது.
இதனால், மார்பகத்தின் மென்மை சற்று மாறும்தான்!
இயற்கையான மார்பகத்தில் பால் குடித்த குழந்தையை
இம்ப்ளான்ட் மார்பகத்துக்கு மாற்றினாலும்… பால் கிடைக்கும்.

ஆனால், இது என்ன… அவ்வளவு மிருதுவாக இல்லாமல்,
ஒரு மாதிரி இருக்கிறதே?! என்று குழந்தை சற்று வித்தியாசமாக
உணரக்கூடும்!
——————————————————————————–
நன்றி; ஆனந்த விகடன்

மங்காத செல்வம் எது?

மகான்களின் அறிவுரை தான் நமக்கு மங்காத
செல்வம். உதாரணத்துக்கு ஒன்று சொல்கிறேன்..
இது அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி சொன்னது..

ஒரு குரு. அவருக்கு நான்கு சீடர்கள்..
வகுப்பு தொடங்கியது..
ஒரு பானையைக் கவிழ்த்தார்..

“”இதில் என்ன இருக்கிறது?” என்று கேட்டார்..
மூன்று சீடர்களும் “ஒன்றுமில்லை’ என்று பதில்
சொல்கிறார்கள்..
நான்காவது சீடன் சொல்கிறான்:.
“”பானையில் காற்று இருக்கிறது.”.

குரு கேட்கிறார்..
“”சரி! இந்த பானையில் உள்ள காற்றை எடுத்துவிட
முடியுமா?”.
“”முடியாது!” என்கிறார்கள் அந்த மூன்று சீடர்கள்..
நான்காவது சீடன் “முடியும்’ என்கிறான்..
“”செய்துகாட்டு!” என்கிறார் குரு..
பானை நிறைய தண்ணீரை ஊற்றுகிறான். பானை
நிரம்பியது. “”காற்றை எடுத்துவிட்டேன்” என்கிறான்..
இப்போது குரு சொல்கிறார்:.

“”நண்பர்களே! நம் உள்ளத்தில் உள்ள தீமையை நாமாக
எடுத்துவிட முடியாது. அதே நேரத்தில் நல்லதை
நிரப்பினால் நமக்குள் இருக்கும் தீயவை தாமாகவே
அகன்று விடும்!”.

—————————————————

>தென்கச்சி.கோ.சுவாமிநாதன்

தெரிந்து கொள்ளுங்கள்!

1. `சக்கரவர்த்தி திருமகன்’ என்ற நூலின் ஆசிரியர்?

2. செம்மீன் என்ற நாவலை எழுதியவர்?

3. கடல் புறா என்னும் நாவலை எழுதியவர்?

4. `இந்தியன் பிலாசபி’ என்ற நூலை எழுதியவர்? .

5. நெஞ்சுக்கு நீதி என்ற நூலை எழுதியவர்?

6. மோகமுள் என்ற நாவலை எழுதியவர்?

7. சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்ற
சரித்திர நூல்களின் ஆசிரியர்?

8. சமீபத்தில் ஞானபீட விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்?

9. பத்திரிகை துறையில் பயன்படுத்தும் ஏ.பி.சி. என்ற
எழுத்துக்கள் விவரிக்கும் வார்த்தைகள்…?

10. லஜ்ஜா என்ற நூலை இயற்றிய பெண் எழுத்தாளர்?

——————————————————————————-
விடைகள்

10. தஸ்லிமா நஸ்ரீன்.
9. ஆடிட் பிïரோ ஆப் சர்க்குலேசன்.
8 . ஜெயகாந்தன்.
7. கல்கி.
6 . ஜானகிராமன்.
5. மு.கருணாநிதி.
4 டாக்டர் ராதாகிருஷ்ணன்
3 . சாண்டில்யன்.
2 . தகழி சிவசங்கரன் பிள்ளை.
1 . ராஜாஜி.

நன்றி
http://www.dailythanthi.com
http://thamilislam.wordpress.com/

Brain Teasers & Trick Questions!

A man and his son were in an automobile accident.
The man died on the way to the hospital, but
the boy was rushed into surgery. The emergency room
surgeon said “I can’t operate, that’s my son!”
How is this possible?

The surgeon was his mother.

——————————————————————————–

How far can you walk into the woods?

Half way,after that you are walking ou of the woods.

——————————————————————————

Why is George Washington’s official birthday celebration
held on February 22 when he was actually born on
February 11?

We lost eleven days when we changed from the Julian
to the Gregorian calendars during his lifetime. So Washington
celebrated his birthday eleven days later to make it a year
after his last birthday.

——————————————————————————-

There was an airplane crash, every single person died,
but two people survived. How is this possible?

They were married.

——————————————————————————–

What can run but never walks, has a mouth but never talks,
has a head but never weeps, and has a bed but never sleeps?

A river!
————————————————————————————

What is light as a feather, but even the strongest man
cannot hold it more than a few minutes?

His breath!
————————————————————————————–
Thanks:
posted by Rainier

தமன்னாவும்,நயன்தாராவும். . .

kumudam image

மழை நேரத்தில் நள்ளிரவில் ரோட்டின் ஓரத்தில் நிற்கிறீர்.
தமன்னாவும்,நயன்தாராவும் டூ வீலரில் வந்து உமக்கு லிஃட்
தருகிறேன் என்று அடம் பிடிக்கிறார்கள்.
யார் பின்னால் உட்காருவீர்..?
>எம்.மிக்கேல் ராஜ், சாத்தூர்.

நிஜமாகவே நல்ல மழை நேரத்தில் நல்ல கேள்வி அய்யா.
நான் என்ன செய்வேன் ? தமன்னாவுக்கு ஓகே நயன்
வருத்தப்படும். என்ன செய்வது ? ம் காலம் வேறு கெட்டுக்
கிடக்கிறது. சரி போங்கள். வேறு வழியில்லை.

நமக்குத் தெரிந்த பெண்கள் இப்படி மழை நேரத்தில் நள்ளிரவில்
தனியே போவதுஅத்தனை பாதுகாப்பானது இல்லையே.
அதனால் சின்னபெண் தமன்னா வண்டி ஓட்டுவது ஆபத்து
என்பதால் அவரது வண்டியை ஓரங்கட்டி நிறுத்தச் சொல்வேன்.

நயன்தாரா அனுபவம் உள்ளவர் என்பதால் அவரை வண்டி ஓட்டச்
சொல்லிவிட்டு, அவரது பின்னால் நான் உட்கார்ந்து கொண்டு,
என் பின்னால் தமன்னாவை உட்காரச் சொல்வேன்.
சந்தோஷம்தானே ?

————————-

நன்றி;

அரசு பதில்கள் (குமுதம்)

ஜூனியர் கேள்வி-பதில்

– லேனா தமிழ்வாணன்

(படித்ததில் பிடித்தது)

http://www.tamilvanan.com/ஜூன் 6, 2009

——————-

நீங்கள் சீனியர் சிட்டிசன்தானே?

இதில்கூட நான் ஜூனியர்தான்! உள்ளத் தேடுதல் உள்ளவரை
இதயத்தில் இளமை உணர்வு உள்ளவரை ஒருவருக்கு
வயோதிகம் என்பது இல்லை.
இதை ஞாபகத்தில் நிறுத்துங்கள்.

—————————————————-

இப்போதெல்லாம் பிள்ளைகள் அக்கறையாகப் படிக்கிறார்களே?

கனவுகள், எதிர்பார்ப்புகள்தாம் காரணம். ஆனால் கூடவே
தன்னம்பிக்கைப் பாலையும் சாப்பிடவேண்டும். இதைச்
சாப்பிடமாட்டேங்கிறார்கள். அதனால் வரும் குறைபாடுகள்தாம்
பெரியவை. இந்தத் தன்னம்பிக்கைப்பாலை ஆவின் நிறுவனம்
தராது. ஆசிரியர்கள்தாம் தர வேண்டும். ஆசியர்களே!
சம்பளம் வேண்டுமானாலும் கொஞ்சம் கூட்டிக் கூடக் கேளுங்க!
ஆனால், தன்னம்பிக்கையை மாணவர்களுக்குத் தர மறந்துவிடாதீங்க!

————————————————

உங்களுக்கு யாரையெல்லாம் பிடிக்காது?

யார் முகங்களில் கடுகைப் போட்டால் தாளிப்புச் செய்யலாமோ,
அவர்களையெல்லாம்!

—————————————————–

யார் யாருக்கு ஹார்ட் அட்டாக் வரும்?

இதைப் பற்றியெல்லாம் மருத்துவர்கள் நிறையவே சொல்லிவிட்டார்கள்.
தொலைக்காட்சி, வானொலியைத் திருகினால் நாளெல்லாம்
மருத்துவர்கள்தாம் பேசுகிறார்கள். நான் மட்டும் ஒன்றைச் சேர்த்துச்
சொல்லவா? இதயத்தில் ஈரமில்லாமல் எதற்கெடுத்தாலும்
கத்துகிறார்களே அவர்களுக்கும் வரும்.

—————————————

மகளிர் இட ஒதுக்கீடு எப்படியும் நிறைவேறி விடுமல்லவா?

ஓர் ஆணாக இருந்தும் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள்.
பாராட்டுகிறேன்! இதுவரை கண்துடைப்பாக நடந்து வந்த இந்த
விஷயம் நெருக்கிக் கொண்டு வரப்பட்டுவிட்டது.

காங்கிரஸின் மெஜாரிட்டி, காங்கிரஸின் தலைமைப்பதவியில் உள்ள
பெண்மணி இவற்றை இணைத்துப் பார்க்கும்போது நிறைவேறியே
தீரும் என்று தோன்றுகிறது.
————————————–

ஹாய் மதன் கேள்வி – பதில்

மகாபாரதப் போரில் எல்லாருமே அம்பரா தூணியில் மூன்று நான்கு அம்புகளே
வைத்துள்ளார்கள். 18 நாட்களுக்கு இத்தனை அம்புகள் போதுமா?

எப்படி போதும்! ஓவியங்களில் “சிம்பாலிக்’ ஆகக் காட்டுகிறார்கள்!
உண்மையில் ரதத்தின் பின்னால் கூடை கூடையாக அம்புகள் ரெடியாக
இருக்கும்.

பியான்ஸே நோல்ஸ் என்னும் பிரபல பாப் இசைப் பாடகி, மேடையில்
டான்ஸ் ஆடும்போது சூயிங்கம் மெல்வார். பிறகு, பாட ஆரம்பிக்கும்போது
அதைத் துப்புவார். துப்பிய சூயிங்கத்தைக் கையில் ஏந்திக் கொள்வதற்காகவே
ஒருவர் உண்டு! அப்படி இருக்க, அர்ஜுனனுக்குத் தொடர்ந்து அம்புகள்
எடுத்துக்கொடுக்க ஒரு வீரர் அவர் பின்னாலே இருக்கமாட்டாரா என்ன?

(எதையும் ஒப்பிடுவது என்பதில் ஒரு விவஸ்தை கிடையாதா என்கிறீர்களா?!)

—————————————–

ananthavikadan image

வீரபாண்டியக் கட்டபொம்மன் ஆங்கிலேயர் வரி கேட்டபோது
சிவாஜிகணேசன் மாதிரி வசனம் பேசினாரா?

ஆங்கிலேயர்கள் ரொம்பத் “தெனாவட்டாக’த் திரிந்த காலம் அது.
நிலைமை புரியாமல் கட்டபொம்மன் “வெள்ளைக்காரப் பசங்களுக்கு நான்
ஏன்யா வரி கட்டணும்?’ என்று நிச்சயமாக முரண்டு பிடித்திருப்பார்.

“என்னா மேன், திமிரா பேசறே?’ என்று சொல்லி, உடனடியாக
கங்காரு கோர்ட் ஸ்டைலில் மேஜை போட்டு “நீதிபதி’ ஒருவரை
உட்காரவைத்து தீர்ப்பு எழுதி, கட்டபொம்மனைக் கைது செய்து,
அருகில் இந்த ஒரு புளியமரத்தில் தூக்கில் தொங்கவிட்டார்கள்.

“என் கவுன்ட்டர்’ மாதிரிதான்! பிரிட்டிஷ் சிப்பாய்கள் துப்பாக்கிகளை
வைத்து குறி பார்த்தால், கூடி இருந்த மக்கள் மிரண்டு போய் நின்றிருக்க
வேண்டும்.

ஆனால் ஒன்று – சிவாஜி பேசிய வசனத்தை கட்டபொம்மனிடம்
கொடுத்திருந்தால் “அட, ரொம்ப பிரமாதமா இருக்கே!’ என்று பிரமித்து,
அதை அப்படியே பேசி இருப்பார். அதற்கான நேரத்தை வெள்ளைக்காரர்கள்
கொடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே!

—————————————————————–

நன்றி

ஹாய் மதன் கேள்வி – பதில்,ஆனந்த விகடன்

http://www.dinamalar.com/piraithalkal

/ananthavikadannewsdetail.asp?news_id=194&dt=08-05-09

அரசு பதில்கள்

kumudam image

அரசியலில் ரஜினிக்கு வராத துணிச்சல், விஜய்க்கு எப்படி வந்தது ? அவ்வை கே.சஞ்சீவி பாரதி, அவ்வையார் பாளையம்.

இதற்குப் பெயர் துணிச்சல் அல்ல. ஆசை.

——————————————————————-

சானியா மிர்ஸாவை கல்யாணம் செய்துகொள்ளப் போகிறவர் டென்னிஸ் மட்டையில்தானே அடி வாங்குவார் ? மு.ரா. பாலாஜி, கோலார் தங்க வயல்.

கத்தி எடுத்தவர் கத்தியால் சாவது போலவா?

——————————————————————–

பாரதியார் பத்திரிகை ஆசிரியர்,எழுத்தாளர், கவிஞர், மூர்க்கத்தனமான தேசபக்தர் என்பதோடு சிறந்த கார்ட்டூனிஸ்டாகவும் இருந்திருக்கிறாமே ? ச.ந.தர்மலிங்கம். சத்தியமங்கலம்.

ஆமாம். அவர் கார்ட்டூன் வரைவதற்கு முன் அந்த கார்ட்டூன் பாத்திரத்தை எப்படி வரைவது என்று அவரே நடித்துப் பார்ப்பாராம். உடம்பை வளைத்து நெளித்து, முகத்தை அஷ்ட கோணலாக வைத்து, திடீரென்று தரையில் விழுந்து புரண்டு ஒத்திகை பார்ப்பாராம். அதைப் பார்த்துத்தான் பாரதியார் திடீர்திடீரென்று மனநிலை குன்றியவர்போல நடந்து கொள்கிறார் என்று கூட சிலர் கிண்டலடித்ததுண்டு.

—————

நன்றி; குமுதம் 17-7-09

http://www.dinamalar.com/piraithalkal/kumudamnewsdetail.asp?news_id=193&dt=07-22-09

மல்லிகைப் பூ. . .

படித்ததில் பிடித்தது

http://nitharsanam.net/wp-content/uploads/2007/11/priyamani02.jpg

மல்லிகைப் பூவுக்கு மட்டும் ஏன் தனி அட்ராக்ஷன்?

கடவுளை யோசித்தப்படி மல்லியை வாங்கினால்,

மனதில் பக்தி மணம் கமழ ஆசுவாசம் வீசும்.

மனைவியை யோசித்தப்படி வாங்கினால் இல்லற விசுவாசம் வீசும்.

காதலியை யோசித்தப்படி வாங்கினால், அவளின் சுவாசம் வீசும்.

ஒன்றுமே யோசிக்காமல் வாங்கினால், சாவாசமாய் வீசும்.

இப்படி யோசனைக்கு ஏற்ற வாசனை மல்லிகைப் பூவுக்குத்தான் உண்டு.

*****************************

நன்றி; கிரேஸியைக் கேளுங்கள்- கல்கி

photo: from net

« பழைய வரவுகள்