அடுத்த வாரிசு!

ஆண் குழந்தை இல்லையென்றால்

அம்மா வீட்டிலேயே இருந்து விடு

மாமியாரின்

கடுமையான உத்தரவு

-

ஆஸ்திக்கு ஒரு ஆண் வாரிசு

கணவனின்

அன்பான கண்டிப்பு

-

ஆணென்றால் பிரசவ வலி இல்லையோ!

ஆஸ்திக்கு ஆண்தான் தேவையோ!

பெண் – கொள்ளி இட்டால்

பிணம் வேகாதோ?

சொத்தில் பங்கு கொடுத்தால்

குலமே விளங்காயோ?

-

அனைவரும் ஆண்குழந்தை

பெற்று விட்டால்

அடுத்த வாரிசை யார்

பெற்றுத் தருவார்?

அன்பிற்கும் ஆசைக்கும்

எங்கே போவார்?

-

பெண்களால் அல்லவோ

உயிர்கள் ஜனிக்கின்றன,

உலகமும் நிலைக்கிறது!

-

>கவிதாயின் கலாவிசு

வாழ்வில் இனிமை !

சிந்தனையின் சாறல்கள்

வார்தையில் வடிவமாகும் போது

கவிதையாகிறது!

-

வர்ணங்களின் சிதறல்கள்

தூரிகையில் நிலைக்கும் போது

ஓவியமாகிறது!

-

பாவங்களின் ஆலாபனைகள்

ராகத்தில் இணையும் போது

சங்கீதமாகிறது!

-

சலங்கையின் ஒலிகள்

பாதங்களில் இசைக்கும் போது

நாட்டியமாகின்றது!

-

இவையாவும்-

மனிதவாழ்க்கையை

மென்மையாக்குகின்றன!

சோகங்களிலிருந்து மீட்டு

இனிமை சேர்க்கின்றன!

மனிதனின் ரணங்கைளத்

துடைத்து எறிகின்றன!

அதனாலேயே இன்றும்

அவை நிலைக்கின்றன!

——————————————————————

>கவிதாயினி கலாவிசு

நன்றி; கவிதையே விடியலாய்…(கவிதைகள்)

திருட்டு சிடி வந்த நாள்!

எங்க ஆபிஸ் மானேஜரை என் அண்ணனாகத்தான்

நினைச்சேன், ஆனால்…

அவர் லட்டர் கொடுத்திட்டாரா?

இல்லை, என் அப்பாவின் சொத்தில் அவருக்கும்

பங்கு வேணும்னு வக்கீல் நோட்டீஸ் விட்டிருக்கார்!

————————————————————————

ஒரே படத்திற்கு 75 வது நாள், 50 வது நாள்-னு

ரெண்டுவிதமா போஸ்டர் ஒட்டியிருக்காங்களே

ஏன்?

ஒன்னு திருட்டு சிடி வந்த நாள், மற்றது

படம் வந்தநாள்!

——————————————————————-

சின்னதா பிஸினஸ் தொடங்கி, இப்ப பெரிய

அளவுக்கு கொண்டு வந்திட்டேன்!

அப்படி என்ன வியாபாரம் செய்யறீங்க?

கடுகு வியாபாரத்தில் ஆரம்பிச்சு, இப்ப

பூசணிக்காய் வியாபாரம் பண்றேன்!

————————————————————

தலலவர் ஏன் திடீர்னு பொதுக்கூட்டமே

வேண்டாம்னு சொல்றாரு?

ஒரு மனுஷன் எவ்வளவு நாளைக்குத்தான்

தனியா புலம்புவாராம்!

===================================

நன்றி; தேவி வார இதழ் 10-2-10

உப்பு மூட்டை தூக்கச் சொல்லும் நடிகைகள்!

மன்னருக்குப் போர் பயம் வந்தால்

திக்…திக்கென்று மனது அடிக்கும்!

மனது அடித்தால்?

பெக்…பெக்கா அடிக்க ஆரம்பிச்சுடுவாரு!

——————————————————-

எங்கம்மாவை எதிர்த்துப் பேசினியாமே

ஏன்?

நல்ல நாள் அதுவுமா அடிச்சுப் பேசினா

நல்லாவா இருக்கும், அதான்!

———————————————————————

நம்ம தொகுதிக்கு இடைத் தேர்தல் கூடிய

சீக்கிரம் வரும்-னு எதை வெச்சு சொல்றே?

நம்ம ஊர் ஜோஸ்யர், நிறைய பேர்கிட்டே

தீடீர் தனவரவு இருக்கும்னு சொன்னாரே!

———————————————————-

தூங்கி எழந்திரிச்சா ஒரே முதுகு வலி

டாக்டர்!

எதுக்கு?

கனவுல வர்ற எல்லா நடிகைகளும் உப்பு

மூட்டை தூக்கச் சொல்றாங்களே!

————————————————

புடவையை துவைத்தவுடன் நின்று விடாமல்

அதை அயர்ன் பண்ணியும் வச்சுடுவார் என்

வீட்டுக்காரர்!

அதான் உன் வீட்டு வேலைக்காரியும் மடிப்புக்

கலையாமல் புடவை கட்டுகிறாளா?

===================================

நன்றி; தேவி வார இதழ் 10-2-10

கவிதைப் பூக்கள் ஐந்து

ஐந்து கவிதைப் பூக்களின் கதம்பம் இது.

****

கம்பம் தேடி
காலை உயர்த்துகிறது
தெரு நாய்

================================

மாதுளையை உடைக்கையில்
உருண்டு ஓடுகின்றன
முத்துகள்

================================

மொட்டை மாடி
மின்சாரம் மறைய
ஒளிருகின்றன நட்சத்திரங்கள்

================================

கவிதையின் விசுவாசம்
—————————-
யாரிடமிருந்தோ தோன்றிய கவிதைகள்
காற்றில் மிதந்து சேருகின்றன
எழுதுபவனை தேடி!

எழுதியவனோ எனது என்கிறான்
மறுத்துபேச வேண்டிய கவிதையோ
மௌனம் காக்கிறது

எழுதப்பட்டதற்கான நன்றியுடன்!

================================

மொட்டை வெட்கம்
————————
உடல் நலமில்லா கணவனுக்காக
ஊர் மாரியம்மனுக்கு முடி கொடுத்தை
பெருமையாக பேசினாள் என் தோழி

அவள் குழந்தையோ
முந்தானைக்குள் ஒளிந்துகொண்டது
மொட்டையை காட்ட வெட்கப்பட்டு!

================================
நன்றி;

பதிவர் : ஜெகதீஸ்வரன் .

தன்னம்பிக்கை !

வாழுகின்ற காலங்களின்
உண்மையே -
வாழ்ந்த காலங்களின்
இனிமை!

தொலைந்த நினைவின்
இனிமையே
தொடரும் பயணத்தில்
சுகம்!
-
நிலையான பூமியில்
நிலையில்லா வாழ்க்கையில்
உழலுகின்ற மனிதா!

இனிமையை
உன் உள்ளே தேடு!
அன்பை வாரி வழங்கு!

-

துணிந்தவரிடம் துக்கங்கள்
தொலைந்து போகும்
விவேகம் பெற்றவனிடம் – வெற்றிகள்
மாலை சூடும்!

-

தன்னம்பிக்கையில்
நிமிர்ந்து நின்றால் -
கொட்டும் மழையிலும்
உப்பு விற்கலாம்
சூறைக் காற்றிலும்
பஞ்சு விற்கலாம்!

===========================
>கவிதாயினி கலாவிசு

மனதின் உறுதி!

முடியாது என்பது முயலாத வரை…
இயலாது என்பது …
இல்லை என்றாகும் வரை!
முடியும் எனச் சொல்லிப் பார்
சாதிப்பேன் என உறுதிகொள்!

-

உன் நம்பிக்கையே
தைரியத்திற்கு பாதை அமைக்கும்
தைரியமோ … மனதிற்கு
உறுதியை தந்து வைக்கும்!

-

உறுதியான சிந்தனை
உலகத்தை வளைத்து வைக்கும்
உலகத்தின் சுழற்சியும்
உனக்காக மாறி நிற்கும்!

========================
>கவிதாயினி கலாவிசு

பாரதியின் வீடு

பாரதியின் வீட்டில் நான்
மெல்ல மெல்ல
ஒவ்வொரு அடியாக…
பாரதி நடந்த இடமல்லவா?
நிமிர்ந்து பார்த்தால்…
-
சுவரெல்லாம் நிழற்படங்கள்
ஒவ்வொன்றும்
ஓராயிரம் கதைகள் பேசின

தொட்டுப் பார்த்தேன்
தடவிப் பார்த்தேன்
இதயம் விம்மியது
கண்ணீர் தளும்பியது!
-
கம்பீரமாய் பாரதியார் நின்றபடி
வெட்கமாய் செல்லம்மா அமர்ந்தபடி
என்ன அழகு?
-
வரிசையாக நகர்ந்த
கண்களில் அதிர்ச்சி j
செல்லம்மாவின் தலை மழிக்கப்பட்டு!?
வெள்ளை ஆடை தரிக்கப்பட்டு!?
-
என்ன கொடுமை?
திரண்ட கண்ணீர்- உருண்டு
பூமியில் விழுந்தது
பாரதியின் பூமியில்
செல்லம்மாவின் இதயத்தில்!

===========================================
>கவிதாயினி கலாவிசு
நன்றி; கவிதையே விடியலாய்…(கவிதை தொகுதி)
மணிமேகலைப் பிரசுரம்

கடமையை செய்யாமல் விட்டால்…

செய்யாமல் விட்டுள்ள ஒவ்வொரு கடமையும்

புதிதாக ஏழு கடமைகளுடன் திரும்ப வரும்!

>சார்லஸ் இங்ஸ்லே

-

நம்பிக்கையைப் பெருக்கக் கூடியது எதுவும்

தைரியத்தையும் உயர்த்தும்

>ஜான்சன்

-

புகழ் நெருப்பைப் போன்றது

அதை மூட்டி விட்டால் பிறகு காப்பது எளிது

ஆனால், அதை மூட்டுவது கடினம்

>பேக்கன்

-

பொறுமையுள்ளவனுக்கு அவன் விரும்பியதெல்லாம்

கிடைக்கும்

>பிராங்க்ளின்

-

பணம் நல்ல பணியாள்

ஆனால் மோசமான எசமானன்

==================================.

கடன் – (கவிதை)

அவசியமாயினும்

வாங்காதிரு…

அனாவசியமெனில்

வாங்கித் தவி!

-

கடன் பட்டானுக்கு

உடன் பிறந்தானும்

உதவான்!

-

சேமித்தவனுக்கு

நிம்மதியும்

சேமிக்காதவனுக்கு

கடனுமே

சொத்து!

-

அட்டைகள்

ரத்தத்தை உறிஞ்சும்

கடனட்டைகள்

உயிரை…

-

எமனை விட

கெட்டிக்காரன்

கடன்காரன்தான்!

-

சொந்த வீட்டுக்

கடனாளியை விட

வாடகை வீட்டு

முதலாளியாயிருக்கலாம்!

-

புகழோடிருப்பதை விட

கடனற்று

இறப்பதே மேல்!

-

கடவுளே தந்தாலும்

கடன் வாங்காதீர்

கஷ்டத்தில் உழலாதீர்!

—————————————————

>ச.பிரசன்னா, சென்னை

நன்றி; தினமலர்,வாரமலர்-31-1-10

« பழைய வரவுகள்