![[kavikko.jpg]](http://1.bp.blogspot.com/_GkbItdgQDg0/SWaHhHBkVUI/AAAAAAAAAco/8QhMWGtKYbA/s1600/kavikko.jpg)
கவிக்கோ அப்துல் ரகுமான்
“வெற்றி பல கண்டு நான்
விருது பெற வரும் போது
வெகுமானம் என்ன
வேண்டும் எனக் கேட்டால்
அப்துல்
ரகுமானைத் தருக என்பேன்”
விருது பெற வரும் போது
வெகுமானம் என்ன
வேண்டும் எனக் கேட்டால்
அப்துல்
ரகுமானைத் தருக என்பேன்”
என்று கவிக்கோ அப்துல் ரகுமானைப் புகழ்ந்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு. கருணாநிதி.
நாவன்மையும், அறிவுக் கூர்மையும் படைத்த கவிக்கோ அவர்கள் 1973-ஆம் ஆண்டு மே மாதம் 12-ஆம் தேதியன்று திருச்சியில் நடந்த முதல் இஸ்லாமியத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு மேடையில் இறையருட் கவிமணியை இவ்வாறு புகழ்ந்தார்.
அருவிதாங் கேட்டாலும் அழகுயாழ் குழலென்னும்
கருவிதாங் கேட்டாலும் கானவானம் பாடிக்
குருவிதாங் கேட்டாலும் கூடி வந்து பாராட்டும்
திருவிதாங் கோட்டுச் செழும் புலவ! புகழ்பூத்த
பிறைப் பள்ளிக் கூடத்தில் பிஞ்சுப் பிறைகளை
நிறைநிலாவாய் உருவாக்கும் நீலவான் கரத்தாரே!
பாவெல்லாம் பரமனுக்கே படையலிட்டுத் தமிழகத்தார்
நாவெல்லாம் நாயகத்தை நடமாட விட்டவரே!
இறையருட் கவிமணியே! இவ்வரங்க நாதரே!
***************************
http://gafoorsahib.blogspot.com/2009/01/blog-post_469.html

ஆதித்தன் சொன்னது,
ஜனவரி 29, 2009 இல் 11:09 மு.பகல்
ஆகா! என்ன அற்புதமான கவி