தலைவரோட தசாவதாரம்!-(நகைச்சுவை)

‘’மாப்பிள்ளை கிரிமினல் லாயர்னு சொல்லி ஏமாத்திட்டாங்க்!’’
‘’எப்படி?’’
‘’இதுவரை மூணு கொலை பண்ணியிருக்கிராராம்!’’

>பா.ஜெயக்குமார்

—————————————————————————————-
‘’படத்தில் ஒரு காரை சஸ்பென்ஸா காட்டறோம்…கடைசியில் ஹீரோ
அந்தக் காரை உடைக்கிறார்!’’
‘ஏன்?’’
‘’சஸ்பென்ஸை உடைக்க வேண்டாமா?’’

>பிரியதர்ஷன்

—————————————————————————————-

‘’நீங்க எனக்குத் தர வேண்டிய ஃபீஸை எதுக்கு உங்க தாத்தாகிட்டே
போய் கேட்கணும்?’’

எனக்கு வந்திருக்கிறது
பரம்பரை வியாதின்னு நீங்கதானே டாக்டர் சொன்னீங்க’’

>அதிரை புகாரி

———————————————————————————————

‘‘அதோ போறது தலைவரோட தசாவதாரம்!’’

‘’என்ன சொல்றே?’’

‘’தலைவரோட பத்தாவது தாரம்!’’

>லாவண்யா

———————————————————————————————
‘’ஓட்டல்லே சாப்பிட்டு முடிச்சுப் பார்க்கறேன்..கையிலே காசு இல்லை..!’’

‘’அடடா! அப்புறம் என்ன பண்ணினே?’’

‘’பாக்கெட்லேர்ந்து எடுத்துக் கொடுத்தேன்’’

>பிரியதர்ஷன்

________________________________________________________

நன்றி; ஆனந்த விகடன் 25-6-08

2 மறுமொழிகள்

  1. praba சொன்னது,

    ஜூலை 17, 2009 இல் 1:04 பிற்பகல்

    dsas

  2. poonkathir சொன்னது,

    ஆகஸ்ட் 17, 2009 இல் 9:56 மு.பகல்

    paravaaillai


மறுமொழியொன்றை வழங்குக