மே மாதம் மூன்றாம் தேதி, எனக்கு எழுபது வயது நிறைகிறது.
இதற்கான அடையாளங்கள் என்ன என்று யோசித்துப் பார்க்கிறேன்.
மெரீனாவில் நடக்கும்போது எதிர்ப்படுபவர்கள் பெரும் பாலும்
என்னைவிட சின்ன வயசுக்காரர்களாகத் தெரிகிறார்கள்.
ஒரு தாத்தா மாட்டினார். நிச்சயம் என்னைவிட மூத்தவர்.
சிமென்ட் பெஞ்சில், என் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார்.
“யு ஆர் எ ரைட்டர்! எனக்கு எத்தனை வயசு சொல்லுங்க,
பார்க்கலாம்!” என்று கண் சிமிட்டலுடன் கேட்டார்.
நான் யோசித்து, ‘‘கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கோ”
என்றேன்.
“எதுக்குப்பா?”
“தொடுங்களேன்!”
சற்று வியப்புடன் தொட்டார்.
“மத்த விரல்களை றெக்கை மாதிரி அசை யுங்கோ!” என்றேன்.
‘‘இதிலிருந்து கண்டுபிடிச்சுட முடியுமா, என்ன? என்று,
விரல்களைச் சொன்னபடி அசைத் தார்.
“ரெண்டு கையையும் பரப்பி, ஏரோப்ளேன் மாதிரி வெச்சுண்டு
ஒரே ஒரு தடவை லேசா குதிங்கோ. பாத்து… பாத்து…”
“இது என்னப்பா ட்ரிக்கு?” என்று அப்படியே செய்தார்.
“உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு!”
என்றேன்.
அசந்து போய், “கை குடு. எப்படிப்பா இத்தனை கரெக்டா சொன்னே?”
“ஒரு ட்ரிக்கும் இல்லை, சார்! நேத்திக்குதான் இதே பெஞ்சில்,
இதே சமயம் வந்து உட்கார்ந்து, உங்க வயசு, பர்த்டே எல்லாம்
சொன்னீங்க. மறந்துட் டீங்க!” என்றேன்.
-
===================================
>சுஜாதா
(கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)


