செங்கால் நாரை

ஆயிரத்திஐநூறுஆண்டுகளுக்கு முன் கும்பகோணதிற்கு
அருகேயுள்ள சத்திமுத்தம் என்ற கிராமத்தில் வாழ்ந்த
கவி ஒருவர் மதுரைக்குப் பயணித்திருந்தபோது அங்கு
வலசை போகும் செங்கால் நாரை ஜதை ஒன்றைக்
கவனித்திருக்கின்றார். சத்திமுத்தப் புலவர் இந்த நாரையை
வர்ணித்து, மனைவியிடம் தூது போகும்படி கேட்டுக் கொள்வதாக
ஒரு பாடல் உள்ளது.

——————————————————————————

ஆனால் இன்று உலகின் மற்றெல்லாப் பறவையினங்களையும் போலவே செங்கால் நாரையும் அரிதாகிக் கொண்டு வருகின்றது

இதயம் கொண்டு யோசித்தால். . .

முல்லைக்கு தேர் தந்த பாரிக்கு தற்கால சந்ததியர்
‘அரைக் கிறுக்கன்’ பட்டம் தந்து சந்தோக்ஷப்பட்டுக்
கொள்கிறார்கள்.

காட்டுக்கு வேட்டைக்குப் போன பாரி ஆள்படை
இல்லாமலா போயிருப்பான்? ஒரு ஆள்வைத்து முல்லை
படர பெரிய பந்தலே போட்டுத் தந்திருக்கலாமே. எதற்கு
முன் யோசனை இல்லாமல் தன் தேரை அதற்கு தாரை
வார்க்க வேண்டும் என்பது அவர்களின் வாதம்.

குதிரையையாவது கழட்டி விட்டானா இல்லை அதையும்
தேரோடையே பலிபோட்டுட்டு வந்துட்டானா என்று
சொல்லி  ‘கெக்…கெக்கே’ என்று சிரிக்கிறார்கள்.

வேட்டைக்குப் போன மனுசன் புலி, சிங்கம்னு அடிச்சி
எடுத்துட்டு வராம வெறுங்கையோட வரதும் இல்லாம,
கொண்டு போன தேரையும் இல்லை விட்டுட்டு
வந்துட்டான்னு அவன் மனைவிக்கு எத்தனை கஷ்டமா
போயிருக்கும், நானா இருந்திருந்தா விவாகரத்துக்கு
போயிருப்பேன் என்று ஜீன்ஸ் பொண்ணு ஒண்ணு
என்கிட்டயே கேட்டுச்சி.

‘பாரி கஷ்டத்தையும் அதுக்கான உதவியையும் மட்டுமே
பாத்தான் ஆனா நீங்க…’ என்று ஆரம்பித்து பாரிக்காக
நான் வாதாட ஆரம்பிப்பதற்குள்ளாகவே அவர்கள்
‘போதும் புலவரே… மீதி பாடலை நாளை பாடும்…’என்று
சபையை கலைத்துக்கொண்டு மீண்டும் அதே கெக்…கெக்கே…

இதெல்லாம் மூளை கொண்டு யோசிப்பதனால் வரும் விபரீதம்,
இதயம் கொண்டு யோசித்தால் பாரியின் கருணையும் அதன்
வீர்யமும். தாத்பர்யமும் புரியும்.
———————————————
(படித்ததில் பிடித்தது)

–எழில் வரதன்,”காருண்யம் கட்டாய கடாட்சம்”
கட்டுரையிலிருந்து….
http://www.keetru.com/literature/short_stories/ezhilvaradhan.php

TOPLESS BEAUTIES !

தீராத விளையாட்டுப் பிள்ளை. . .

பாரதியின் கவிதைகள் : கண்ணன் பாட்டு : கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை

தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன்
தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத)

1. தின்னப் பழங்கொண்டு தருவான்; – பாதி
தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;
என்னப்பன் என்னையன் என்றால் அதனை
எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத)

——————-

பாடல் வரிகளை முழுமையாகப் படிக்க & மற்றும்

ஒலி வடிவில் கேட்க சுட்டி;

http://enbharathi.blogspot.com/2009/03/blog-post_6495.html#sres

சூரியன் வருவது யாராலே ?

சூரியன் வருவது யாராலே ?

சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?
பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

தண்ணீர் விழுந்ததும் விதையின்றித்

தரையில் முளைத்திடும் புல்ஏது ?
மண்ணில் போட்டது விதையன்று
மரஞ்செடி யாவது யாராலே ?
கண்ணில் தெரியாச் சிசுவைஎல்லாம்
கருவில் வளர்ப்பது யார்வேலை ?
எண்ணிப் பார்த்தால் இதற்கெல்லாம்
ஏதோ ஒருவிசை இருக்குமன்றோ ?

எத்தனை மிருகம்! எத்தனைமீன்!

எத்தனை ஊர்வன பறப்பனபார் !
எத்தனை பூச்சிகள் புழுவகைகள் !
எண்ணத் தொலையாச் செடிகொடிகள்!
எத்தனை நிறங்கள் உருவங்கள் !
எல்லா வற்றையும் எண்ணுங்கால்
அத்தனை யும்தர ஒருகர்த்தன்
யாரோ எங்கோ இருப்பதுமெய்.

அல்லா வென்பார் சிலபேர்கள் ;

அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’
என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே

அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்.
———————————————-

நாமக்கல் கவிஞர்
இராமலிங்கம் பிள்ளை (1888-1972) பாடல்கள்

வீரப்பலகாரம் வேண்டும்!

ஒரு முறை சுப்பிரமணிய பாரதியார் பொதுக்கூட்டம் ஒன்றில்
வீர உரை நிகழ்த்தினார். அங்கு கூடியிருந்த மக்கள் அவரது
பேச்சை ரசித்துக் கேட்டனர்.

கூட்ட முடிந்தது.  விழா அமைப்பாளர் பாரதியாரிடம்,
தங்களுக்கு என்ன பலகாரம் வேண்டும்? -சொல்லுங்கள்.
பையனை அனுப்பி வாங்கி வரச் சொல்கிறோம்.” என்றார்.

உடனே பாரதியார், “எனக்கு வீரப்பலகாரம்தான்
வேண்டும் ” என்றார்.

“வீரப்பலகாரமா? நாம் இதுவரை கேள்விப்படாததாக இருக்கிறதே?”
என்று கூட்ட அமைப்பாளர் குழம்பிப் போனார்.
அங்கிருந்தவர்களும் விழித்தனர்.

உடனே பாரதி, “நான் சொல்வது உங்களுக்குப் புரியவில்லையா?
பஜ்ஜி, மெதுவடை, இட்லி போன்ற பலகாரங்கள் எல்லாம் கோழைப்
பலகாரங்கள்.வாயில் போட்டதும்,சத்தம் போடாமல்

சாத்வீகமாக உள்ளே போய்விடும்.

ஆனால் பக்கோடா, முறுக்கு, சேவு போன்ற பலகாரங்கள்
வீரப் பலகாரங்கள். இவைகளை வாயில் போட்டதும்
“நொறுக்கு நொறுக்கு” என்றும் “கடக்கு முடக்கு” என்றும் பல்லிற்கு
வீரமான வேலை கொடுக்கும் அல்லவா? எனவே இவை
வீரப் பலகாரங்கள்தனே?” என்றார்.

———–

பாரதிதாசன்

நண்பர் ஒருவரின் திருமணத்துக்குச் சென்றிருந்தார்
பாரதிதாசன். அவருடைய இயற்பெயர் கனகசுப்புரத்தினம்.
திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு நடைபெற்ற விருந்திற்குப்
பின் பாரதியாரின் நாட்டுப்பாடல் ஒன்றைப் பாடினார்
பாரதிதாசன்.

அங்கே வந்திருந்த பாரதியாரும் அந்தப்
பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். பாரதியாரிடம் அறிமுகம்
செய்து வைக்கப்பட்டார் பாரதிதாசன். ஒரு நாள் நண்பர்களுடன்
பேசிக் கொண்டிருந்த பாரதியார், “சுப்புரத்தினம் கவி இயற்றிட
வல்லவன்…’ என கூறினார்.

அவருடைய கவிதையைக் கேட்க ஆசைப்பட்டனர் நண்பர்கள்.
அங்கிருந்த சுப்புரத்தினத்தை உடனே அழைத்து ஒரு பாட்டுப்
பாட சொன்னார் பாரதியார்.

அப்பொழுதே,
“எங்கெங்குக் காணினும் சக்தியடா தம்பி,
ஏழுகடல் அவள் வண்ணமடா…’ என்ற பாடலைப் பாடினார்
சுப்புரத்தினம். அனைவரும் பாராட்டினர்.

அந்தக் கவிதையின் தலைப்பில்,
“ஸ்ரீசுப்ரமணிய பாரதி கவிதா மண்டலத்தைச் சேர்ந்த
கனக சுப்புரத்தினம் எழுதியது’ எனக் குறிப்பிட்டு,
சுதேசமித்திரன் இதழிற்கு அனுப்பி வைத்தார்.

* * *
நன்றி;
- ரசிக்கவும், சிந்திக்கவும் 150 இலக்கிய நிகழ்ச்சிகள் என்ற நூலிலிருந்து…

http://www.dinamalar.com/varamalar/vmraug-1708/varamalar12_1708.asp

தமிழ் தாத்தாவின் அறிவுரைகள்

தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதய்யர்
(கி.பி.1855 – 1942)
—————————————————————-

மிகப் பெரிய மனிதர்களுடைய சுயசரிதம் நம் ஆழ்மனதில்
வைராக்கியத்தையும, இலட்சியத்தையம் ஏற்படுத்தும்.

பெண்களின் கடமை, நினைவு மஞ்சரி. நல்லுரைக் கோவை ,அவர்
படைப்புகளில் சில குறிப்பிடத்தக்கவை. 87 ஆண்டுகள் வாழ்ந்து
87 நூல்களை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்துப்பாட்டு, புறநானூறு முதலிய சங்க நூல்களையும் சிலப்பதிகாரம்,
மணிமேகலை முதலிய காவிய நூல்களையும் கரையான் வாயிலிருந்து
காத்து தமிழ் உலகுக்கு அளித்திவர்.

தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சா அவர்களுக்கு தமிழில்
பல இலக்கியங்கள், கட்டுரைகள் படைத்தமைக்காக சென்னை பல்கலைக்
கழகம் மிகப்பெருப் புலவர் எனும் பொருளமைந்த மகாமகோபாத்தியாய
எனும் கெளரவத்தை ஆங்கில அரசு அளித்து சிறப்பித்தது.

———————————————————————–

தாத்தாவின் அறிவுரைகள்

பிறர் செய்த குற்றத்தை மறந்து விடுதலும் பலரிடையே எடுத்துக்
கூறாமையும் நன்மையாகும்.

எந்த சமயத்தோரானாலும் எந்த தேசத்தவரானாலும் சகோதரராய்
இருக்க வேண்டும்

எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ணல் வேண்டும்.
திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும்.

கேட்டல், படித்தல், சிந்தித்தல். தெளிதல் என்ற நான்கும்
உங்களை முன்னுக்கு கொண்டு வரும்.

இதயம் ரோஜா மலராக இருக்கும்போது நினைவும் நறுமணமாகத்தான்
இருக்கும்

——————————–

சங்கு – பாரதியார்

பாரதியின் கவிதைகள் : ஞானப் பாடல்கள் : சங்கு

தெய்வப் பாடல்கள்
ஞானப் பாடல்கள்
சங்கு

(posted bdy :http://enbharathi.blogspot.com/2009/04/9_30.html)

——————

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
    சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்
    பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம் !
                                         1
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
    இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
    தூய ராமென்றிங் கூதேடா சங்கம் !
                                         2
பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,
    புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர்
    ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம் !
                                         3
மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
    மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
    சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம் !

கிளி விடு தூது

பல்லவி

சொல்ல வல்லாயோ? – கிளியே!
சொல்ல நீ வல்லாயோ?

அனுபல்லவி

வல்ல வேல்முரு கன்தனை -இங்கு
வந்து கலந்து மகிழ்ந்து குலாவென்று (சொல்ல)

சரணங்கள்

தில்லை யம்பலத்தே – நடனம்
செய்யும் அமரர்பிரான் -அவன்
செல்வத் திருமகனை – இங்கு வந்து
சேர்ந்து கலந்து மகிழ்ந்திடு வாயென்று (சொல்ல)

அல்லிக் குளத்தருகே – ஒருநாள்
அந்திப் பொழுதினிலே – அங்கோர்
முல்லைச் செடியதன்பாற் -செய்தவினை
முற்றும் மறந்திடக் கற்றதென்னேயன்று (சொல்ல)

பாலை வனத்திடையே – தனைக் கைப்
பற்றி நடக்கையிலே – தன் கை
வேலின் மிசையாணை – வைத்துச் சொன்ன

விந்தை மொழிகளைச் சிந்தை செய்வாயென்று (சொல்ல)

—————————

சி. சுப்ரமணிய பாரதியார்
-  தோத்திரப் பாடல்கள் 2

நன்றி; http://www.tamilnation.org/literature/bharathy/kavithaikal/theiva2.htm

« பழைய வரவுகள்