ஓராயிரம் பொருள் கிடைக்கும்
உற்று நோக்கினால்
படைப்பதற்கு
மேடுகளைத் தகர்த்து
பள்ளம் நிரப்பு சமத்துவம்
பொதுவுடமை
விழி இரண்டு போதாது
வனப்பை ரசிக்க
வண்ண மலர்கள்
ஒய்வதில்லை
விண்ணும் மண்ணும் அலையும்
ஒய்ந்திடும் மனிதன்
வெட்ட வெட்ட
வளரும் பனைமரம்
பாராட்ட வளரும் குழந்தை
குடியால் கோடிகள் திரட்டி
கோடித் துணி தந்தனர்
ஏழைகளுக்கு
புதிய பொருளாதாரம்
கல்வி தனியார் மயம்
மது அரசுமயம்
உருவமின்றியும்
தேசப்படுத்தியது வாழையை
காற்று
அன்றே அநீதி
ஆண்களுக்கு கை சிலம்பு
பெண்களுக்கு கால் சிலம்பு
இருப்புப் பாதையில்
இருப்பின்றி பயணம்
தொடர் பயணம்
கழிவுநீர் உறிஞ்சி
இளநீர் தரும்
உயர்ந்த தென்னை
யார் உயர் திணை
மோதி விழும் மனிதன்
கூடி வாழும் பறவைகள்
விளைவித்தன கேடு
கண்ணிற்கும் மனதிற்கும்
தொல்(ல்) லைக்காட்சிகள்
தரம் தாழ்ந்தால்
களையாகும்
கலை
மாடு செரிப்பதற்கும்
மனிதன் மகிழ்வதற்கும்
உதவிடும் அசைபோடுதல்
போராட்டம் நடிப்பு அரசியலில்
பேராட்டமே வாழ்க்கை
ஏழைகளுக்கு
கண்ணிற்கு குளிர்ச்சி
மனதிற்கு மகிழ்ச்சி
இயற்கை
மனம் வருந்துவதில்லை
மங்கையர் சூடாததற்கு
எருக்கம் பூக்கள்
*******************************************
Thanks: http://odumnathi.blogspot.com/2009/03/blog-post_628.html

கவிஞர் இரா .இரவி படைப்புகள் பிற இணையங்களில் | Eraeravi's Blog சொன்னது,
ஜனவரி 22, 2011 இல் 1:45 பிற்பகல்
[...] http://rammalar.wordpress.com/2009/03/28/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B9%E0%… [...]