கடவுளின் அவதாரங்கள்

மருத்துவர்கள்
கடவுளின் அவதாரங்கள்

ஆம்
சில நேரங்களில்
பிரம்மனாகவும்,

சில நேரங்களில்
எமனாகவும் இருக்கிறார்கள்

‘இனி
கடவுளாலும் காப்பாற்ற முடியாது
சொந்தங்களுக்கு சொல்லி விடுங்கள்
என்று ‘
கைவிடப்பட்டவர்களைக் கூட
காப்பாற்றிய மருத்துவர்களும் உண்டு
-
இடுப்பு வலிக்காரனுக்கு
இதய அறுவை சிகிச்சை செய்து
அவன்
இயக்கதையே
நிறுத்தியவர்களும் உண்டு
-
உணவிற்கு பதிலாக
மாத்திரையை மட்டுமே
கொடுப்பவர்களும் உண்டு
-
உணவையே மருந்தாக
பயன்படுத்தும்
சூட்சுமம்
சொல்லித் தந்தவர்களும் உண்டு
-

பூவில் தேனெடுப்பது போல்
சிசேரியன் செய்பவர்களும் உண்டு
மறதியால்
சிசரை
வயிற்றுக்குள்
வைத்து தையல்
போட்டுவிடுபவர்களும் உண்டு
-
பிணத்தை
பிழைக்க வைப்பவர்களும் உண்டு
பிணத்துக்கே வைத்தியம் பார்த்து
பணம் கேட்பவர்களும் உண்டு

-
நிற்க முடியாதவனை
ஓட  வைத்தவர்களும் உண்டு
ஓடி விளையாடியவனை
உறங்க வைத்தவர்களும் உண்டு
-
மொத்தத்தில்
மருதுவர்கள்
கடவுளின் அவதாரங்களை
-
நாத்திகர்கள் கூட
இதை
நம்பித்தான் ஆக வேண்டும்
-

===================================
>கனேஷ் பாபு
நன்றி: ஹெல்த் & பியூட்டி, மார்ச் 2011

இறை ஏற்பும் இறை மறுப்பும்

ஒரு கல் யானை, நான்கு குருடர்கள் அதை தடவி பார்க்கிறார்கள்,

ஒவ்வொருவருக்கு தட்டுப்படுவதை (கால், காது, வயிறு, வால்) வைத்த
தூண், முறம், சுவர், சாட்டை என்று சொல்கிறார்கள்,

இவர்கள் ஒவ்வொருவரும் ஐந்தாவது ஒரு குருடரிடம் தான் சொல்வதே
உண்மை என்கிறார்கள்,

அந்த ஐந்தாவது நபர் இவர்கள் சொல்வதை நம்பாமல் அவரும் அவர்கள்
தொட்டுக் காட்டும் இடங்களைத் தடவிப் பார்க்கிறார், மேடுபள்ளமான
கல்லு தான் வேற ஒன்றும் இல்லை என்று அவர்களை பழிக்கிறார்.
கல் யானை (அசையாமல்) நின்று கொண்டு இருக்கிறது.

நான்கு குருடர்கள் ஆத்திகர்கள்
(அவரவர் மத நம்பிக்கையாளர்கள்),

ஐந்தாவது குருடன் நாத்திகன். எது உண்மை ?

இறை ஏற்பும் இறை மறுப்பும்
அவரவர் பார்வையில் தாம் சொல்வதே உண்மை என்று
சொல்லிக் கொண்டு
அங்கேயே நின்று கொண்டு இருக்கிறது
-
==================================================
படித்ததில் பிடித்தது)

நான்தானே அந்த ஆள்…!

 

 

-
பிரபல ஆங்கில வைத்தியர் ஒருவரிடம் வந்த நோயாளி,
‘எனக்கு மனது சரியில்லை, தூக்கமே வருவதில்லை,
தற்கொலை பண்ணிக்கொள்ள வேண்டும் போல் இருக்கிறது’
என்றார்
-
அவரைப் பரிசோதித்த டாக்டர், ‘நீங்கள் ஏதாவது வேடிக்கை
பார்த்தால் நல்லது. க்ரிமால்டி என்ற நகைச்சுவை நடிகர்
எங்காவது நடிக்கப் போகும்போது போய்ப்பாருங்கள்.
அதுதான் நல்லது, வேறு எந்த மருந்து கொடுத்தாலும் கேட்காது’
என்றார்.
-
அதற்கு அந்த ஆசாமி, ‘ஐயோ! நான்தானே ஐயா அந்த
க்ரிமால்டி’ என்றார்..!
-
===================================================

சமாதானம் ஆகி விட்டார்கள்..!

-
மனைவி : (ஒரு சண்டை முடிவில்)
நீங்கள் எனக்கு கொடுத்ததையெல்லாம் திருப்பிக் கொடுத்து
விடுகிறேன்..!
-
கணவன்: முத்தங்களில் தொடங்கி விடு..!


(இருவரும் சமாதானம் ஆகி விட்டார்கள்..!)

மறந்த காரணம்

-


இந்தாங்க, இன்றைக்குச் சம்பள உயர்வு கேட்டுட்டு வாங்க’
என்று சொல்லி கணவனை ஒரு நாள் ஆபிசுக்கு அனுப்பினாள்
மனைவி.
-
அன்று மாலை அவன் வீட்டுக்கு வந்ததும் மிகுந்த பயத்துடன்
மனைவியிடம் சொன்னான். ‘இன்று நான் சம்பள உயர்வு
கேட்க மறந்து விட்டேன், ஏனென்றால் என் உத்தியோகம்
போன பரபரப்பில் மூளை சரியாக வேலை செய்யவில்லை..!’

-
-
============================================

எப்படியும் சாகப்போவதுதானே…?


-


 


ஓர் ஆசிரியர் , தாய் சொல்லைக் கேளாமல் தனியாகச்
சென்று ஓர் ஓநாயினால் கொல்லப்பட்ட ஆட்டுக்குட்டியின்
கதை ஒன்றைச் சொன்னார். பிறகு மாணவர்களைப் பார்த்து
”ஆட்டுக்குட்டி, தாய் சொல்லைக் கேட்டு ஒழுங்காக
இருந்திருந்தால் ஓநாய்க்கு இரையாகியிருக்காது அல்லவா?
என்று நீதியையும் போதித்தார்.
-
உடனே ஒரு மாணவன், ‘இல்லை சார். பிறகு அது எப்படியும்
நமக்கு இரையாகி இருக்கும்’ என்றான்
-
==================================================

நரியின் உபதேசம்…!

-
1. நரி உபதேசம் பண்ணத் தொடங்கினால், உன் கோழிகளைக் கவனி!
- அல்பேனியா.

2. அறிவு தலைக்கு கிரீடம்; அடக்கம் காலுக்குச் செருப்பு!
-ஹீப்ரு.

3. பக்தியோடு பிரார்த்தனை செய்; ஆனால் சுத்தியலை பலமாய் அடி!
- இங்கிலாந்து.

4. உன் அயலானை நேசி, ஆனால் வேலியை எடுத்து விடாதே!
- டென்மார்க்.

5. அறிஞர்கள் கூட்டம் ஓர் உயிருள்ள வாசகசாலை!
- அரேபியா.


-தொகுப்பு:
குலசை நஜ்முதீன்.
நன்றி: சிறுவர்மணி

கடன் வாங்குவதின் அழகு…

அதிர்ஷ்டசாலிக்குச் சேவல் கூட முட்டையிடும்!
- கிரீஸ்.

நல்ல மனச்சாட்சி கடவுளின் குரல்!
- எஸ்தோனியா.

கத்தி சாணைக்கல்லைத் தின்கிறது; சாணைக்கல் கத்தியைத் தின்கிறது!
- ஆப்ரிக்கா.

கடன் வாங்குவதின் அழகு அதனைத் திருப்பிக் கொடுப்பதில் இருக்கிறது!
- ரஷ்யா.

ஒரு நல்ல நண்பன் நூறு இனத்தார்களுக்குச் சமம்!
- பிரான்ஸ்.

நடிகை அசின் – உடல் மெலிய காரணம்…!

asin1_010

-

-

-

அசின், இந்தி நடிகைகள் போல் மெலிவதற்கு விசேஷ பயிற்சிகள்
எடுத்து மெலிந்து பழைய வசீகரத்தை இழந்து விட்டார் என்று
பாலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
நான் உடல் மெலிந்ததற்கு காரணம் இருக்கிறது, அதை விரைவில்
அறிவிப்பேன் என்று அசின் கூறியுள்ளாராம்

யாருமற்ற வீடு

கூரையென்று

யாரின் படமோ

ரசம் போன

ஒரு கண்ணாடியோ

நாட்காட்டியோ

தொங்கியிருக்கலாம்

அறையப்பட்ட ஆணிகளில்

-

வெளவால்களோ

எட்டுக்கால் பூச்சிகளோ

எதுவும் இங்கில்லை

யாரோ வைத்த

பறவைகளற்ற

புங்கமரமும்

என்றோ கட்டப்பட்ட

இற்ற கொடிக்கயிறும்

இருக்கின்றன

-

இன்னும்

சமையலறைப்

புகைக்கருப்பும்

மோர்க்காரியின்

புள்ளிக்கணக்கும்

எஞ்சிய நிழலாய்

வீடுகள்

சொந்தமாக இருக்கட்டும்

வாடகைக்கு இருக்கட்டும்.

ஒருநாளும்

பறவைகளாலோ

மனிதர்களாலோ

நிராகரிக்கப்படாது

இருக்கட்டும் கடவுளே

-

================================

>சுந்தர்ஜி

நன்றி: கல்கி

« பழைய வரவுகள்

Follow

Get every new post delivered to your Inbox.

Join 50 other followers