ஓட்ஸோ ஓட்ஸ்!
காலையுணவாக ஓட்ஸ் சாப்பிடுவது என்பது ஒரு கொள்கையாகவே ஆகி வரும் இன்னாட்களில் ஓட்ஸ் தயரிப்பதில் சில முறைகளைத் தெரிவிப்பது நல்லதாயிருக்கும் எனத் தோன்றியதன் விளைவு இந்தப்பதிவு.
ஓட்ஸை அப்படியே தண்ணீரில் கொதிக்க வைத்து பால் சர்க்கரை சேர்த்துச் சாப்பிடுவதும் ,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் சர்க்கரை சேர்க்காமல் சாப்பிடுவதும் பழக்கமாக உள்ளது.
ஓட்ஸை மிக்சியில் பொட்டு நன்றாகப்பொடி செய்து விட்டு அதை கொதிக்கவைத்து சாப்பிடுவது கொஞசம் எளிமையாக இருக்கும். மொந்தையாக ஓட்ஸ் கூழ் ஆகாமல் இருக்க உதவும்.
ஓட்ஸை பொடி செய்து மொத்தமாக ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக்கொள்ளலாம்.
ஓட்ஸ் கூழ் தயாரித்த பின் அதில் மோர் விட்டு உப்பு போட்டும் சாப்பிடலாம். அல்லது அந்தக்கூழில் கொஞ்சம் ஒமம் போட்டு உப்பிட்டு சாப்பிட்டால் சிலருக்குப் பிடிக்கும்.
ஓட்ஸ் கூழ் தயரித்தபின் அதில் உப்பு செர்த்து காரட், சிறிது கோஸ் பொன்ற மெல்லிய காய்கறிகளை வதக்கிப்போட்டால் நல்ல காலையுணவு என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால் காய்கறிகள் அளவு கொஞ்சமாக இருக்க வெண்டும். நிறைய காய்கறிகள் போட்டால் இலேசாக இல்லாமல் heavy ஆக ஆகிவிடும்
