ஓடும் மேகங்களே

ஓடும் மேகங்களே.

user posted image

டும்
மேகங்களே கொஞ்சம்..நில்லு..நில்லு..
பாடும் எந்தன் குரல் ஓய்ந்தென்ன..
சொல்லுச்..சொல்லு..

நீந்தும் கண்களிரண்டும் நீராகிப்போனதின்
மாயம் என்ன
கூறு..கூறு..

உன்னைப்போல வெள்ளையுள்ளம்
எங்குமுண்டோ அறிந்து வந்து
சேதி சொல்லுச் சொல்லு..

அழுக்கான ஆயிரம் மனசுகளை
அறிவதெப்படி என்று
பார்த்து வந்து பாடமாய் எடுத்துச்சொல்லு..

நடப்பெதெல்லாம் நல்லபடியாக நடக்க
ஏதும் மார்க்கம் உண்டோ..
கூறு..கூறு..

என்னவோ மனசு உன்னை நினைக்குது..
உன்னைப்போல என்றும் வாழ
என்னை நினைக்குது..

என்னைப்போல யாரும் உன்னையும்..
ஓடஓட விரட்டினார்களோ..
உள்ளதைச் சொல்லிவிடு..

மனசொன்றுதான் மனிதனுக்கு துணையிருக்கும்..
மறந்து அதை வாழ்ந்தால்
வேதனைதான் நிறைந்திருக்கும்..

நில்லு நில்லு மேகங்களே..
எந்தன் சோகங்களை சுமந்து
நீயும் செல்லு.

This post has been edited by Thanimathy: Dec 16 2007, 05:40 AM

source:http://www.thamilworld.com/forum/index.php?showtopic=7845&st=0&start=0

மறுமொழியொன்றை வழங்குக