-
கடனில் மிச்சமோ, நெருப்பில் மிச்சமோ, பகைவனில்
மிச்சமோ வைக்காதே. அவை மறுபடியும் கிளம்பி
உன்னை அழிக்க முற்படும்
-
கர்வம் – அதுதான் முட்டாள்களை விட்டு ஒரு போதும்
நீங்காத துர்க்குணம்
-
கவலை நமது சவப்பெட்டியில் ஓர் ஆணியை அறைகின்றது.
இன்பமாகச் சிரிக்கும் ஒவ்வொரு சிரிப்பும் ஓர் ஆணியைக்
கழற்றுகின்றது.
-
காலையில் ஒரு மணி நேரத்தைத் தொலைத்துவிட்டால், அன்று
முழுக்க நீங்கள் அதைத் தேட வேண்டி இருக்கும்
-
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்.
-
காலத்தின் மதிப்பு தெரிந்த மனிதனுக்கு வாழ்வின் மதிப்பும்
தெரியும்
-
காலம் பொன்னைவிட மதிப்புயர்ந்தது. பொன் போனால்
ஈட்டிக்கொள்ளலாம். காலம் போனால் மீட்ட முடியாது.
-
குழந்தைப் பருவ இதயத்தை எவன் இழக்காமல் இருக்கிறானோ,
அவனே உயர்ந்த மனிதன்
-
=============================================
