படித்ததில் பிடித்தது
நன்றி; http://msaravanakumar.blogspot.com/

இன்னமும்
மொழி ஊடுருவியிராமல்
எஞ்சி கிடக்கும் ஆழ்மனப்பரப்பில்
புலன்கள் பற்றியெரிய
பயணிக்கிறாய் நீ..
என்னில் நிகழ்த்தும்
உன் பயணங்களின் அதிர்வுகளைக்
குறிப்பெடுக்கவும் முடியாமல்
உன்னிடம்
அதைத் தெரிவிக்க
மொழியும் இல்லாமல்
உன் பாதச்சுவடுகளை மோகித்து
கிடக்கிறேன்..
**********************************************
