உன் விழிகள் சொல்லுதே
ஓராயிர அர்த்தம்
அதில் ஒன்று சொல்லுமோ
இன்று எந்தன் பக்கம்
சில இதழ்கள் சொல்ல நினைத்ததை
அவர் இமைகள் சொல்லி முடிக்குமே
உன் இமைகள் மூடாதிருக்கவே
நான் இமயம் கூட தாண்டுவேன்
என் கனவு காணும் கண்களில்
கவிதை முளைப்பதில்லை
உன் கண்கள் பார்த்த நிமிடம்
நானும் கவிஞனாய் ஆனேனே…..
Posted by Ganesh Kumar
source:http://ganeshdreams.blogspot.com/
