
எழு கழுதை’ என்பது ‘ஏழு கழுதை’ என்று மருவியதாக
என்னருமைத் தமிழாசிரியர் மங்கலமன்னன் விளக்கியிருக்கிறார்.
“அய்யா, திட்டுறதோ திட்டுறீங்க பொருள் சொல்லிட்டுத் திட்டுங்க”னு
கேட்டுக்கிட்டதுக்கு அவர் விளக்கம் கொடுத்துப் பிறகு திட்டினாரு.
இல்லே திட்டின பிறகு விளக்கம் கொடுத்தாரு. ஏதோ ஒண்ணு.
அதாவது சுமை ஏற்ற ஏற்ற கழுதை எழுந்து நடக்குமாம்
(“கழுதை எப்ப உக்காந்துச்சு ஐயா” என்று கேட்டதற்கும் சூடாகப் பதில்
கிடைத்தது). குட்டிக்கழுதை என்றால் சுமை ஏற்றியதும் உட்கார்ந்து
விடுமாம்.
பொதி சுமக்கும் நிலை வந்த கழுதை மட்டுமே எழுந்து (அல்லது
உட்காராமல்) நடக்குமாம்.
குடும்பச்சுமைக்குத் தயாரான வயதைக்குறிப்பிட அப்படிச்
சொல்லியிருக்கலாம்.
-
>அப்பாதுரை
===================================================
(படித்ததில் பிடித்தது)
