அசைந்தாடும் மயில் அழகு!

223

அசைந் தாடும் மயில் அழகு
ஆற் றோரம் மணல் அழகு
இசை பாடும் குயில் அழகு
ஈதல் என்ற குணம் அழகு
உலை கொதிக்கும் சோறழகு
ஊது குழல் ஒலி அழகு
எழுத் தாக்கும் சொல்லழகு
ஏங்கும் பொழுதில் அன்பழகு
ஐய மில்லா மனதழகு
ஒன்றி வாழும் உறவழகு
ஓங்கி நிற்கும் மரம் அழகு
ஒளவைப் பாட்டி அறிவழகு
அடடா உல கெத்தனை அழகு!

————————————–

நன்றி;

>கவிநயா



முட்டாள் எப்போது அறிவாளி ஆகிறான்?

அறிவாளி எப்போது முட்டாள் ஆகிறான்? முட்டாள் எப்போது
அறிவாளி ஆகிறான்?

அறிவாளி தன்னை அறிவாளி என்று நினைக்கிற போதெல்லாம்
முட்டாள் ஆகிறான்! முட்டாள் தன்னை முட்டாள் என்று
உணர்கிற போதெல்லாம் அறிவாளி ஆகிறான்!

———————————————————————————————

மதுவும் – மாதுவும் ஒன்றுதானே?

ஏதோ ஒன்றில் மயங்கியிருக்கிறீர்கள்… அதனால்தான் உங்களுக்கு
இரண்டும் ஒன்றாகத் தெரிகிறது. எனக்கு அப்படி இல்லை… எனக்கு
எல்லாமே இரண்டு இரண்டாகத் தெரிகிறது!

———————————————————————————————–
தென்கச்சி எந்த மாவட்டத்தில் இருக்கிறது? அந்த ஊரின் சிறப்பு
அம்சம் என்ன?

உங்கள் ஊர் (கேள்வி கேட்டவர் ஸ்ரீரங்கம்) எந்த மாவட்டத்தில்
இருக்கிறதோ அதே மாவட்டத்தில்தான் இருக்கிறது. அப்படியிருந்தும்
கூட அது இன்னும் உங்களுக்கு எட்டாமல் இருக்கிறதே அதுதான்
அதன் சிறப்பு அம்சம்!

———————————————————————————————

விதி என்பது என்ன? விளக்கம் தருக.

ஒருத்தன் ஒரு அம்மையாரை பார்த்து, “தாயே” என்றான்.
உடனே அந்த அம்மையார் இவனைப் பளாரென்று அறைந்து விட்டார்கள்!
என்ன காரணம்?

இவன் ‘தாயே’ என்று அழைத்தது அந்த அம்மையார் காதில் ‘நாயே’
என்று விழுந்து விட்டது!
இதற்கு என்ன விளக்கம்? விதி! அவ்வளவுதான்!

——————————————————————-

நன்றி;

தென்கச்சி பதில்கள்

———————————————————————————

குறில் & நெடில் (சிறுவர் பாடல்)

அ…இ. . .குறில்;-

——————————————-

அன்பை என்றும் போற்றி

இனிய தமிழைக் கற்றிடு

உண்மை பேசி உயர்ந்திடு

எண்ணம் உயர்வு கொண்டிரு

ஒன்று சேரந்து வாழ்ந்திடு!

—————————————————–

The story of Tamil poet auvaiyaar, K.B. Sundarambal as auvaiyaar in S.S. Vasan's Tamil film auvaiyaar

ஆ. . .ஈ…நெடில்;-

———————-

ஆடிப்பாடி மகிழ்ந்திடு

ஈகைப் பண்பை வளர்த்திடு

ஊரின் நலத்தை விரும்பிடு

ஏற்றம் பெற்று சிறந்திடு

ஐயம் நீங்க கற்றிடு

ஓதி எதையும் தெளிந்திடு

ஒளவை சொல்லைப் போற்றிடு!

—————————————————–

>வெற்றிச் செல்வன்

நன்றி; இளந்தளிர் (கவிதை தொகுப்பு)

மோதிரம் மாத்திக்க மறுத்தவள்!

“நாம ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயி மோதிரம் மாத்திக்கலாமா?”

“வேண்டாம்”

“ஏ‎ன்?”

“எ‎ன் மோதிரம் நாலு கிராம்; உன் மோதிரம் ரெண்டு கிராம்தானே!!”

———————————————————————————————

“டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல ‏இருக்கு.”

“அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு
இருக்கோம்?”

———————————————————————————————

“நம்ம காதலை வீட்டுல மெதுவாப் பேசி ஆரம்பிச்சி வச்சிட்டே‎ன்!”

“அப்படியா! அதுக்கு எ‎ன்ன ரெஸ்பா‎ன்ஸ்?”

“மெதுவா சொன்னதால அது யார் காதிலயும் விழல..
நா‎ன் இப்ப என்ன செய்ய..?”

———————————————————————————————-

நாம பெரிய ஆளா வரணும்னா ஏற்கெனவே பெரிய ஆளா‏ இருக்கறவங்க
கூட கை கோர்த்துக்கணுமாம்.

“அப்படியா! வித் ப்ளெஷர்! நீ எ‎ன் கூட கை கோர்த்துக்கறதுல
எனக்கு எந்த ஆட்சேப‎னையும் இல்ல..!”

——————————————————————————————-

“நான் சீசனுக்கு சீசன் வியாபாரத்தை மாத்திடுவேன்”

“இப்போ என்ன வியாபாரம் பண்றே?”

“செருப்பு வியாபாரம். நல்லா சேல்ஸ் ஆகுது. முக்கியமா பிரஸ்
மீட் நடக்குற இடங்கள்ல..!!”

———————————–

ஐஸ்வர்யா ராய். . .

பல நூற்றாண்டுகள் ஆகுமாமே
ஒரு வைரம் உருவாக
நீ மட்டும் எப்படி
பத்து மாதத்தில்!
——————————-
கவிதை உபயம் : தபூசங்கர்

இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி திருமணம்!

 

shilpa and raj getting engaged

/photo.cms?msid=5268597
Shilpha Shetty ties the knot with Raj Kundra

——————————————————————————————————

பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டி (34 வயது), 29 வயதான லண்டன்

வாழ்

இந்திய தொழில் அதிபரான ராஜ் குந்த்ராவை மணந்தார்

யார் அவள்? – க‌விதை

திடீரெனப் பெய்த மழையில்
நான் நனைந்து வீடு திரும்பிய போது …

“குடை எடுத்துக் கொண்டு
போனால் கௌரவக் குறைச்சலோ?” இது அப்பா!

“ஒரு ஓட்டம் எடுத்திருந்தால்
முன்னமே வந்திருக்கலாம்” இது அண்ணன்!

“எங்காவது ஒதுங்கி விட்டு பின்னர்
வந்திட புத்தி இல்லையே” இது அக்கா!

“பாழாய்ப் போன மழை சிறிது நேரம்
கழித்து வந்திருக்கக் கூடாதா?” இது அவள்!

தேர்வில் மதிப்பெண் குறைவாக
வாங்கி வீடு திரும்பிய போது …

“சரியாகப் படித்தால் தானே” இது அப்பா!

“நான் கொடுத்த குறிப்புக்களை
சட்டை செய்தால்தானே” இது அண்ணன்!

“வகுப்பில் கவனம் காட்டாவிட்டால் ..”
இது அக்கா!

“உம்… சற்று சுலபமாய் கேட்டிருக்கலாம்”
இது அவள்!

சாலையில் சைக்கிள் இடித்து சிறு
காயத்துடன் வீடு திரும்பிய போது …

“ பராக்கு பார்த்து நடந்தால்…. “
இது அப்பா!

“பஸ் ஸ்டாப்பில் குமரிகளை நோட்டம் விட்டுக்
கொண்டே நடந்தால் வேறு என்ன நடக்கும்?”
இது அண்ணன்!

“சைக்கிளுக்குப் பதில் காரோ, லாரியால்
இருந்திருந்தால் என்னா யிருக்கும்?”
இது அக்கா!

“சைக்கிள் ஓட்டியவனுக்கு கவனம்
வேண்டாம்! கண் எங்கே போச்சோ?”
இது அவள்!

எந்த இடரிலும், எந்தச் சூழ்நிலையிலும்
மற்றவர் என்னிடமே குறை கண்டிட,
அவள் மட்டுமே மற்றவரை கண்டித்தாள்!

ஏனெனில் அவள்……..
என் தாய்!

============================

- திரு உறையோன்

நன்றி; http://tamilmurasu.com.sg/node/4603

நிவாரணம் தரும் அவள் விழி!

உற்றுப் பார்த்தேன்

அவள் விழியில் வானவில்

அவஸ்தையும் தரும்

நிவாரணமும் தரும்

அவள் விழி!

——————————-

(படித்ததில் பிடித்தது)

நேஷனல் ஜியாகிரஃபிக் புகைப்படப் போட்டி

n19_00000019

உலகின் பிரபலமான புகைப்படப் போட்டிகளில் ஒன்று வருடந்தோறும்
நேஷனல் ஜியாகிரஃபிக் நிறுவனம் நடத்தும் புகைப்படப்போட்டி.

ஆரம்பநிலை ஆர்வலர்களிலிருந்து தேர்ந்த கலைஞர்கள் வரை பங்குபெறும்
இப்போட்டிக்கு உலகெங்கிலுமிருந்து புகைப்படங்கள் வந்து குவிகின்றன.

அப்படிக் குவிந்த புகைப்படங்களிலிருந்து சில நல்ல புகைப்படங்களை
பாஸ்டன்.காம் சேகரித்து வெளியிட்டிருக்கிறது.
———————————————————–
நன்றி;
http://solvanam.com/?p=4603.
மாதமிருமுறை வெளிவரும் இணைய இதழ்

வெட்கமில்லை உள்ளாடையுடன். . .

இரவுக் கதைகள்

பஞ்சம்

தாத்தா-பாட்டி மரணம்!

———————————————

விளைச்சல் நிலத்தில்

விளைந்தன

வீடுகள்!

———————————————-

கொஞ்சம் கூட வெட்கமில்லை

உள்ளாடையுடன்

ஜவுளிக்கடை பொம்மை!

——————————————-

மூக்கணாங்கயிறு

கழுத்தில்!

மஞ்சள் பூசி

—————————————————————-

>எம்.பி.புதியவன்

நன்றி; தீக்கதிர்(வண்ணக்கதிர் 22-11-09)

ஏக்கம்

« பழைய வரவுகள்